Saturday, March 31, 2012

நாம் யார் -41

பாகம்-40 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

கிறித்தவ விடையூழியர் (Missionaries)தொண்டு

திருவில்லிபுத்தூர் வட்டத் தென் எல்லையிலுள்ள சீயோன் மலை என்னும் திருக்குளிப்புத் (Baptist) திருச்சவை நிலையத்தில், மேனாடு துரையிருந்த காலத்தில், அருள் புத்தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்தவ ஆசிரியர், கல்பட்டியில் பிராமண ஊராளி (கிராம முனிசீபு) யிருந்த தெரு வழியாக வந்தாரென்று, அவரேவலால் அடிக்கப்பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை,வண்டி கட்டிக் கல்பட்டி சென்று, ஊராளி யில்லத்தையடைந்தார். அவர் வருகை யறிந்த, ஊராளியார், வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித்தாழிட்டுக் கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம்கழித்து, ஊராளியாரின் மனைவியார் கதவைத்திறந்து, ஊராளியார் ஊரிலில்லை யென்று சொல்லிவிட்டார். துரை நடந்ததைச் சொல்லி, ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர் வேலை போய்விடும் என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். ஏழாம்நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக்கொண்டு துரையிடம் வந்து மன்னிப்புக்கேட்டுச் சென்றார்.

குலவேற்றுமைக் கொடுமையினின்று தப்பவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதியராயினர்.

கால்டுவெலார் கண்ட உண்மை

கால்டுவெலார் காலத்தில், தொல்காப்பியமும் கடைக்கழகப் பனுவல்களும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்துகிடந்தன. மறைமலை யடிகள் போலும் தனித்தமிழ்ப்புலவரும் ஆராய்ச்சியாளரும் அக்காலத் தில்லை. இனவிழிப்புறுத்தப் பெரியாரியக்கமும், இனத்தை முன்னேற்ற நயன்மைக் கட்சி யாட்சியும், தமிழின் பெருமை யுணர்த்தச் சுந்தரம் பிள்ளையும் அன்றில்லை. குமரிநாடென்ற பெயரும் ஒருவரும் அறியார்.

எல்லாத் துறையிலும் தமிழர் ஆரியருக்கடிமைப்பட்டு ஊமையரா யிருந்த காலத்தில், கால்டுவெலார் வழிகாட்டுவாரின்றித் தாமே ஆராய்ந்ததனால், நெடுங்கணக்கும் எண்வேற்றுமையும் சமற்கிருதத்தினின்று வந்தவை யென்றும், உயரிய கலைகளும் அறிவியல்களும் ஆரியர் கண்டவையென்றும், இலங்கைக்கப்பால் எத் தீவுந்தமிழர்க்குத் தெரியா தென்றும் தவறாகக் கூற நேர்ந்தது. ஆயினும் மொழித்துறையில் ஓர் உண்மையைத் தெளிவாகக் கண்டார். அது, தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்தியதும் மாந்தன் முதன் மொழிக்கு நெருக்க மானது மாகும்என்பதே. இவ் வுண்மை விளங்கித் தோன்றிய சொற்றொகுதிகள், சுட்டுச் சொற்களும் மூவிடப்பெயர்களுமாகும்.

நயன்மைக் (நீதி )கட்சி 

ஆங்கில ஆட்சியின் விளைவாகவும் ஆங்கிலக் கல்வியின் பயனாகவும், திரவிடர் அறிவு கண்விரிவாகத் திறக்கப்பட்டு, நயன்மைக் கட்சிதோன்றி, 1920-லிருந்து 1937 இடைவரை இரட்டை யாட்சியைத் (Diarchy)திறம்பட நடத்தி, தமிழரையும் திரவிடரையும் முன்னேற்றியது. அதனால், வகுப்பு வாரிச்சுழல் பதவிகளும், குலத்தொகை விழுக்காட்டு அலுவல்பேறும், பிற்பட்டோர்க்குப் பலவகைச் சலுகைகளும் ஏற்பட்டன. பேராய ஆட்சியிலும்,தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள தெலுங்கு கன்னட நாடுகளிலும் பிராமணரல்லார் முதலமைச்சராக வரவும், தமிழ்நாட்டில் பிராமணரில்லா அமைச்சுக் குழு ஏற்படவும் முடிந்தது.

கல்வித் தொழில் பிராமணர்க்கேயுரிய தென்னுங் கொள்கைக்கு மாறாக, ஆங்கிலர் எல்லா வகுப்பார்க்கும் அதைப் பொதுவாக்கித் தமிழரைப் பிராமணர்க்குச் சமமாக்கினதனால், தம் மேம்பாடும் பிழைப்பும் குன்றுவது கண்டு, ஏற்கெனவே ஆங்கிலராட்சியில் வெறுப்புற்றிருந்த பிராமணர், நூற்றிற்கு மூவராயுள்ள பிராமணர்க்கு அரசியல்அலுவற்பேறு நூற்றிற்கு மூன்றே யென்று நயன்மைக்கட்சி யாட்சி திட்டஞ் செய்தபின், கிளர்ந்தெழுந்து ஒன்று கூடிச் சூழ்ந்து, ஆங்கில அரசை அடியோடொழித்தா லொழியத் தமக்கு உயர் வாழ்வில்லை யென்றறிந்து, மும்மொழிக் கூட்டுநாடாயிருந்த சென்னை மண்டலத்தில், தமிழருள்ளும் திரவிடருள்ளும் இளைஞரையும் தன்னலக் காரரையும் தமிழின் பெருமையை அறியாதவரையும் துணைக்கொண்டு, தேசியக் கட்சியைத் தோற்றுவித்து, வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்றும், அவனை அகற்றிவிட்டால் விண்ணுலக வாழ்வு வந்து விடுமென்றும், நயன்மைக் கட்சி அயலானுக்கு நாட்டைக்காட்டிக் கொடுக்கின்ற தென்றும் பொதுமக்களிடம் சென்று புகட்டலாயினர்.

நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் கல்லாதவராயும் ஏழைகளாயும் இருந்ததனால், அடிமேலடியடித்தால் அம்மியும் நகர்வதுபோல், நாளடைவில் பொதுமக்கள் தேசியக் கட்சித் தொண்டர்க்குச் செவி சாய்த்தனர்.  நயன்மைக் கட்சி யமைச்சர், எறும்புக்கடி போன்ற பிரித்தானியத் தினும் பாம்புக்கடி போன்ற பிராமணியம் கொடி தென்றும்,ஆங்கிலர் ஒருகாலும் இந்தியா வினின்று நீங்காரென்றும் கருதினதனால், ஆங்கிலராட்சிக்கு மாறாகப் பேசின வரையும் ஒழுகினவரையும் தடியடியடித்தும் சிறையிலிட்டும் துன்புறுத்தினர். இதுபொது மக்கட்கு நேரிற் சொல்லப்பட்டபோதுஅவர்க்குச் சினம் மூண்டது. அதனால் தேசியக் கட்சிவிரைந்து வளர்ந்தது. இறுதியில், பிரா மணரல்லாத காந்தியடிகள் முனிவர் கோலம் பூண்டு, தாழ்த்தப்பட்டவரை யணைத்துப் பொது மக்களொடு தொடர்புகொண்ட பின், வெற்றி கிட்டிற்று; விடுதலையும் கிடைத்தது. விடுதலைப்பற்றும் நாட்டுமொழி யறிவும் பொதுமக்கள் தொடர்பும் இன்மையால், நயன்மைக்கட்சித் தலைவர் 1937ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் படுதோல்வி யடைந்தனர். பேராயம் (காங்கிரஸ்) ஆட்சியைக் கைப்பற்றியது.

தனித்தமிழ் முன்னோடியர் இருவர்

நாட்டுப்பற்றிற்கு உயிர்மொழிப்பற்று. முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்;  பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும்.

சூரியநாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கிவைத்தார்.

பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி, நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு நேர்த் தென்சொற்களும் மொழிபெயர்த்தும், ஆக்கியும் வைத்தார்.

                                                                                                            தொடரும்......................

Thursday, March 29, 2012

நாம் யார் -40

பாகம்-39 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

ஆங்கிலராட்சியும் அதன் நன்மைகளும்

ஆங்கிலராட்சி, 18 ஆம் நூற்றாண்டிடையில் தோன்றி, இருபதாம் நூற்றாண்டின் இடையில் நீங்கியது. அரசினர் அலுவலகங்களிலும், பெருஞ் சாலை களிலும், பொது விடங்களிலும், புகைவண்டிகளிலும், மின்வண்டி களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி எல்லா வகுப்பார்க்கும் பொது வாயிற்று. எல்லாத் துறை யிலும் பொய்யும் புரட்டும் கட்டுங் கதையுமான ஆரியத் தொல்கதை (புராண) முறைக் கல்வி யின்றி, உண்மையும் அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும் அடிமைத் தனத்தையும் அறவே அகற்றுவதுமான அறிவியற்கல்வி புகட்டப் பட்டது. கல்வித் திறமைமிக்க அனைவர்க்கும் வகுப்பு வேற்றுமை யின்றிப் படிப்புதவி (Scholarship) யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒரு பேரரைய ஆட்சிக்குட் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலராட்சி யிருந்த இலங்கை ,காழகம் (பர்மா) மலையா , தென்னாப்பிரிக்கா முதலிய பல வெளிநாடுகளிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்ற தொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர். ஆங்கில வரசு மதத்துறையில் தலையிடவே யில்லை. குலமத கட்சி யின வேறுபாடின்றி, எளியார்க்கும் வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும் ஒரே நடுநிலை நயன்மை (நீதி) வழங்கப்பட்டது.

