Monday, April 9, 2012

நாம் யார் -45

பாகம்-44 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தமிழகம் வரவரக் குன்றியமை

ஒரு காலத்தில், முழுகிப் போன தமிழ் நாடாகிய பழம் பாண்டி நாடும் நாவலந் தீவு என்னும் இந்தியா தேசமும் தமிழகமாயிருந்தன. பழம் பாண்டி நாடு மூழ்கிய பின், விந்தியமலைக்கு வடக்கிலுள்ள நிலப்பகுதி பிராகிருதம் என்னும் வடநாடாகி, ஆரியர் வந்தபின் ஆரியாவர்த்தம் என்னும் ஆரிய நாடாக மாறிற்று.

அதன் பின், குசராத்தி மராட்டியம் ஒட்டாரம் (ஒரிசா) ஆகிய நாடுகள், முன்பு திரவிடமாக மாறிப் பின்பு ஆரியமாகத் திரிந்தன.

அதன்பின், வடுகம் என்னும் தெலுங்கநாடும் பின்னர்க் கன்னட நாடும் மாறின. கன்னடநாடு 7ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடாகக் கருதப்பட்டது. அதனால், வட கன்னடத்திலுள்ள கோகர்ணம் அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரின் தேவாரப்பாடல் பெற்றது. அம் மட்டத்திற் கீழ்கரை வரையுள்ள இற்றைத் தெலுங்கு நிலமும், அன்று தமிழ் நிலமாயிருந்தது.

கன்னட நாடு தோன்றியபின், தெலுங்க நாட்டின் தென் எல்லை அல்லது தமிழகத்தின் வடஎல்லை, சற்றுத் தெற்கே தள்ளி வந்தது.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்,மூவேந்தர் தமிழ்நாடு களுள் ஒன்றான சேரநாடு, கேரளநாடு அல்லது மலையாள நாடு என்னும் நாடாகப் பிரிந்து விட்டது.

எஞ்சிய சோழ பாண்டிநாட்டு நிலப்பரப்பே, இன்று தமிழ்நாடும் புதுவை நாடுமாகப் பிரிந்த தமிழகமாக இருந்து வருகின்றது.

இதிலும் சில வட்டங்களைக் (கூற்றங்களைக்) கன்னடர் சுறண்டப் பார்க் கின்றனர்.

தமிழ்த் திரிபினாலேயே, தமிழர் பல்வேறு சிற்றினங்களாக மாறினர்; பல்வேறு நாடுகளும் தோன்றின. அதனால் தமிழகமும் வரவரக்குறுகிற்று. இனிமேலுங் குறுகாவாறு, செந்தமிழ்நடையைப் போற்றிக்காத்தல் வேண்டும்.

ஆரிய நச்சுத்தன்மை இன்னும் அறாமை

மறைமலையடிகள் தனித் தமிழ்க்கிளர்ச்சி தொடங்கிய 1916ஆம் ஆண்டி லிருந்து, வடசொல் வழக்கிற்கு எத்தனையோ வகையில் எதிர்ப்பிருந்து வந்தும், இன்னும் ஆரியர் ஒல்லும் வகையிற் செல்லும் வாயெல்லாம் வடசொல்லைப் புகுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர்.

சேலங் கல்லூரி மேனாள் முதல்வர் பேரா.அச்சுத நாயர் (எம்.ஏ.) மலையாள நாட்டிற்பூங்குன்னம் என்னும் ஊரிலிருந்தபோது, அவ்வூர்ப்பிராமணர், அவ்வூர்ப் பெயரை புஷ்பகிரி என்று மாற்ற நெடுநாட் பெருமுயற்சி செய்து, இறுதியிற் பேரா.அச்சுத நாயரின் துணை வேண்டினர். அதற்கு அவர் இசையாத தால், அப் பெயர் மாற்றம் நிகழ வில்லை.

ஆங்கிலக் கல்வி

தமிழுக்கு நெருக்கமாயும் அறிவியல் இலக்கியப் பெட்டகமாயும் அமைப்பிலும் வழக்கிலும் உலகப் பொது மொழியாயும் உள்ள ஆங்கிலம், தமிழர் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும் கல்வி வாயிலாயிருத்தல் வேண்டும். தமிழ் வாயிற் கல்வியால் தமிழ்ப்பற்று வந்து விடாது;ஆங்கிலவாயிற் கல்வியால் தமிழ்ப்பற்றுப் போய்விடாது. தமிழ் வாயிற் கல்வியே தமிழ்ப்பற்றைக் காட்டுமென்பது, ஆங்கிலர் மீது வெறுப்பும் ஆங்கில வறியாமையுங் கொண்ட அரசியற் கட்சித் தலைவராற் பரப்பப்பட்ட, குருட்டு மடக் கூற்றாகும்.இரசியரும் சப்பானியரும் போல் தமிழர் புதுப்புனைவாளராகும் வரை, ஆங்கிலவாயிற் கல்வி இருந்தே தீரல் வேண்டும். குளத்தொடு புலந்து குளியாமலும் கூவவொடு புலந்து குடியாமலும் போனவனுக்கு, கேடேயன்றி ஆக்கமில்லை.

