Thursday, January 5, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-1

இடைதேர்தல் 
==========
 இடைதேர்தல் என்றாலே ஆளும் கட்சிதானே வெல்லும் என்ற மமதையை திண்டுக்கல் இடைதேர்தலில் உடைத்தவர் எம். ஜி. ஆர் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக இடைதேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெல்லும் என்ற நிலையுள்ளது ( ஆளும் கட்சிதான் வெல்ல வேண்டும் என உள்ளது ) இதை மறுபடியும் உடைக்க  தயார்  வருகிறார்  மதிமுக பொது செயலாளர்  வைகோ, இந்த யுத்தத்தையும்  யுத்தகளம் பற்றி பார்ப்போம்.
இந்த தொகுதியில்  கட்சி களின்  நிலவரம் 

திமுகவின் நிலை 
---------------------------
சங்கரன்கோவில் தொகுதியை காங்கிரஸ் காரர்களிடம் இருந்து 1967 முதலில் கைபற்றியது திமுக , பின்  வைகோ திமுகவில் இருந்த பொது வலுவான நிலையை திமுகவிற்கு உருவாக்கி தந்தார் , அவரின் வெளியேற்றத்திற்கு பின் இந்த தொகுதியை எத்தனை கூட்டணி அமைத்தலும் திமுகவால் கைப்பற்ற முடியவில்லை , ஏன் 1996 ஆண்டு ஜெயாவிற்கு எதிராக அடித்த அலையில் கூட திமுக வெல்ல வில்லை , இப்போது கூட அந்த தொகுதியில் திமுக சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வலுவாக இருந்தது ,அதுவும் மதிமுக விட்டு போன தங்கவேலு அவர்களால் , இப்போது வேட்பாளருக்கே வெளியூர் போகவேண்டிய நிலை திமுகவிற்கு

காங்கிரஸ் நிலை 
------------------------ 
என்னதான் நோண்டி மாடாக இருந்தாலும் , மாடு மாடுதனே , அதனால் கணக்கில் வருகிறது , ஒருகாலத்தில் காங்கிரஸ் உயிரோடு இருந்தது , அருணாசலம் என்ற ஒரு மத்திய மந்திரியின் தயவால் , அவர் போன உடன் பாதி காங்கிரஸ் போனது , கொஞ்சம் இருந்த காங்கிரேசை நெசவாளர்கள்  தாங்கி பிடித்தார்கள் , அவர்களை கவனிக்காத காங்கிரஸ் இன்று அங்கு ,அங்கே போகும் காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது , அதிலும் பல கோஷ்டிகள்

கம்யூனிஸ்ட்களின் நிலை 
--------------------------------------
கொஞ்சம் இருக்கும் பஞ்சாலை , நூலாலை , விசைத்தறி தொழிலாளர்களை நம்பி , தங்களின் வழக்கமான பிரித்தாலும் கொள்ளைக்கு இணங்க இரு கம்யூனிஸ்ட் காலத்தை ஓட்டுகிறார்கள் , மொத்தத்தில் இவர்கள் அவர்களை விட செல்வாக்கான அவர்கள் என ஒருவரை ஒருவர் காட்டி கொள்ளவார்கள் , அதிலும் இந்தியா கம்யூனிஸ்ட் இந்த தொகுதியை உள்ளடக்கிய தென்காசி நாடாளுமன்றத்தை கையிருப்பாக கொண்டாலும் கூட்டனி மூலம் வந்தது (அதிமுக +மதிமுக+கம்யூ ), இந்த தொகுதியில் மார்சிட் கம்யூனிஸ்ட் விட இந்தியா கம்யூனிஸ்ட் கொஞ்சம் அதிக செல்வாக்குதான் தொழில்சங்கத்தில் ஒரு ஒப்புக்கு இருப்பவர்கள் அதிகம் , இந்த இருவரின் மொத்த செல்வாக்கு காங்கிரஸ் விட அதிகத்தான், 

புதிய தமிழகம் , விடுதலை சிறுத்தைகள் 
---------------------------------------------------------
இந்த தொகுதி ,தனி தொகுதியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை, அனைத்து தரப்பினரின் எண்ணிக்கை சமம் செய்கிறது  , ஆரம்பத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு வரவேற்ப்பு இருந்தது , பின் கொஞ்சம் சிறுத்தைகள் வளர ஆரமித்தர்கள் , இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் நெருங்கி போகவில்லை , முழு கால் சட்டையும் இடுப்பு வாரருடன்(பெல்ட் ) ,இன் பண்ணிய துரைமார்  போல திரிந்தார்கள் , இந்த இருவரையும் அந்த மக்கள் ஏற்கவில்லை , திருமாவிற்கு வடமாவட்டகளில் என செல்வாக்கு என தெரிந்து விட்ட நிலையில் இங்கே கிருஷ்ணசாமியை மீறி பிரகாசிக்க முடியவில்லை , மொத்தத்தில் கிருஷ்ணசாமிக்கு கொஞ்சம் செல்வாக்கு உண்டு , இந்த இருவரின் மொத்த செல்வாக்கும் கம்யூனிஸ்ட்களை விட அதிகம்தான் 

