Wednesday, April 18, 2012

விளையாடுவோம் வாருங்கள் -12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

மரக்குரங்கு
('கொம்பரசன் குழையரசன்')

விளையாட்டின் பெயர்  : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் விளையாட்டு மரக்குரங்கு என்பதாம். இது பாண்டி நாட்டில் 'கொம்பரசன் குழையரசன்' எனஅழைக்க படுகிறது.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

விளையாடும் முறை: : விளையாடுபாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக் கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக் காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். 

பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தி னின்றும் குதித்து வட்டத்திற்குள் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி
ஆட்டங் காட்டுவர். வட்டத்திற் குட்போய் நிற்கு முன் யாரேனும் தொடப் பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். 

மரக்கிளைகளிலிருக்கும்போது 'கொம்பரசன் குழையரசன்' என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக் கொள்வர்.

விளையாட்டின் தோற்றம்  : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.

விளையாட்டின் பயன்  : மரமேறப் பயிலுதல் இவ் வாட்டின் பயனாம்.

                                                                                                         தொடரும் .....................

1 comment:

  1. புது விளையாட்டாவுல இருக்கு..

    ReplyDelete