இதனால், ஆங்கிலராட்சி நேர்மையையும், புதுச்சேரி காரைக்கால் தெரு நேர்மையையும் ஒருங்கு நோக்கி ,"பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்"என்று பழமொழியாக வழங்குமாறு, பொது மக்கள் புகழ்ந்து பாராட்டினர். சமுதாய இன்ப வாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையா யிருந்த உடன்கட்டை யேறல், செடிற்குத்தல் (hook-swinging), குழந்தை மணம், நரக்காவு (human sacrifice) முதலிய குருட்டுப் பழக்கவழக்கங்களும்; தக்கர், பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலியகொடிய கயவர் கூட்டங்களும் அறவே ஒழிக்கப்பட்டன.

அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில் விரைந்து வழிச் செல்லும் இருப்புப் பாதைகளும், அழகிய மாடமாளிகைகளும் மலைநகர் களும், இந்தியாவெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும் சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர்காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங் காணாவாறு மாபெரும் படையமைப்பும் ஏற்பட்டன.எல்லாத் திணைக் களங்களிலும் (departments), இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும் தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப்பெற்றனர். 

இந்தியா முழுதும் ஒன்றுபட்டுநாளடைவில் தன்னாட்சி பெறுமாறு இந்தியத் தேசியப் பேராயம் (Indian National Congress) கியூம் (Hume, Allen Octavian)என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1855-ல் தோற்றுவிக்கப்பெற்றது. அதன் பயனாக, பேராயத்தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சி மண்டலங்களில் மட்டு மன்றி, எல்லா உள்நாட்டு மன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும் பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப் போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்துவந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும் பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும், அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்தபருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும் பேராயத் தலைவரிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு அமைதியாய் அகன்றனர். அதனாற்பிரெஞ்சியரும் போர்த்துக்கீசியரும் சற்றுப்பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது. 

ஆங்கிலர்க்கும் பிராமணர்க்கும்வேற்றுமை




ஆங்கிலர் 

பிராமணர்
(1)
வாணிகத்திற்கு வேண்டிய பொருளொடும், பாதுகாப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக்கேற்றஅறிவொடும், வந்தனர்.
 கையுங் காலுமாக வந்தனர்.
(2)
வெண்ணிறமாயிருந்தும், தம்மை மக்களென்றேகூறினர். 
வெண்ணிறம் பொன்னிறமாயும கூறினர். செந்நிறமாயும் கருநிறமாயும் மாறிய பின்னும், தாம் நிலத்தேவரென்றே கூறியே மாற்றினர்.
(3)
தம் மொழி மக்கள் மொழி யென்பதைமறைக்கவேயில்லை.
ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா  யிருந்தும், தம் முன்னோர் மொழியையும் இந்தியா விற்புணர்த்த சமற்கிருதம் என்னும் இலக்கிய நடை மொழியையும் (literary dialect), இன்றும் தேவமொழி யென்றே துணிச்சலுடன் சொல்கின்றனர்.
(4)
தாழ்த்தப்பட்ட தமிழருள் கடைப் பட்ட பறையரைத் தம் சமையற்காரராக்கி, அவர் ஆக்கியதையும் படைத்ததையும் பிராமணரும் விரும்பியுண்ணும் படி செய்தனர்.
தமிழருள் தலைமையான வராகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளர், பொற்கலத்திற் கொடுக்கும் தண்ணீரும் குடிக்கத் தகாதது போல் நடிக்கின்றனர்.
(5)
அகக்கரண வாற்றலை வளர்க்கும் உண்மையான அறிவியலைக்கற்பித்தனர். 
தமிழரை அடிமடையராக்கி, அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் தொல் கதைக்கல்வியைப் புகட்டினர்.
(6)
தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்திய தென்றும், மக்கள் முதன் மொழிக்கு நெருங்கிய தென்றும், கூறினர் (கால்டுவெல்).
தமிழ் சமற்கிருதக் கிளை யென்றும் பன மொழிக் கலவை யென்றும் காட்டியுள்ளனர். (சென்னைப் ப.க.க.தமிழ் அகரமுதலி)
(7)
குலம் தொழில்பற்றிய தென்றும் மக்கள் படைப்பென்றும் கூறு கின்றனர். 
குலம் பிறவி பற்றிய தென்றும் இறைவன் படைப்பென்றும் அதை இறைவனே சொன்னா னென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை)
(8)
ஆங்கிலத்திலுள்ள அயற் சொற்களை யெல்லாம் தாமே தெரிவிக்கின்றனர்.
வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற் களெல்லாம்வடசொல்லே யென்று வலிக்கின்றனர்.
(9)





(10) 










(11)    




(12)  







(13)  



(14)  






(15) 




(16)  



(17)   


கிறித்தவ மதம் உரோம நாட்டினின்று வந்து இலத்தீன் வாயிலாகப் புகுத்தப்பட்டும், தம் தாய்மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.

ஆட்சியினாலும் கல்வியினாலும் இந்தியா முழுவதையும் ஒற்றுமைப் படுத்தினர். 









தமிழ் தூய்மையாகப் பேசப் படுவதையே விரும்புவர். 



தம் திருமறை இறைவனால் ஏவப்பெற்ற முற்காணியரால் (தீர்க்கதரிசிகளால்) எழுதப்பட்டதென்பர். 





தாம் கண்டவற்றையும் செய்த வற்றையுமே தம் செயலாகக் கூறுவர்.  

தம் வள மனைக்குள் நல்லார் எவரையும் தாராளமாகப் புகவிடுவர். 


தமக்கு உதவிய மொழிகளையும் அயலாரையும் நன்றியறிவோடு புகழ்வர்.  

தமிழ் நூல்களை அச்சிடின், உள்ளபடியே அச்சிடுவர்.  


பிரித்தானியம் உடலைமட்டும் தாக்கி, ஆங்கிலனுடன் நீங்கி விட்டது 
சிவனியமும் மாயோனியமும் முழுத்தூய தமிழ மதங்களா யிருந்தும், தமிழர்கோவில் வழிபாட்டையும் சடங்கு களையும் அவர்க்குத் தெரியாத வடமொழியிலேயே ஆற்றி வருகின்றனர்.


ஒரேபேரினத்தைப் பல சிற்றினமாகவும், ஒவ்வொரு சிற்றினத்தையும் பற்பல அகமணப் பிறவிக்குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித் தாட்சிமுறையைப் பிராமணரைப் போற் கையாண்டவர்,இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை.


நூற்றிற்கு நூறும் வடசொற் கலந்து பேசப்படுவதையே விரும்புவர்.


ஐம்பூதச் சிறு தெய்வவழுத்து களும் ஆரிய வரலாற்றுத் துணுக்குகளுமான வேத மந்திரங்கள், இறைவனால் இயற்றப் படவில்லை யென்றும், முனிவராற் காணப்பட்டவையே யென்றும்,பிதற்றுவர்.

அயலார் நாகரிகத்தையும், இலக்கியத்தையும் தமவென்றே கூசாது பறையறைவர்.

தம் இல்லத்திற்குள் பிராமணர் அல்லார் புகின் தீட்டெனக் கருதுவர்.


தமக்கு வாழ்வளித்த தமிழையும் தமிழரையும், இழிந்தோர் மொழி (நீசபாஷை) யென்றும், சூத்திரர் என்றும் பழிப்பர்.


பழந் தமிழ் நூல்களையும் பாடல் களையும் அச்சிடும் போது,தம் குல மேம் பாட்டிற்கேற்றவாறு சொற்களை மாற்றியே அச்சிடுவர்.

பிராமணியம் ஆதனையும் (ஆன்மாவையும்) அகக்கரணங் களையும் தாக்கி, உயிர் நீங்கிய பின்னும் தொடர்வதாயுள்ளது.


                 தொடரும் .....................

