Monday, January 23, 2012

முல்லை பெரியாறு- பாகம் 32


பாகம்-31 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்

வொகுண்ட எழுந்த தமிழகம்


டிசம்பர் மாதம் 21ம் தேதி

கேரளா செல்லும் பாதையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிமுக ,பழ.நெடுமாறன் தலைமையில் முல்லை பெரியாறு அணை மீட்பு குழு ,கம்பம் .அப்பாஸ் தலைமையிலான ஐந்து மாவட்ட முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் , கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிட கழகம் ,தியாகு தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை இயக்கம் , நாகை.திருவள்ளுவன் தலைமையிலான தமிழ் புலிகள் ,தமிழ்நாடு கள் இயக்கம் ,கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் ,விவசாயிகளின் கூட்டமைப்பு ,மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ,தமிழநாடு கொங்கு இளைஞர் பேரவை ,இந்து மக்கள் கட்சி ,அகில இந்தியா பார்வர்டு பிளாக் , பாரதீய பார்வர்டு பிளாக் ,என பல அமைப்புகள் சேர்ந்து நடத்திய போராட்டம் .

13 சாலைகளிலும் முற்றுகை போராட்டத்தை நடத்துவதற்காக வைகோ , நெடுமாறன்,ம்பம் குமுளிக்கு செல்லுகின்ற வழியில் காவல்துறையினர்
உத்தமபாளையம் தாலுகா எல்லையில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி தடுத்து நிறுத்தினார்.

கேரள முதல்வருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார்.மதிமுக பொதுச் செயலாளர்கள்.

வைகோ கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படித்தியது , கைது செய்து அழைத்து சென்ற பொது மக்கள் கூடி தடுத்தார்கள் , சீலம்பட்டி கிராம மக்கள் சாலையில் தடைகளை ஏற்படித்தி காவல் துறை வாகனத்தை நகரவிடவில்லை , பிறகு வைகோ , நெடுமாறனின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்கள் வழி விட்டார்கள்.பிறகும் நெடுதூரம் வைகோவின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் அணி வகுத்தனர்.

மீண்டும் அடுத்த கிராமத்திற்கு தகவல் போக அவர்களும் சாலைக்கு வந்து வைகோ கைது செய்த காவல் துறையை தடுத்தார்கள், இதற்காகவே பல வழி தடங்கள் மாற்றி , மாற்றி சுற்றி காவல்துறை அழைத்து வந்தது.

கூடலூரில் கூடி இருந்த மக்களுக்கு வைகோ வரவில்லை என்ற ஏமாற்றத்தோடு , குமுளியை நோக்கி முன்னேறிய மக்களை தடுத்த போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஓட ஓட விரட்டியடித்ததால் பெரும் பதட்டம் நிலவியது 5 முறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனார்.

செங்கோட்டையில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. உனக்கும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம். நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் கேரள செல்லும் லாரிகளில் சரக்கு புக்கிங் நிறுத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படும் வரை சரக்கு புக்கிங் நிறுத்த ஏஜென்டுகள் முடிவு செய்தனர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் முடிதிருத்துனர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இதனால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டது.

                                         தொடரும்...................................

No comments:

Post a Comment