Tuesday, January 31, 2012

புலி தேவனாக இருந்த பூலித்தேவன்-1


தமிழ் மண்ணை ஆண்டா மன்னர்களை மறக்க கூடாது , அவர்களின் எண்ணங்கள் , வீரம் , செயல்பாடுகள் , சிந்தனைகளையும் நாம் தெரிந்து கொண்டு ,இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அதை பயன்படித்தி கொள்ளவேண்டும்.

பாளையக்காரர் பூலி

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு (தென் தமிழகம் )72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்செவ்வல் பாளையம் ஆகும்.
 
நெற்செவ்வல் பாளையத்தை நெற்கட்டான் செவ்வல் (சங்கரன்கோவில் அருகே இருக்கிறது )என்னும் ஊரை  தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த ஒரு பாளையக்காரராவார் தான் பூலி தேவர்.

இவர்தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் , அன்று ஓன்று பட்ட இந்தியா வாக இல்லாவிட்டாலும்  ,`வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்டவர் பூலி.

பூலி யின் ஆரம்ப காலம்

 சித்திரபுத்திரத் தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் மகனாக  1-9-1715 ல் பிறந்தார் பூலித்தேவர்.

தாய் தந்தை இவருக்கு வாய்ந்த பெயர் 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். பிற்பாடு பூலித்தேவர் என சுருக்கமாக அழைக்க பட்டு , பின்னர் புலித்தேவர் என்றும் பெயர் பெற்றார்.

 சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று ,மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கியுள்ளார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி பெற்று இருக்கிறார்.

பதவியும் , குடும்பமும்

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

அவரின் வாழ்க்கைத் துணைவியாக  மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியாரை ஏற்று கொண்டார்,

பூலி-கயல்கண்ணி தம்பதிகளுக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்துள்ளனர்.

இறைத்தொண்டு

இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கி உள்ள பூலி . அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோயில்) உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்துள்ளார் , இதன் தாக்கம் தனது பதிவி காலத்தில் ,பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு  உள்ளார் .

தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில் (வைகோ பிறந்த ஊரான கலிங்கபட்டிக்கு அருகில் உள்ளது ) , வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதர கோவில்களுக்கு தொண்டு செய்துயுள்ளார்.
  
பூலியின் எதிர்ப்பு

மதுரை நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதை தடுக்கும் பொருட்டு  அனைத்து பாளையக்காரர்களும் ஓன்று திரட்டி பூலி எதிர்த்தார் , நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது.

 நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. இவர்களும் பாளையக்காரர்களிடம் கப்பம் கேட்க மறுபடியும் எதிர்த்தார் பூலி.

முகம்மதியர்கள் ஆட்சியில் ,ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்துள்ளனர்.

இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இதன் பின்

 ஆற்காடு நவாபு கப்பம் வசூலிக்க ஆங்கிலேயர்களின்  உதவியை நாடினான், இப்போது பூலி நேரடியாக ஆங்கிலேயர்களுடன் மோதலுக்கு தயாரானார்.

                                                  தொடரும்..............................

Monday, January 30, 2012

முல்லை பெரியாறு- பாகம் 35

பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தற்காலிக தீர்வு

முல்லை பெரியாறு அணை விவகார போராட்ட முழுவிவரம்  , நதி நீர் உருவாக்கம் ,அந்த பயணம் போன்றவையும்  , யாருக்கு எந்த அளவு பயன்படுகிறது எனவும் பார்த்தோம்.

கேரளாவின் வன்மம்

கேரளா உண்மையில் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை , மாறாக இருக்கும் அணையை உடைப்பதுதான் அவர்களின் நோக்கம்.

இந்த அணை உடைந்தால் இந்த நீர் நேராக இடுக்கி அணைக்கு போகும் அங்கே இருக்கும் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பது தவிர வேறு பயன் எதுவும் கிடையாது .