Wednesday, March 28, 2012

தமிழக அரசு நிதி நிலை அறிக்கை - 2012-13

தமிழக அரசின் நிதி நிலை பல்வேறு திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது , மேலும் முன்னவர்கள் என்ன செய்தார்களோ அதை அதான் இவர்களும் செய்து உள்ளார் கள் , இரு வேறு கட்சிகளாக ஆட்சி அதிகாரம் செய்தாலும் இலவச திட்டங்கள் என்பதை பொதுக் கொள்கையாக வைத்து செயல்படுவது நல்லவையாக இல்லை. முழுமையான நிதி நிலை அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்றால் குறைந்தது இருபது பதிவுகளாக எழுத வேண்டும் , அதற்கு பதிலாக சுருக்கமாக நிதி நிலை அறிக்கையின் நிதி நிலவர திட்ட அட்டவணை யை மட்டும் எடுத்து ,பழையவைகளை ஒப்பிட்டு எழுதுவோம் மக்களாக தெளிவு பெறாதவரை ஏமாற்ற பட்டு கொண்டேதான் இருப்பார்கள் .வரவு -செலவு என்பதை மட்டும் பார்க்க போகிறோம்

மாநிலத்தின் மொத்த வருவாய் 


மாநிலத்தின் மொத்த வருவாய் இரு பிரிவுகளின் கீழ் நிதி சேர்க்கிறது .

1 ) மாநிலத்தின் சொந்த வருவாய்
 
       a ) . மாநில வரிகள் மூலம் வரும் வருவாய்
       b ) . வரிகள் தவிர்த்த மற்ற வருவாய்

2 ) மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை
     
      a ) . மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் வரிகளில் இருந்து பங்கு .
      b ) . மத்திய அரசு தரும் மானியங்கள்

மேலும் ஒரு பிரிவு திட்டங்களுக்க கடன்கள் மூலம் பெறப்படும் நிதி .

மொத்த வருவாய் 

2012-13 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 1,00,589. 92 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 17.58 % அதிகம்

2011-12 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 82,552.85  கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 21.89 % அதிகம்

2010-11 ஆம் நிதி யாண்டு வருவாய் -70,187.62  கோடி
இது 2009-10 ஆம் நிதி யாண்டு விட 26.7 % அதிகம்

2009-10ஆம் நிதி யாண்டு வருவாய் -55,397.75  கோடி 

ஆண்டுக்கு ஆண்டு வருவாய் பெருக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு. 26.7%  யிலிருந்து 21.89 %  ஆக குறைவதற்கு திமுக அரசு போகும் ஆரமித்து விட்டு போக , சிறந்த நிர்வாகம் தருவோம் என சொல்லி வந்த அதிமுக அரசு முடிவில் வருவாயை இழந்து விட்டது , அதை விட அடுத்த ஆண்டுக்கு 21.89 %  யில் 17.58 % ஆக மதிப்பிடே செய்துள்ளார்கள் என்றால் வருவாய் இழப்பு சரி செய்ய வரிகள் ,விலை உயர்வை செய்தார்கள் , இது தான் சிறந்த நிர்வாகம் போல ...

மொத்த வருவாய் வளர்ச்சி குறைய காரணங்கள் என்ன , மாநிலத்தின் சொந்த வருவாய் பெரும் பகுதி வரிகளை நம்பியுள்ளது , இது முறையாக குறைந்து கொண்டே வந்துள்ளது

மாநிலத்தின் சொந்த வருவாய் பெருக்க என்ன செய்யா வேண்டும் வெறுமன வரிகளை உயர்த்தினால் போதுமா , வரிகள் உயர்வு மக்களை தான் பாதிக்கும் மாறாக உற்பத்தி திறனை அதிக படுத்த வேண்டும் , அதான் மூலம் வருவாய் உயரும் , நமது உற்பத்தியே விவசாயம் சார்ந்த உற்பத்தி அதை அதிகரிக்க வேண்டும் .

மேலும் மத்திய அரசியில் இருந்து கிடைக்கும் வருவாய் , வரி பங்கீடு , மானியம் என்பதே , மத்திய வரி அதிகமானால் நமது பங்கும் அதிகமும் இதற்கும் தீர்வு ஏனைய உற்பத்தியை பெருக்குவது தான் .

வருடத்திற்கு வருடம் அதிகமாக இருக்கு வேண்டிய மத்திய அரசின் மானிய தொகையின் அதிகபடுத்தால் 2010-11 யில் 24.04 % இருந்து 2011-12 யில் 7.65 % ஆக குறைந்து , இப்போது 2012-13 யில் 9.52 % ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

செலவுகள் 

செலவுகளை வட்டியில்ல செலவுகள் , கடன் திருப்பி தருதால் , கடன் களுக்கான வட்டி செலுத்து தால் என சொல்லபடுகிறது .

வட்டியில்ல செலவுகள் 

1. சம்பளங்கள் (கல்விக்கான மானியங்கள் உட்பட )

2.ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பலன்களும்

3.ஊதியம் அல்லாத செயல்பாடுகளும் பராமரிப்புகளும்

4.உதவித் தொகைகளும் நிதி மாற்றங்களும்

5.ஏனைய வருவாய்ச் செலவினங்கள்

6.மூலதன ஒதுக்கீடு

7.நிகரக் கடன் வழங்கல்

2012-13 ஆம் நிதியாண்டு திட்ட மதிப்பீடு - 1,09,476. 73 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 0.65 % குறைந்துள்ளது


2011-12 ஆம் நிதியாண்டு திட்ட மதிப்பீடு - 92,916.11  கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 11.03 % குறைந்துள்ளது


2010-11 ஆம் நிதி யாண்டு வருவாய் -78,425.80  கோடி

ஆண்டுக்கு ஆண்டு செலவுகளை சதவீத அடிப்படையில் தமிழக அரசு. குறைத்து கொண்டு வரவேண்டிய நிலை 11.03 %  குறைந்து இருந்தது அடுத்த ஆண்டும் இன்னும் குறைய வேண்டும் ஆனால் 0.65 %  குறைக்க  திட்டம் மதிப்பீடு செய்தது தான் சிறந்த நிர்வாகம் தருவோம் என சொல்லி வந்த அதிமுக அரசு .

எப்படி செலவுகளை குறைப்பது , ஆடம்பரம் இல்லை என சொன்னலும் முதல்வரின் விமான பயணம் என்பதை தவிர்க்க வேண்டும் .

வட்டி சொலுத்துதல்

2012-13 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 10,945.31 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 18.54 % அதிகம்

2011-12 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 9,233.40 கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 9.81 % அதிகம்

2010-11 ஆம் நிதி யாண்டு வட்டி செலுத்தியது -8,408.45  கோடி
இது 2009-10 ஆம் நிதி யாண்டு விட 26.48 % அதிகம்

2009-10ஆம் நிதி யாண்டு   வட்டி செலுத்தியது -6,648.06 கோடி

வட்டியும் கடனும் வருட வருடம் அதிகமாக செலுத்த வேண்டிய நிலையில் குறைத்து கொண்டே வந்ததுள்ளது .

தொலை நோக்கு திட்டம் 2023 

இந்த திட்டத்தின் அடிப்படையில் தனி நபர் வருமானம் பத்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிக்க போவத சொல்லிருக்கிறார் , அதாவது 600 % பத்து ஆண்டுகளுக்கு என்றால் ஒரு ஆண்டுக்கு 60 % உயர்த்த படவேண்டும் , இந்த ஆண்டு முடிவில் பார்ப்போம் 60 % உயர்கிறத என . தனி நபர் வளர்ச்சி 60 % சத்தியமா என சிந்தித்து திட்டங்கள் போட்டார்களா , இல்லை வெறுமன அறிவிப்பு செய்தால் போதும் என நினைத்து விட்டார்கள் போல .

சங்கரன்கோவிலுக்கு அல்வா 


நிதி நிலை அறிக்கையில் ஆரம்பத்தில் சங்கரன்கோவில் வெற்றியே புகழ்ந்து உள்ளார்கள், அந்த மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமா , அந்த தொகுதியில் ஒரு அரசு கல்லூரி இல்லை என்பதை நிறைவேற்ற முனைய வில்லை , 68, 000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு அல்வா தான் , தொகுதி நெல்லை மாவட்டம் தானே .

கல்லூரி வந்தால் படித்து விவரம் வந்து விட்டால் மறுபடியும் ஓட்டு வித்தியாசம் அதிகமாக கிடைக்காது என்பது உணர்ந்தவர்கள் போல , மக்களுக்கு எப்போது இது புரிய போகுதோ ....

Tuesday, March 27, 2012

நாம் யார் -39

பாகம்-38 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

மதத் துறை

கடவுள் மத மறைப்பு

ஊர் பேர் குணங்குறி யின்றி எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருளை, உருவமின்றிஉள்ளத்தில் கண்டு தொழும் கடவுள் நெறியை, உலகில்முதன்முதல் தெளிவாகக் கண்டவர் தமிழரேயாயினும்,அதனாற் பிராமணர்க்குப் பிழைப் பில்லையென்றும், தமிழர் அறிவொளி பெறக்கூடா தென்றும்,அந் நெறி அடியோடு மறைக்கப்பட்டுள்ளது.