தனித்தமிழ்

தமிழ் என்பது தனித்தமிழே. தனித்தமிழா லன்றிக் கலவைத் தமிழால் தமிழன் உயர்வடைய முடியாது. தமிழென்று பெயரிட்டுக் கலவைத்தமிழ் வழங்குபவன்,  அவலை நினைத்துக்கொண்டு உரலையிடிப்பவனே யாவன்.

ஆராய்ச்சியாளரைப் போற்றலும்(கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.D. நாயுடு) போன்ற புதுப்புனைவாளரை (inventors)ஊக்கலும்

செயற்கை மழை பொழிவிப்பு, கடல்நீரை நன்னீராக்கல், மண் ணினின்று நேரடியாக உணவுருவாக்கல், பாலையை மருதமாக்கல், கரடுகளையும் பாறைகளையும் தகர்த்து மனைநில மாக்கல், கதிரவன் வெம்மையைச் சமையற்குப் பயன்படுத்தல், நச்சுக்காய்கனிகளை நல்லனவாக்கல், கனிதரா மரஞ்செடி கொடிகளைக் கனிதரச் செய்தல்,வெப்பமானகாலத்திலும் இடத்திலும் குளிர்காற்று வீசுவித்தல், தீங்கு செய்யும் பூச்சிகளையும் ஊரிகளையும் அறவே தீர்த்தல், மருந்திலா நோய்கட்கு மருந்து காண்டல், உள்ளக் கருத்தைஅறிதல், இறந்தவனை எழுப்பல், பேரொலியைச் சிற்றொலியாக்கல், மூளையைத் திருத்தி மடயனைமதிஞனாக்கல், கூனுங் குருடும் ஊமுஞ் செவிடும் முதலிய எச்சப் பிறவிகளைச் சீர்ப்படுத்தல் முதலிய பல்வேறு அருஞ்செயல்களை, அறிவியற் பெருமதிஞரைக் கொண்டும் சூழ்ச்சியத் திறவோரைக் கொண்டும்ஆற்றுவித்தல்.

பல்கலைக்கழகங்களில்ஆராய்ச்சிப் பதவிகளில் இருக்கும் தமிழ்ப்பகைவரை அகற்றல்

பேரா. (P.T.)சீனிவாச ஐயங்காரும் பேரா. (V.R.)இராமச்சந்திர தீட்சிதரும் போல், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்று கொள்பவரையே, பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவராக அமர்த்துதல் வேண்டும்.

அறுவகை ஆராய்ச்சித் தகுதி:

பரந்த கல்வி, மதிநுட்பம், நடுவுநிலை,அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா.

இலவசக் கட்டாயத் தொடக்கக்கல்வி

துவக்கக் கல்வியால்தான்,தாழ்த்தப்பட்ட வகுப்புப் பொது மக்கட்கு நாகரிகமும் தன்மான வுணர்ச்சியும் துப்புரவும் உண்டாகும். அதனால் தீண்டாமை நீங்கித் தமிழின ஒற்றுமை ஏற்படும். ஒருசிலர் கல்வி கற்பதால் மட்டும் முன்னேற்றம் வந்து விடாது. பிற வகுப்பாரொடு குடியிருக்கவும் கடைத் தெருவிலிருந்து வணிகஞ்செய்யவும், கல்வியறிவும் துப்புரவும் ஒழுக்கமும் இன்றியமையாதன. இவ்வகை முயற்சியில் நாடார்குலத்தினரைப் பின்பற்றல் வேண்டும்.

பொதுத் தேர்தலில் தகுந்த தலைவரைத்தேர்ந்தெடுக்கவும், தமிழ்ப் பொத்தக வெளியீடுகள் பல்கவும், சிறந்த அறிஞரும் புதுப்புனைவாளரும் தோன்றவும், புலவர் போற்றப்படவும்,கட்டாயத் துவக்கக் கல்வி பெரிதுந் துணை செய்யும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்க்கு வேலையுங்கிடைக்கும்.

திராவிடர் யார் ?

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் , கேரளாவிலும் உள்ள தமிழ் குடிகளை திராவிடர்கள் .

தமிழர் யார்?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதே தமிழர் கொள்கை. தமிழைப் போற்று வாராயின், தமிழருக்கு மிக நெருக்கமான திரவிடர் மட்டுமன்றி, மராட்டியர் மார்வாடியர் முதலிய வடநாட்டாரும், ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல்நாட்டாரும் தமிழரே.

திராவிட நாடு ?

பழந்தமிழ் நாடே திராவிட நாடு ..

நாம் யார் - தமிழர் தான்                                                                                                            

No comments:

Post a Comment