நீதிமன்ற தீர்ப்பு

ஏற்கனவே சொன்ன தீர்ப்பை மதிக்காத கேரளா இனி வரபோகும் தீர்ப்பை ஏற்கவா போகிறது என சந்தேகம் இருக்கிறது , மேலும் அதை வைத்து புதிய வழக்கு தொடுக்காமல இருந்தேலே பெரிய விஷயம் தான்

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என பார்த்தால் முழுக்க முழுக்க தமிழகம் பக்கம்தான் உண்மை உள்ளது தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும்.இப்போது  நாம் நீதி மன்றத்தை நம்பியே இருக்கிறோம்


இப்போதைய  நமக்கு தேவை

நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக இரு மாநிலங்களும் ஏற்க மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்

தீர்ப்பிற்கு பிறகு உடனடியாக அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த வேண்டும்.

அணையின் பாதுகாப்பு தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் , இதை  கேரளா ஏற்காத பட்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் அணை பாதுகாப்பு ஒப்படைக்க வேண்டும் .

மேலும் சில பாக்கி உள்ள பராமரிப்பு வேலைகளை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும் .

இதன் பின் அணையின் நீர்மட்டம் 152 என்பதை உயர்த்த வேண்டும்.

பொருளாதார உதவி

கேரளா நம்மிடம் எதாவது பொருளாதார உதவி கேட்கும் பட்சத்தில் ஒருவேளை குத்தகை பணம் அதிகமாக கேட்டால் தமிழக அதை தந்து விடலாம் , பணம் ஒரு பொருட்டு அல்ல , மாறாக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வு என்பதை மனதில் கொள்வோம்.

நீதி மன்ற தீர்ப்பை ஒட்டி இதை உடனே செய்ய வேண்டிய பணிகள் , இதை கேரளா ஏற்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும் , அதை " குறிகிய கால நடவடிக்கை " என பார்ப்போம் , ஒருவேளை கேரளா ஏற்காத பட்சத்தில் என்ன செய்ய?

                                              தொடரும்.......................



Sunday, January 29, 2012

முல்லை பெரியாறு- பாகம் 34

பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


இறுதிகட்ட போராட்டம்

டிசம்பர் மாதம் 25ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக எல்லைகளில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் கேரளாவில் காய்கறி, பழங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும் விற்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக வந்த தொழில்நுட்பக் குழுவினரிடம் திமிராகப் பேசிய வாக்குவாதம் செய்த கேரள என்ஜீனியர்கள், பின்னர் ஆய்வைப் புறக்கணிப்பதாக செல்போன் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கேரளத்தின் இந்த செயலுக்கு மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுமாறு கேரளாவை அது அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.,இதில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தலைநகர் சென்னையிலும் போராட்டம் முன் எடுக்க பட்டது.


டிசம்பர் மாதம் 26ம் தேதி

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்

ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர் கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.

டிசம்பர் மாதம் 27ம் தேதி

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என அனைத்து அண்டை மாநிலங்களும் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. விரைவில் தமிழக நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க புதுமையான போராட்டத்தை நடத்துவேன்.மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடவும் நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

போராட்டத்தின் விளைவாக , முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த அவசர கால குழுவை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பது போல தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த 40 சமுதாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு தீவிரப் போராட்டத்தில் குதிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 28ம் தேதி

புதிய அணை கட்டத் தேவையில்லை என்றதால் நீக்கப்பட்ட கேரள போராட்டக் குழுத் தலைவர் ,இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சி.பி.ராய். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்தார்.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் பதற்றம் தணியாத காரணத்தினால் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு முதல் நாள் தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து, மறுநாளே  நிறுத்தப்பட்டது.

தேனி அருகே உள்ள சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(35) என்பவர் முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக விஷம் குடித்தார். தற்கொலை செய்து கொண்டார் .

டிசம்பர் மாதம் 29ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர்.

கட்சி, சாதி, மத எல்லைகளை கடந்து மொத்த தமிழகமும் முல்லைப்பெரியாறை காக்க கிளர்ந்து எழுந்துள்ளது. எனவே, வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முனைய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார் வைகோ .

வருடம் முடிவில் போராட்டமும் மெல்ல தனிய ஆரமித்து , மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழகத்திற்கு சாதகமாக இருப்பது அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் தணிந்தது. மீண்டும் எதாவது பிரச்சனை செய்தல் இதை விட போராட்டம் பலமாக இருக்கும் என்ற வகையில் நாமும் தீர்வு களை நோக்கி பயணிப்போம் .


                                             தொடரும் ...............................