இறைவனொடு தொடர்பின்மை

சிவனியமும் மாயோனி யமும் தூய தமிழ் மதங்களாயிருந்தும், அன்பான தந்தையுடன் அவனுடைய அருமைமக்கள் நேரடியாய்ப் பேச முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, மக்கள் கருத்தை அல்லது விருப்பத்தைத் தானே அவர் கட்குத் தெரியாத அயன்மொழியில் தந்தைக்குத் தெரிவித்தல் போல், கோவிலிலுள்ள பரம திருத்தந்தையும்அருட்கடலுமான இறைவன் உருவிற்கு, தமிழர் தாமே தம்நெஞ்சார்ந்த அன்பு கனிந்த வணக்கத்தைத் தம்தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து,பேரின்பப் பெருமகிழ்ச்சி பெற முடியாவாறு,மேனாட்டினின்று வந்த பிராமணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கி யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழி யாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச்சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank) வரியகத்திலும் பணங் கட்டியவர் திரும்புவது போல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை கேடானதீவினை!

உயிரிழப்பு

சிறந்த சிவனடியாராக ஒழுகிய குற்றத்தினால், நந்தனார் என்னுந் தூயர்,பட்டப் பகலிற் பலர் காணச் சுட்டெரிக்கப்பட்டார். இத்தகைய கொடிய நிலைமையும் 1940ஆம் ஆண்டுவரை தென்னாட்டி லிருந்துவந்தது.

பொருளாட்சித் துறை

பொது விழப்பு 

பிராமணர், மூவேந்தரிடத்தும் கோவலன் போன்ற செல்வரிடத்தும் பல்வகை தானமாகப் பெற்ற பொன்னிற்கும் ஆவிற்கும் நிலத்திற்கும் பிறபொருள்கட்கும் கங்குகரை யில்லை.

சில வகுப்பாரிழப்பு

மாட்டிறைச்சி யுண்ட தனாற் புலையர் என்று இழித்திடப்பட்டு, 11ஆம் நூற் றாண்டிற்குப் பின் தம் தொழிலையும் வருவாயையும்இழந்தனர்.

ஐரோப்பியரும் அவர் வழியினரும்அராபியரும் யூதரும் இன்றும் மாட்டிறைச்சி யுண்பவரே. ஆரியப் பூசாரியரும் வேதக் காலத்தில்அதை விரும்பி யுண்டவரே.

தவத்திற் சிறந்த பரத்து வாசர் தம் புதல்வனுடன் காட்டில் வாழ்கையில், விருது என்னும் தச்சனிடம் பல ஆக்களை வாங்கிக் கொன்றுதின்றார் .

செம்மறியாட்டிறைச்சியால் நான்குமாதம் வரையும், வெள்ளாட் டிறைச்சி யால் ஆறு மாதம் வரையும், காட்டெருமைக் கடா விறைச்சியால் பத்துமாதம் வரையும், தென்புலத்தார் (பிதுர்க்கள்) பொந்திகை (திருப்தி)  யடைகின்றனர் என்று மனுதரும சாத்திரத்திற் கூறப்பட்டுள்ளது.

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண் நுட்பங் களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை.

சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணா மூர்த்தியார் போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கில் கழைப்பார் ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு

மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண்நுட்பங் களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை.

சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணா மூர்த்தியார் போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கிற் கழைப்பார்ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு:மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.



ஊர்ப்பெயர் மாற்றம்

தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பலஊர்ப் பெயர்கள் வட சொல்லாக மாற்றப்பட்டுள்ளன.

எ-டு


தென்சொல் 
வடசொல்
குடமூக்கு - குடந்தை 
கும்பகோணம்
குரங்காடுதுறை 
கபித்தலம்
சிலம்பாறு 
நூபுரகங்கை
சிற்றம்பலம் 
சிதம்பரம்
பழமலை, முதுகுன்றம்
புள்ளிருக்கு வேளூர்
விருத்தாசலம்
வினைதீர்த்தான் கோவில் 
வைத்தீசுவரன் கோயில்
பொருநை 
தாம்பிரபரணி
மயிலாடுதுறை 
மாயூரம்
மரைக்காடு - மறைக்காடு 
வேதாரணியம்

வடமொழியை யெதிர்த்து வெல்லும் வலிமை தமிழுக்கே யிருப்பதால், ஆரியக்
கட்டுப்பாடு தமிழ்நாட்டிலேயே மிகக் கடுமையாகப்புகுத்தப்பட்டுள்ளது.


                                                                                                            தொடரும்........................


Monday, March 26, 2012

நாம் யார் -38

பாகம்-37 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

பண்பாட்டுத் துறை

மறமிழப்பு

ஆயர் குலம், இன்று பெண்டிர் மட்டுமன்றி ஆட வரும் ஆட்டுக்குட்டிகள் என்னுமாறு, அடங்கியொடுங்கி யமைந்தது. அன்று கூற்றுவனும் நடுங்குமாறு கோவர் (ஆயர்) நடத்தி வந்த கொல்லேறு கோடல்விழா இன்று மறவராற் சல்லிக்கட்டு என்னும் பெயரில் காட்சியளவாக நடைபெற்று வருகின்றது. பொதுவர் கல்லூரி அல்லது கோவர் கல்லூரி என்று அழகிய பெயரிடவும் துணிவின்றி, யாதவர் கல்லூரி என்று ஒருவடநாட்டரசன் பெயர் பற்றிய வடசொல்லை ஆண்டுள்ளனர். 

பகுத்தறிவிழப்பு

தமிழருள் தலைமையான குலத்தானாகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளன், பொற்கலத்தில் நன்னீர் கொடுப்பினும் குடிக்க மறுக்கும் பிராமணன், வெள்ளாளனின் மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படும் இடைச்சி, பழமட்கலத்தில் தண்ணீர் கலந்து விற்கும் தயிரை, வானமுதம் போல் வாங்கிக்குடிப்பது கண்டும், தான் அவனின் தாழ்ந்தவனென்று மானமின்றிச் சொல் கின்றான்.

பிராமணரில்லா மற்ற நாடுகளிலெல்லாம் என்றும் மாறக்கூடிய தொழில் பற்றியே மக்கள் வகுப்புகள் ஏற்பட்டிருத்தல் கண்டும் , பிரா மணருள்ள இந்நாட்டில் மட்டும் குலங்கள் இறைவன் படைப் பென்று கருதுவது, பகுத்தறிவின்மையைத் தெளிவாகக்காட்டும்.

தன்மான மின்மை

முதற்குலோத்துங்கன் காலத்தில், பையற் பருவத்து ஆளவந்தார் வித்துவ சனகோலாகலன் என்னும் ஆக்கி யாழ்வானோடு தருக்கித்து, அரசி வேத வுரைப் படிகற்பிழந்தவ ளென்று, வேத்தவையில் அரசன் முன் சொன்னதை அவையோர் ஒப்புக் கொண்டதும் அவ்வாறே நச்சினார்க்கினியரும் தொல் காப்பியவுரை வரைந்திருப்பதும், கோழிக்கோட்டு மன்னரான சாமொரின் குடியினர் தாம்மணந்த பெண்டிரை முதல்முந்நாள் பிராமணன்நுகரவிட்டதும், தமிழரின்அல்லது தமிழ் வழியினரின் தன் மானமின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

நெஞ்சுரமின்மை

திருவரங்கத்தில் அரங்கநாயகி மூக்குத்தியைத் திருடிய பிராமணப்பெண், அத் தெய்வம் ஏறியவளாக நடித்து,கழுநீர்ப் பானையினின்று அம் மூக்குத்தியை எடுத்துக் கொடுத்த போது, தஞ்சை விசயராகவலுநாயக்கர் தண்டியாது விட்டதும்;

இறுதியாக ஆண்ட திருவாங்கூர் மன்னர் இங்கிலாந்து சென்று மீண்டவுடன், அவரது பதுமநாபர் கோவிலுக்குத் தீவைத்த பிராமணப் பூசாரியைத் தீக்கரணியம் வினவியபோது, அது மன்னர் மேனாடு சென்றதனாற் பொங்கிய தெய்வச்சினம் என்று விடையிறுத்ததைக் கேட்டு, வாளாவிருந்ததாகச் சொல்லப்படுவதும்;

தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார், திருநெல்வேலித்திரவியம் தாயுமானவர் தென் மதக் கல்லூரித் திருவள்ளுவர் விழாவிற் சொற்பொழி வாற்றியபோது தடுத்ததும்; தமிழ் திரவிடரின் நெஞ்சுரமின்மையைத் தெற்றெனத் தெரிவிக்கும்.

தமிழ்ப்பற்றின்மை

சில கட்சித்தலைவரும் பாவிசைப் பாளரும், கட்டாய இந்தியை ஏற்பதும் கோவில் தமிழ் வழிபாட்டைத் தடுப்பதும் தாய்மொழிப் பற்றின்மை யாலேயே.

மொழித்துறை

மொழியிழிபு 

சிவனியம் மாலியம் என்னும் இரு மதமும் தோன்றிய தமிழ் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டது.