தேமுதிக நிலை 
------------------
நடிகர் வடிவேலு தான் நேயாபகத்திற்கு வருகிறார், அங்கே அங்கே சிதறிப்போன திமுக ,அதிமுக , சாதிகட்சிகளின் மிச்சத்தை வைத்து வண்டி ஓட்டுகிறார்கள், கொஞ்சம் சினிமா கவர்ச்சியோடு புதிய வாக்காளர்களை கவர்ந்தார்கள் , அவர்களும் இப்போது இவர் அதற்கு சரிப்பட்டுவரமட்டார் என முடிவு செய்து விட்டனர் , இவர்கள் சொல்லுவார்கள் திமுகவிற்கு நிகரான செல்வாக்கு உள்ளதாக , திமுகவே காலியாகி கொண்டு இருக்கிறது , ஆம் இவர்கள் திமுகவின் செல்வாக்குக்கு சமமானவர்கள் தான் இந்த தொகுதியை பெருத்தளவு , திமுகவின் செல்வாக்கு மேலே உள்ளது, இதற்கு மேல இவர்களை எழுத ஒண்ணுமே இல்லை 

அதிமுக நிலை 
----------------
இரட்டை இலைக்கு என்று ஒரு தனி செல்வாக்கு உண்டுதான் , மேலும் 
அத்தா அணி , அக்கா அணி , மாமா அணி , மச்சான் அணி என பல பிரிவுகளை உருவாக்கி ஊர்பூரவும் நிர்வாகிகள் தான் , தொடர்ந்து நான்கு முறை வென்று உள்ளது அதிமுக , மறைந்த அமைச்சர் கருப்பசாமிக்கு நல்ல பெயர் வாங்கியவர் என இல்ல விட்டாலும் கேட்ட பெயர் எடுக்காதவர் என்பதாலே , தாழ்த்தப்பட்டவர் அல்லதவரும் வாக்களித்தனர் , அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உண்டு என நினைக்கிறேன் , 1996 யில் மதிமுக பிரித்த வாக்குகளால் முதல் முறையாக வென்றார் , 2001 யில் மீண்டும் திமுக மீது உள்ள கோபத்திலும் மதிமுக பிரித்த வாக்காலும் வென்றார் , 2006 இப்போது பிரிக்கவில்லை கூட இருந்து வெற்றி பெற செய்தார்கள்  , 2011 மறுபடிவும் திமுக அதிருப்தி மதிமுக களத்தில் இல்லை என சாதகமான சூழலில் வென்றார் , மொத்தத்தில் ஆளும் கட்சி என்ற யானை மீது வலம்வரும் அதிமுக கொஞ்சம் தூக்கலான செல்வாக்கு இருப்பதாக அரித்திரம் பூசி கொண்டுள்ளது 

மதிமுகவின் நிலை 
-------------------------
குருவிகுளம் ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் செல்வாக்கு உண்டு , கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு நிகரான வாக்கு 
வாங்கியுள்ளது , மற்றொரு ஒன்றியத்தில் போட்டி இட்ட இடங்களில் ஆளுகட்சியை விட கொஞ்சம் குறைவான ஒட்டு வாங்கியுள்ளது, இருந்த ஒரு பேருராட்சி கைப்பற்றியது (காப்பாற்றியது) , சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் கொஞ்சம் ஆளும் கட்சியைவிட செல்வாக்கு குறைவுதான் , மொத்தத்தில் கிராமங்களில் பம்பரம் சுற்றுகிறது , அதிமுகவை வெல்ல நகர பகுதியில் படித்தவர்கள், விசைதறி நெசவாளர்கள் திசை திரும்பினால் வெல்வது உறுதி ஆளும் கட்சியும் மதிமுகவும் சமநிலை தான்,

மக்களின் நிலை 
-------------------
பல தரபட்ட மக்களின் நிலையை எழுதவேண்டும் ,அதனால் இதை தனி பதிவாக தருகிறேன்,பணத்தையும் , இலவசத்தையும் புறக்கணித்தால் , இந்த தொகுதியில் ஒரு மாற்றம் கொண்டு வர மக்களால் முடியும் , மக்கள்தான்  சிந்திக்கவேண்டும் 

மொத்தமாக சொன்னால் நேரடி போட்டி அதிமுக - மதிமுக விற்கே இருக்கும் , அதிகபடியான தகவல் , வைகோ வின் சொந்த கிராமம் கலிங்கப்பட்டி இந்த தொகுதிக்கு உட்பட்டது .

பின் குறிப்பு :- 
முல்லை பெரியாறு தொடர் முடியவில்லை , இருந்தாலும் அரசியல் பற்றி எழுதவேண்டும் என்பதாலே , இந்த பதிவு 

No comments:

Post a Comment