Monday, January 16, 2012

முல்லை பெரியாறு- பாகம் 27

பாகம்-26 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

55 ஆண்டு காலம் முல்லை பெரியாறு அணையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்த ஒரு பதிவு

பறிபோன உரிமைகள் 

1956 ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :- அணை இருந்த பகுதியான பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் வேண்டும் என மத்திய அரசை வேண்டுகிறது.

தமிழக அரசு நிலை:- கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே, எதில் இருந்தால் என்ன-காமராஜர் அரசு

1970 - ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :- குத்தகைத்தொகை அதிக படுத்தவேண்டும், மீன் பிடிக்கும் உரிமை வேண்டும்

தமிழக அரசு நிலை:- சரி , காசும், மீனும் தானே போகுது - கருணாநிதி அரசு

1979ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :- முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.இது உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து என கூச்சல்

தமிழக அரசு நிலை:- நாங்களே புதிதாக அணை கட்டு கொள்கிறோம் - எம்.ஜி.ஆர் அரசு

கேரளா நரித்தனம் :- புதிய அணை வேண்டாம் , இருக்கும் அணையை பலபடுத்துங்கள் அதுவரை நீர் மட்டம் 136 அடி ஆக குறையுங்கள், மேலும் படகு விடும் உரிமை ,அணை வரையிலான சாலையும், வேண்டும்

தமிழக அரசு நிலை:- சரி, படகு , சாலையால் என்ன ஆகிவிடும் எடுத்து கொள் - எம்.ஜி.ஆர் அரசு

1982ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :-அணைக்கு வரும் நீர் வரத்தை தடுக்கும் வகையில் தண்ணீர் வரும் வழியில் நான்கு புதிய தடுப்பு அணைகளை கட்டியது.

தமிழக அரசு நிலை:-என்னதான் வேண்டும் , அணையின் பாதுகாப்பை  கேரளா காவல்துறைக்கு தந்தது , அதற்கு வருடம் கூலி தமிழகம் தந்தது-எம்.ஜி.ஆர் அரசு

1998ஆம் ஆண்டு
கேரளா நரித்தனம் :-அணையின் நீர் மட்டம் உயர்த்த முடியாது.

தமிழக அரசு நிலை:-நீதிமன்ற நோக்கி படை எடுப்பு -ஜெயா அரசு

2006ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :-உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஏற்க முடியாது,கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி சட்ட சிக்கலை ஏற்படித்தியது.

தமிழக அரசு நிலை:- மீண்டும் நீதி மன்ற பயணம்தான்.கோர்ட்டின் புனிதத் தன்மை என்ன ஆவது,கேரளாவின் மீது கேள்விகளை வைத்த நீதிபதி.

2009ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :-அணை பிரச்சனையில் சட்ட சிக்கல் தான் இருக்கு , அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றவேண்டும்.

தமிழக அரசு நிலை:- சரி மாத்தி கொள்வோம்- கருணாநிதிஅரசு 

2010 ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :-அரசியல் சாசன அமர்வில் வந்த பின் , மீண்டும் அணை பலமில்லை , புதிய அணை கட்ட போறோம்.

தமிழக அரசு நிலை:-புதிய அணை கட்டிகொள்ளுங்கள்,அணையின் பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும்- கருணாநிதி அரசு

நீதிமன்றம் :- அணையின் பலத்தை சோதித்து பார்த்திடுவோம்.

கேரளா நரித்தனம் :-புதிய அணை கட்ட போகிறோம் , ஆய்வு நடத்தி விட்டோம் , நிதி ஒதுக்கி விட்டோம்.

தமிழக அரசு நிலை:-நீதி மன்ற முறையீடு - கருணாநிதி அரசு

கேரளா நரித்தனம் :-அணை உடைவது போலவும் , அதனால் மக்கள் சாவது போலவும் கிராபிக்ஸ் கட்சிகள் குறும்பட சிடி கேரளா அரசே வெளிடிடுகிறது.

தமிழக அரசு நிலை;- நீதி மன்ற இருக்கில்லா - கருணாநிதி அரசு

கேரளா நரித்தனம் :-அணை ஆய்வில் குழப்பங்களை ஏற்படுத்தியது.

தமிழக அரசு நிலை;- ஆய்வு பணியில் இருந்த தமிழக சார்பு உறுப்பினர் எதிர்ப்பு, தமிழக அரசு மவுனம்.

2011 ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :-முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் பணிகளுக்காக ,முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த்து.

தமிழக அரசு நிலை;-  நீதி மன்ற இருக்கில்லா -ஜெயா அரசு.

கேரளா நரித்தனம் :- நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கேரள

தமிழக அரசு நிலை;- அப்படி எல்லாம் எதுவும் ஏற்படவில்லை- ஜெயா அரசு

கேரளா நரித்தனம் :- கலவரத்தை தூண்டிய அரசு.

தமிழக அரசு நிலை;- போராடும் தமிழக மக்களை கைது , தடியடி -ஜெயா அரசு

2012 ஆம் ஆண்டு

கேரளா நரித்தனம் :-நீதி மன்றத்திற்கு வெளியில் பேசி தீர்ப்போம் அவருங்கள்.

தமிழக அரசு நிலை;- ....................?

 அதான் அனைத்து நரித்தன வேலைகளை கட்டியுள்ளது , மேலும் இப்போது அரசு பின் வாங்கினாலும்,மக்கள் பின் வாங்க போவதில்லை , இந்த அளவிற்கு மக்களுக்கு தெளிவும் , உண்மையும் புரிந்து விட காரணம் , ஜனநாயக தூண்களான ஆளும் அரசோ , எதிர்கட்சியோ ,மற்ற அரசியல் கட்சிகளோ , பத்திரிக்கை களோ அல்ல ,

இதற்க பல வருடமாக தொடர்ந்து போராடும் கம்பம்.அப்பாஸ் , வயதான காலத்திலும் போராடும் பழ,நெடுமாறன் , பல போராட்ட , பிரசாரங்களை முன் எடுத்த மதிமுக கட்சி பொது செயலாளர் வைகோ யும் தான் , இன்று போராட்டத்தில் பங்கு போட பலர் வருவார்கள் , உண்மையில் போராடும் மக்களுக்கு தெரியும் யார் , யார் என.
                                            தொடரும்......................................

No comments:

Post a Comment