சொல்லிழிபு

சோறு, தண்ணீர் முதலிய தூய தமிழ்ச்சொற்கள் பள்பறை வழக்கென்று தமிழராலும் பழிக்கப்பட்டன.

சொல் வழக்கு வீழ்வு 

கழுவாய் (பிராயச்சித்தம்), சூள்(ஆணை) முதலிய நூற்றுக்கணக்கான அருமை யான தமிழ்ச்சொற்கள்,வழக்கு வீழ்த்தப்பட்டன.

சொல்லிறப்பு

ஆயிரக்கணக்கான இரு வழக்குத் தமிழ்ச் சொற்களும் இறந்துபட்டன.இறந்த சொற்கு என்றும் எடுத்துக் காட்டில்லை.

சொற்பொருளிழப்பு

உயிர்மெய் என்பது, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட உயிரொடு கூடிய மெய் (living thing).பிராணி என்னும் வடசொல் வழக்கினால்,உயிர்மெய் என்னும் சொல் தன் பொருளை இழந்தது,உயிரி என்றொரு சொல்லுந் தோன்ற வில்லை.

புஜம் என்னும் வடசொல் வழக்கினால்,தோள் என்னும் தமிழ்ச் சொல் தன் பொருளையிழந்து, தோள்பட்டையைக் குறித்து, சுவல் என்னும் தென் சொல்லை வழக்கு வீழ்த்தியும் உள்ளது.

தமிழையும் தமிழ்ச்சொற்களையும் போற்றிக் காக்க வேண்டு மென்னும் உணர்வு, இன்றும், முப்பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர்க்கும் கல்வியமைச்சர்க்கும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கும் இல்லை.

இலக்கியத் துறை

பல்லாயிரக் கணக்கான முதலிரு கழக நூல்களும் பெயருமின்றி அழிக்கப் பட்டுவிட்டன. தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர,கிறித்துவிற்கு முற்பட்ட எல்லா நூல்களும் இல்லாவாயின. பொது விலக்கியத்தைச் சேர்ந்த, பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பாடற்றிரட்டுகளும் கீழ்க்கணக்குப் பனுவல்களும் அல்லாது, அறிவியலும் கலையும் பற்றிய கடைக்கழகக்காலச் சிறப்பிலக்கியம் ஒன்று கூட இன்றில்லை.பதிற்றுப்பத்து முதலும் ஈறும் இன்றி நிலை பெற்றுவிட்டது. அகத்தியம் முதுநாரை பரதம் ஆகிய முத்தமிழ்ப் பிண்ட நூல்களும், அவற்றிற்கு முந்திய முத்தமிழ் மாபிண்ட நூல்களும் இறந்துபட்டன.

பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத்தேவர், அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான அரிய பண்டைத் தமிழ் ஏட்டுச்சுவடிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கக்கட்டடத்தில் ஐந்திலே ஒன்று வைக்கப்பட்டன.

ஆரியக் கருத்துகளைப் புகுத்தித்தமிழிலக்கியத்தை ஆரிய வண்ண மாக்கு தற்பொருட்டே, தொல்காப்பியர் காலம் முதல், நூல்களும் நூலுரைகளும் பிராமணத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக் கின்றன.

பிராமணர் அண்டிப் பிழைக்க வந்தஅயலினச் சிறு குழுவாரா யிருந்தும், தமிழ்நாட்டுக் கோவில்களில், தமிழர்க்குப் பயன்படா வாறும், தமிழ் கெடுமாறும், பல கல்வெட்டுகள் வடமொழியிற் பொறிக்கப்பட்டுள்ளன.

                                                                                                               தொடரும் .......................

Sunday, March 25, 2012

நாம் யார் -37

பாகம்-36 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

இனஇழிபு

முதல் நிலை 

பார்ப்பாரும் அந்தணரும் (ஐயரும்) பிராமணரேயென்று,தமிழப் பார்ப்பாரும் அந்தணரும் தம்நிலையினின்று தள்ளப்பட்டமை.

இரண்டாம் நிலை 

உழுவித்துண்ணும்வேளாளராகிய வெள்ளாளரும் சூத்திரருள் அடக்கப் பட்டமை.

மூன்றாம் நிலை

 அரசரும் வணிகரும்உட்படத் தமிழ ரெல்லாரும் சூத்திரர் எனப்பட்டமை.
வெள்ளாளர் தம்மை உயர்த்தக் கருதிச்சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டது சிரித்தற்குரிய செயலாம்.

நாலாம் நிலை 

 இசை நாடகத்தொழிலும் உழவுத் தொழிலுஞ் செய்து வந்த சிலவகுப்பாரைத் தீண்டாராக்கி, அவரை ஐந்தாங்குலத்தினர் (பஞ்சமர்) என்றமை.
முதற்கண் பாணரும், பின்னர்ப் பறையரும், அதன்பின் பள்ளரும் தீண்டாராக்கப் பட்டனர். இறுதியில் சான்றாரையும் தீண்டாராக்கத் தொடங்கினர். ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் கிறித்தவ நெறியும் பரவியதால், சான்றார் விழித்தெழுந்து தப்பிக்கொண்டது மன்றித் தம்மை உயர்த்தியுங்கொண்டனர்.

சில வகுப்பார்தீண்டாராகவே,அவருக்குப் பணி செய்யும் வண்ணானும் மஞ்சிகனும்(மயிர்வினைஞனும்) ஆகிய குடிமக்களும், பூசை செய்யும்பண்டாரமும் தீண்டாராயினர்.

ஐந்தாம் நிலை 

தீண்டார் நாளடைவில் பிராமணருக்குக் காணார் ஆக்கப்பட்டனர். அதனால், தீண்டுவார் ,தீண்டார் ,அண்டார்,காணார் எனத் தமிழர் பிராமணரை நோக்கி நால்வகைப்பட்டனர்.

ஆறாம் நிலை

தீண்டார் மேல் வகுப்பாரான தமிழருள்ளும் சிலர்க்கு 30 எட்டுத்தொலைவிலும் சிலர்க்கு 60 எட்டுத் தொலைவிலும் விலகி நிற்க நேர்ந்தது.

ஏழாம் நிலை 

மலையாள நாட்டுத்தீண்டாருள் ஒரு வகுப்பாரான நாயாடிகள், தமிழருக்கும் அல்லது மலையாளியர்க்கும் காணார்ஆயினர். தாழ்த்தப்படாத தமிழக் குலத்தாருள்ளும்,உயர்வு தாழ்வுபற்றி ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டது.

பிராமணர்,நிறத்திலும் துப்புரவிலும் நாகரிகத்திலும் தமக்கு எத்துணையும் தாழ்வில்லா மரக்கறி வெள்ளாளர் சமைத்ததையும் தொட்ட உணவை கூட இன்றும் உண்பதில்லை. தமிழருள் மரக்கறி வெள்ளாளரே தலைமையாகக் கருதப்படுபவர். அவருந் தாழ்த்தப்பட்டதனால், தமிழினம் முழுதும் தாழ்த்தப் பட்டதேயாகும். இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே யாவர். 

பிராமண உணவுச்சாலைகளில், முதலில்,தமிழர் தலைவாயிலை யடுத்த கூடத்திலும், பிராமணர் மறைவான உள்ளறையிலும் படைக்கப்பட்டனர். அன்று,பிராமணர் எச்சிலையினின்று கறிவகைகள் எடுத்துத்தமிழர்க்குப் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் கண்ணாரக் கண்டு, தாமரைத் திரு. வ.சுப்பையாப் பிள்ளையிடம் சொல்லியிருக்கின்றார். நாகர்கோவில் வாணரான ஆறுமுகம் பிள்ளை என்னும் தொடக்கப்பள்ளி யாசிரியர், ஒருபிராமண உணவுச் சாலைக்கு உண்ணச் சென்றபோது, இத்தகைய இழிசெயலைக் கண்ணாரக் கண்ட அவருடைய பிராமண நண்பர், அவரை உண்ண வேண்டா வென்று தடுத்ததாக, அவர் காலஞ் சென்ற பர். இராசமாணிக்கனாரிடம் சொல்லியிருக் கின்றார். தில்லைஇராமசாமிச் செட்டியார் உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் திரு. சாமிநாத முதலியாரும்,அவர்தந்தையார் ஒரு பிராமணர் வீட்டில் இத்தகைய இழிநிலைக்கு ஆளாக விருந்து தப்பியதாக சில புத்தகக் குறிப்பில் இருக்கிறது

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தில்லையில் ஒரு பிராமண உணவுச் சாலையில் ,'பிராமணர்க்கு மட்டும்' என்று ஒரு பலகை தொங்கவிடப்பட்டு இருந்தகாக சொல்லபடுகிறது

1928-லிருந்து 1934 வரை இராசமன்னார்குடி பகுதியில் , கீரங்குடிக் கோபாலையர் உண்டிச்சாலையில், தமிழர்க்கு எடுப்புச் சாப்பாடும் இல்லா -திருந்துள்ளதாம்.

தமிழர் இங்ஙனம் தாழ்த்தப்பட்டும், பிராமணனை எதிர்க்காது, தமக்குள்ளேயே, "என்குலம் உயர்ந்தது, உன் குலம் தாழ்ந்தது" என்றும்,"எனக்கெதிரில் நீ செருப்பணிந்து நடக்கக்கூடாது" என்றும், "மேலாடையை வல்லவாட்டாக அணியக் கூடாது" என்றும், "திருமணவூர்வலத்தில் நீ பல்லக் கேறக் கூடாது" என்றும்,"குடை கொடி பிடிக்கக்கூடாது" என்றும், பலவாறுபிதற்றிக் கலாமுங் கலகமுஞ் செய்து வருவாராயினர்.

வலங்கை இடக்கை வழக்காரம்

குலப்பட்டம், குடை ,கொடி ,பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகை குதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலிய ஊதிகள், வல்லவாட்டு, செருப்பு ஆகியவை பற்றிக்குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும் ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும் பெயர்கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அவ் வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம்அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரே பக்கத்தில் இருந்திருக்க முடியாது.

இருகையிலும் பல குலத்தார் சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும், இடங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருதஇடமுண்டு.

சோழராட்சிக்குப்பின் பல்வேறரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை யிடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்ததுள்ளது . 1809ஆம் ஆண்டு சூலை மாதம் 25ஆம் தேதி , செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத்தீர்ப்பாளர் சார்சு கோல்மன் (GeorgeColman) துரை, அவ் வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டஞ் செய்துள்ளார்.

வலங்கைக் குலங்கள்

வேளாளன், அகம்படியான், இடையன், சாலியன், பட்டணவன், சான்றான்,
குறவன், குறும்பன்,  வள்ளுவன், பறையன் முதலியன.

இடங்கைக்குலங்கள்

கம்மாளன், பேரிச் செட்டி, நகரத்துச் செட்டி, கைக்கோளன்,பள்ளி (வன்னியன்),
வேடன்,  இருளன், பள்ளன்,  இரட்டைமாட்டுச் செக்கான் முதலியன. 

இடங்கையினும் வலங்கை பெருங்கை.மேளகாரன், கணிகை (தாசி), பணி செய்வோன் முதலிய குலங்களில் இருகையு முண்டு. ஒருசில குலங்களில் ஆடவர் ஒரு கையும் பெண்டிர் ஒரு கையும் ஆவர். வடுக கன்னடநாடுகளிலும் இவ் வகுப்புகள் இருப்பதால், அந்நாட்டுப் பகுதிகள் 11ஆம் நூற்றாண்டிலும் தமிழ்நாடாயிருந்தமை அறியப்படும்.

"இத் தமிழ்நாட்டில் ஒவ்வொருநகரத்திலும் சிற்றூரிலும் இடங்கை யார் , வலங்கை யார் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் வசிக்குந் தெருவி ல்மற்றொருவர் வசிப்ப தில்லை. 

சுபாசுபப்பிரயோசனங்களிலும் ஒருவரிருக்கும் வீதி வழியாகமற்றொருவர் ஊர்வலம் வருவதில்லை. பிரேதங்கொண்டு போவ தில்லை. கருமாதி யிலுமப்படியே. இருவருக்கும் பொது வாயுள்ள வீதியில் போவதற்குத் தடையிராது. சுவாமிகளுக்கு உற்சவாதிகளும்அந்தந்தக் கட்சிகளிலுள்ள வீதிகளிலே தான் நடத்துவார்கள்"

கல்வியிழப்பு

வேதம் முதலிய பன்னூலொடு பல்கலையும், பிராமணர்க்கு ஊணுடையுடன் வேத்தியற் செலவிற் கற்பிக்கப் பட்டன.தமிழர்க்கு மூவேந்தரும் ஒரு கல்வி சாலையும் ஏற்படுத்த வில்லை.

நடுநிலை நயன்மை யிழப்பு

மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணக் குற்றவாளிக்குக்கொலைத் தண்டனை யிட்டதனால்,அப் பிராமணன் ஆவி அவனை நெடுநாள் அலைக் கழித்ததென்று ஒரு கதை கட்டப்பட்டுள்ளது. மலையாள நாட்டிற் பிராமணனுக்குக் கொலைத் தண்டனையில்லை யென்று சட்டமிருந்தது.

முன்னேற்றத் தடை

 தமிழன் தன்முயற்சியினால் இம்மையில் தன் நிலைமையையுயர்த்தினாலும், தன் குலத்தை மறுமையில் தான் மாற்ற முடியும் என்றும், சூத்திரன் பல பிறப்பில் தவஞ்செய்து வைசியனாகலா மென்றும். இங்ஙனமேவைசிய நிலையிலும் சத்திரிய நிலையிலும் முயன்ற பின்னரே இறுதியிற் பிராமணனாக முடியு மென்றும், ஒருதிரிவாக்கக் (Evolution)கொள்கை புகுத்தப்பட்டது. இதை நம்பி ஏராளமானபொருளை வேள்வியிற் செலவிட்ட பேதையர் எத்தனையோ பேர்! இனி, ஆறு தாண்டலையும் கடல்கடத்தலையும் தடுத்தது அறிவு வளர்ச்சித்தடையாகும். 

                                                                                                தொடரும்...................

Saturday, March 24, 2012

நாம் யார் -36

பாகம்-35 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

ஆரிய அட்டூழியத்தால் தமிழர்க்குவிளைந்த கேடுகள்

(1) குமுகாயத் துறை

ஒற்றுமைக் கேடு: நால்வரணக் கட்டுப்பாடு



சோழ பாண்டி நாடுகள்

பிராமணர் ஊர்ப்பெயர்

சதுர்வேதிமங்கலம் 

பிராமணர் தெருப்பெயர்

அக்கிரகாரம்  

பிராமணர் வீட்டுப்பெயர்
அகம்

சேர(மலையாள)நாடு

வீட்டுப் பெயர்கள்:

பிராமணன் - இல்லம், மனை

நாயர்(பொது) - வீடு

நாயர் (தலைவன்) - இடம், தரவாடு

கொல்லர், சாலியர், ஈழவர்முதலியோர் - புரை, குடி.

கோவில் பணியாளன் - வாரியம், பூமடம்

பறையன் (குடி) - சேரி

செறுமன் - சாலை

                                                                                                  தொடரும்................

Friday, March 23, 2012

நாம் யார் -35

பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

வேடன்

தொழில் - வேட்டையாடல்

பட்டம் - நாய்க்கன்.

வேட்டுவன்

வகை - (1) மலை வேட்டுவன்.

தொழில் - வேட்டையாடல், பயிரிடல்.

பட்டம் - நாய்க்கன், கவுண்டன்.

(2) பாலை வேட்டுவன் (பண்டைக்காலத்தான்).

மறைந்த குலங்கள்

இறங்கு சாத்து (செட்டிகளுள் ஒரு சாரார்), எயினர் (பாலை வாணர்), கணவாளன்,  நாட்டார் (தென்னார்க்காடு உழவர் வகுப்பார்), மழவர் (மழநாட்டுப் போர்மறவர்), மறமாணிக்கர் (மறக்குடியினர்) முதலியன. இறவுளன், கடம்பன், களப்பாளன்,  காடவன், காடுவெட்டி முதலியனவும் மறைந்த மறந்து போன குலங்கள்.

மலைவாழ் குலங்கள்

காடர் (ஆனைமலை), குன்றுவர் (பழனிமலை),பழியர் (குட மலை), மலையாளி (சேரவரையன் மலை, பச்சைமலை, கொல்லி மலை), மலசர் (ஆனைமலை), மன்னான் (குடமலை), முதுவர் (நீல மலை, ஏலமலை) முதலியன.

புதுக் குலங்கள்

புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்), வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டைவட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)

மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

சமணர், பவுத்தர், கிறித்தவர்,முகமதியர்.

மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள்

ஆங்கிலம்-சட்டைக்காரர்.


திரவிடம்- (1) சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.
                   
                     (2) கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள்.

                     (3) வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள்.

                   (4) நீலமலைத் தமிழக் குலங்கள்.

அந்த நாடுகளின் இருந்த தமிழ் குலங்கள் தான் திராவிடர்கள் மாறாக மலையாளிகளோ , ஆந்திரா மக்களோ , கர்நாடக மக்களோ திராவிடர்கள் இல்லை , இங்கு இருந்து போன தமிழ் குலங்கள் தான் அவர்கள் .

மூவகைத் திரவிடக் குலங்கள்

(1) பெயர் மாறாதவை :  கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்),   வெளுத்தேடன் (வண்ணான்).

(2) பெயர் திரிந்தவை: ஈடிக, கொறச்ச, சோடர்.

(3) பெயர் மாறியவை: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு).

குலமுயர்த்தும் வழிகள்

ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச்சோறுண்ணல்.

உடை- பிராமணர்போல் கச்சங்கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல்.

அணி - ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர் நூற்கயிற்றில் தாலி கோத்தல்.

குலப்பெயர் - குலப்பெயரை மாற்றுதல் அல்லது பட்டப்பெயரைக் குலப்பெயராக ஆளுதல்.

ஆட்பெயர் - வர்மன் குப்தன் என்னும் கடைசி வார்த்தைகளை கொண்ட வடசொற் பெயர் பூணல்.

பட்டம் - பிள்ளை, முதலியார், செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல்.

மணவுறவு - மேற்குலத்தில் பெண்கொள்ளல்.

மொழி- இயன்ற வரை வடசொல் கலந்து பேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருத நூலெழுதுதல், அல்லது செய்யுளியற்றல்.

பழக்கவழக்கம் - ஆடவர் காலையில் சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை.

பூசாரி - இருவகைச் சடங்கிற்கும் பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல்.

ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன் வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப் பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல்.

ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லது தொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப் பின்பற்றல்.

சவ முடிவு - எரிப்பு.

இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச்சார்பான வெல்லாம் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகைமிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பே பொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும்.

குலப்பட்டம் தோன்றிய வகைகள்

(1) முன்னோர் பதவி - (படை) முதலியார், படையாட்சி.

(2) முன்னோர் வேந்தனால் பெற்ற சிறப்பு - ஏனாதி, காவிதி, வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை.

(3) முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான்.

(4) முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலைமான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு).

(5) ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான்.

(6) தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள்.

(7) தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை).

(8) அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம்.

(9) சிற்றரசன் தொடர்பு - வளுவாதி, தொண்டைமான்.

(10) பத்திநெறியாட்சி - ஆண்டி.

(11) வேந்தன் தொடர்பு - தேவன்.

(12) குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி.

                                                                                                      தொடரும்......................

Thursday, March 22, 2012

நாம் யார் -34


பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)

வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் இயல்புங் கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார்,6ஆம் நுறாறாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்துள்ளனார்.

அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்த சோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும் பிடுகு முத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர்வழியினரே.

தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பிய முத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர் வகுப்பினர், முத்தரையரின் படைமறவர் வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்தில் புல்லியும் பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்ற கள்வர் கோமான்கள் பலர் இருந்தமை வெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர் மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.

முதலியார்

குலங்கள்

 (1) வேளாண் முதலியார் மூவேந்தர் காலத்திற் படை முதலியாராய் (படைத்தலைவராய்) இருந்தவரின் வழியினர்.

(2) செங்குந்த முதலியார் அல்லது கைக்கோள முதலியார் (சோழர் படை மறவராகவும் படைத் தலைவராகவும் இருந்தவரின் வழியினர்).

(3) அகம்படிய முதலியார் (கொத்தவேலை செய்பவர்).

பட்டங்கள்

(1) இலங்கை யரசியலார் வழங்கும் சிறப்புப் பட்டம்.

(2) தஞ்சை மாவட்டச் சமணருள் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டம்.

வண்ணான்

பெயர் விளக்கம் - ஆடைகளை வெளுத்து வண்ணமாக்குபவன்.

பெயர்கள் - வண்ணான், வண்ணத்தான், ஈரங்கொல்லி (ஏகாலி), காழியன்.

பிரிவு - இடம் பற்றியது. பாண்டிய வண்ணான், சோழிய வண்ணான், கொங்க வண்ணான்.

நிலைமை பற்றியது: தீண்டுவான் , தீண்டாதான்.

வல்லம்பன்

இடம் - தஞ்சை திருச்சிராப்பள்ளி மதுரை மாவட்டங்கள்.

தொழில் - பயிர்த்தொழில்.

தலைவன் பட்டம் - சேர்வைகாரன்.

குலப் பட்டம் - அம்பலகாரன்.

வலையன்

பெயர் - வலையன், வலைகாரன், வேடன்,சிவியான், குருவிக்காரன்

தொழில் - வலை வைத்துப் பறவை விலங்குபிடித்தல், ஆறு குளங்களில் மீன் பிடித்தல்.

பிரிவு - பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலகாரன், கம்பளியன்.

குலப் பட்டம் - மூப்பன், சேர்வை, அம்பலகாரன், வன்னியன்.

வாணிகன்

வகை - அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன் (இறைச்சிக் கடைகாரன்).

வாணியன்

வாணிகன்-வாணியன்.

வகை- (1) எண்ணெய் வாணியன், (வாணியன், செக்கான்,சக்கரத்தான்).

              (2) இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்).

பட்டம் - மூப்பன், பிள்ளை.

வில்லி

வேடருள் ஒரு பிரிவான் (வில்வேடன்).

வெள்ளாளன்

உழுதுண்ணும் வேளாளனாகிய காராளனுக்குஎதிரானவன், உழுவித்துண்ணும் வேளாளனாகிய வெள்ளாளன்.

களமன் x வெண்களமன்.

வகை- (1) பாண்டி(ய) வெள்ளாளன்.

பிரிவு - கார்காத்த வெள்ளாளன், சிவனிய (சைவ) வெள் ளாளன், கோட்டை வெள்ளாளன், நங்குடி வெள்ளாளன், அரும்பூர் (சிறுகுடி) வெள்ளாளன், நீறு பூசி வெள்ளாளன்.

(2) சோழிய வெள்ளாளன்.

(3) தொண்டைமண்டல வெள்ளாளன்.

(4) துளுவ வெள்ளாளன்.

பட்டம் - பிள்ளை.

(5) கொங்கு வெள்ளாளன்.

பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள்.

அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள்.

தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்

குலப்பட்டம் - கவுண்டன்.

காமிண்டன் - கவுண்டன். மிண்டு = வலிமை. மிண்டன் - வல்லோன். காமிண்டன் = காவலன், தலைவன்.

காமிண்டன் - காவண்டன் = கவண்டன்-கவுண்டன்.

(6) அகம்படிய வெள்ளாளன்.

     "கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன்
     மெள்ளமெள்ள வந்து வெள்ளாளன் ஆனானே".

(7) காரைக்காட்டு வெள்ளாளன்.

(8) அரும்புகட்டி வெள்ளாளன்.

(9) கும்பிடு சட்டி வெள்ளாளன்.

(10) ஆறுநாட்டு அல்லது மொட்டை வெள்ளாளன்.

(11) மலைகாணும் வெள்ளாளன்.

(12) சங்குத்தாலி வெள்ளாளன்.

                                                                                                           தொடரும் ..................

Wednesday, March 21, 2012

நாம் யார் -33

பாகம்-32 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பள்ளன்

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின்தென்பாகம்.

தொழில் - பயிர்த்தொழிலும் பண்ணை வேலையும்.

பிரிவு - அம்மாப் பள்ளன், அஞ்ஞாப்பள்ளன், ஆத்தாப்பள்ளன், பணிக்கன், கடையன் முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - குடும்பன்,நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், நாட்டுமூப்பன்.

குலப்பட்டம் - குடும்பன், பண்ணாடி(பண்ணையாடி), மன்றாடி, மூப்பன்.

பள்ளி (வன்னியன்)

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின் வடபாகம்.

பெயர் - பள்ளி, வன்னியன், செம்பியன்.

தொழில் - பயிர்த்தொழில்,வாணிகம், கொல்லற்று (கொத்த) வேலை, பண்டைநாளில் சிலர் படை மறவர்.

பிரிவு - அரசு, பந்தல்முட்டி, அஞ்சுநாள்,கோவிலர், ஓலை முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - கவுண்டன், பட்டக்காரன், கண்டர், சம்புவராயன், நாயகர், நயினார் முதலியன.

குலப் பட்டம் - கவுண்டன், படையாட்சி, நாய்க்கன், பிள்ளை, இராயன் முதலியன.

வன்னி என்பது ஒரு மரவகையைக்குறிப்பின் தென்சொல்; நெருப்பைக் குறிப்பின்வஃனி (vahni) என்னும் வடசொல்.

கதிரவன் திங்கள் நெருப்பு என்னும் முச்சுடரும், முறையே, சோழன் பாண்டியன் சேரன் ஆகிய மூவேந்தர் குலத்திற்கும் முதலாகக் கொள்ளப்பட்டன. பண்டைத் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தது. அவருக்கடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்தாண்டனர். வன்னியைக் காவல் மரமாகக்கொண்ட குறுநில மன்னர், உடையார்பாளையம் வேளைப்போற் சோழநாட்டுப் பகுதிகளைஆண்டிருக்கலாம். வன்னியர் என்பது குறுநில மன்னரையே குறிக்கின்றது. கடம்பர் என்னும் சொல்லைப்போல் வன்னியர் என்பதையுங்கொண்டால். அது தென் சொல்லேயாகும்.கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்திலேயே,வடசொல் தமிழரசர் பெயர் வழக்கில் புகுந்தது;குலப் பிரிவும் தலையெடுத்தது.

இனி, வன்னியன் என்னும் சொல்,கள்ளர் வலையர் முதலிய சில குலத்தாரின் பட்டப்பெயராக வழங்குவதையும் அறிதல் வேண்டும்.சத்திரியன் (க்ஷத்ரிய) என்னும் வடசொல், வல்லபம் என்னும் பொருளதே. ஆதலால், வன்னியர்குல வல்லபர் என்று வழங்குவதே. இக்காலத்திற் கேற்றதும் மோனையழகு அமைந்ததுமாகும்.

பறம்பன்

இடம் - திருநெல்வேலி, மதுரை,புதுக்கோட்டை.

தொழில் - தோல் வேலையும் சுண்ணாம்புக்கல் சுடுதலும், செருப்புத் தைக்கும் தமிழக் குலத்தான் இவனே. செம்மான் (சருமன்) என்பது வடசொல்.

பறையன்

பெயர் - பறையன், புலையன்.

தொழில் - பறையடித்தல், பறையறைந்து விளம்பரஞ் செய்தல், முரட்டுத்துணி நெய்தல், கூலிவேலை செய்தல், பிணஞ்சுடுதல்.

பிரிவு - பல புறமணப் பிரிவுகள்.

பட்டம் - சாம்பான், மூப்பன், பிள்ளை.

பாணன்

பெயர் விளக்கம் - பண் = பாட்டு, இசை. பண் - பாண் - பாணன் = பாடகன், இசைத் தொழிலாளன்.

தொழில் - பண்டு : வாய்ப்பாட்டு, குழலிசை, யாழிசை.

இன்று : தையலும் கூத்தும் (தமிழ்நாடு).

கூடை கட்டல், மீன் பிடித்தல்,பேயோட்டல் (மலையாள நாடு).

பட்டம் - பணிக்கன்.

மறவன்

இடம் - பாண்டிநாடு.

தொழில் - பண்டு : போர்த் தொழில்.

இன்று : காவல், பயிர்த்தொழில்,கல்வித்தொழில்.

பிரிவுகள் - 38

நாட்டார்,மணியக்காரர், காரணர், கொத்தளர், சீத்தல்,சேர்வைகாரர், தோலர், பண்டாரம்,வேடங்கொண்டார், செட்டி, குறிச்சி, வேம்பன்கோட்டை, செம்பிநாடு, குன்றமான் நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஒரியூர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, தும்பை, உப்புக்காடு, அஞ்சுகொத்து, கொண்டையன் கோட்டை, தொண்டைநாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசிகட்டி,கன்னிகட்டி, கயிறு கட்டி, அணிநிலக் கோட்டை.

5 நாடுகள்

செம்பிநாடு, அம்பநாடு, கிழவைநாடு, அகப்பாநாடு, ஆமைநாடு.

5 கோட்டைகள்

செம்பிநாட்டுக் கோட்டை, கொண்டையன்கோட்டை, கருத்தக்கோட்டை, செகக்கோட்டை, அணிநிலக்கோட்டை.

50 கிளைகள்

செம்பியன், வெட்டுவன், வீரமன், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு, அறியாதான், கோபாலன், மங்கலம், சுந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கினியான், வீணியன், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மருவீடு, வாப்பா, நாச்சாண்டி, அமர், கருப்புத்திரன், வெட்டியான், மாப்பான சம்பந்தன், சேதுரு, அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப் பிரை, நங்கண்டா, பாச் சாலன், சாலா, இராக்கி, வன்னி, பண்டாரம், விடிந்தான், கருங்குளத்தான், பறையன்குளத் தான், மகுடி, அம்மியடுக்கி, அடு கலை, எருமைக்குளத் தான், கீரைக்குடியான், இத்தி, விளிந் திட்டான், வயநாடு, வெம்பக்குடி.

கொண்டையன் கோட்டையார் கொத்தும் கிளையும்-ஒன்பது கொத்தும் பதினெண் கிளையும்.

கற்பகக் கொத்து - மருதீசர் கிளை, அகத்தீசர் கிளை.

கமுகங் கொத்து - வீணியன் கிளை,பேர் பெற்றான் கிளை.

மல்லிகைக் கொத்து - சேதா கிளை,வாள்வீமன் கிளை.

முந்திரிக் கொத்து - வெட்டுவன் கிளை,அழகுள்ள பாண்டியன் கிளை

ஏலக்கொத்து - குடையன் கிளை, அரசுமான் கிளை.

மிளகுகொத்து - செகமண்டலாதிபன் கிளை, வீர முடிதாங்கினான் கிளை.

நற்சீரகக்கொத்து - நாட்டை வென்றான் கிளை,தருமர்கிளை.

தக்காளிக்கொத்து - சங்கரன் கிளை, சாத்தான் கிளை.

தென்னங்கொத்து - ஒளவை கிளை, சாம்புவன் கிளை.

பட்டம்-தேவன், தலைவன், கரையாளன்,சேர்வைகாரன்.

                                                                                                       தொடரும்....................

Tuesday, March 20, 2012

நாம் யார் -32

பாகம்-31 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

செட்டி


பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது. 

பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.

(1) வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).

(2) வாணியச் செட்டி.

        தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

        பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி   என நான்கு.

(3) நாட்டுக் கோட்டைச் செட்டி

     தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
     பிரிவு - ஒன்பது கோவில்கள்.

(4) நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்) 

(5) காசுக்காரச் செட்டி.

     தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

(6) பேரிச் செட்டி.

     தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.

    பிரிவு - திருத்தணியார்,அச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப்  பிரிவுகள்.

(7) கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்) 

       தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.

(8) மளிகைச் செட்டி. 

      தொழில் - பலசரக்கு விற்பனை.

(9) மஞ்சட்குப்பத்துச் செட்டி

(10) பன்னிரண்டாஞ் செட்டி.

செம்படவன்

தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல்,  ஓடமும் பரிசலும் விடுதல்.

பிரிவு - ஏழ் நாடுகள் அல்லது புறமணப்பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.

குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.

பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.

தேவடியாள்

தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.

வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.

தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.

தொண்டைமான்

பெயர் - தொண்டைமான், சுண்ணாம்புக்காரன்.

தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல்,மேளம் தட்டுதல், இசைக் குழலூதல்.

பட்டம் = சோழகன்.

நளவன்

தொழில் - கள்ளிறக்குதல் (யாழ்ப்பாணம்).

பட்டணவன்

இடம் - கிருட்டிணாமுதல் தஞ்சை வரை கடற்கரை.

பெயர் - பட்டணவன், கரையான்.

தொழில் - கடல்மீன் பிடித்தலும் வாணிகமும்.

பிரிவு - பெரிய பட்டணவர் , சின்னப்பட்டணவர்.

பட்டம் - செட்டி.

பண்டாரம்

பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.

பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).

பணிக்கன்

பெயர் - இல்லத்துப் பிள்ளை.

தொழில் - நெசவும் வாணிகமும்.

பிரிவு - பல புறமண இல்லங்கள்.

பட்டம் - பணிக்கர்.

பணிசெய்வோன் (பணிசவன்)

தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).

கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).

பிரிவு - வலங்கை, இடங்கை.

பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.

பரத்தை

பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.

வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.

பரவன்

பெயர் - பரவன், பரதவன், பரதன்.படவன்-பரவன்.

இடம் - தஞ்சைக்குத் தெற்கில் குமரி வரை கடற்கரை.

தொழில் - கடல் மீன் பிடித்தலும் கடல்வாணிகமும்.

பட்டம் - செட்டி.

பரிவாரம்

வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.

தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.

பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.

பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.

                                                                                                       தொடரும்............................

Monday, March 19, 2012

நாம் யார் -31


பாகம்-30 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

ஊராளி

தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில்.

பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண   உட்பிரிவுகள் உண்டு.

பட்டம் - கவுண்டன்.

ஓதுவார்

தொழில் - சிவன் கோவிலில் பூசைசெய்தல்.

இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர்.

பட்டம் - ஓதுவார்.

கடசன்

தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல்.

பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள்.

பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன்.

கணக்கன்

தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல்.

பிரிவு - சீர், சரடு, கைகாட்டி,சோழியன் என்னும் நான்கு.

பட்டம் - பிள்ளை.

கணிகை (பெண்)

தொழில் - நாடக வரங்கிலும் கோவிலிலும் நடஞ்செய்தல்.

பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை.

கள்ளன்

பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் (பசுக்கூட்டங்களைக்களவில் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.

தொழில்-பண்டைநாளில் போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும் கல்வித் தொழிலும்.

பண்டை இடம் - சோழநாடு.

பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள்.

தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி

குலப் பட்டம்- நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன.

காராளன்

காராளர் உழுதுண்ணும் வேளாளர்.

சேலம் சேர்வராயன் (சேரவரையன்) மலையாளிகளுள் ஒரு சாரர் தம்மைக் காராளர் என்கிறார்கள்.

குசவன்

தொழில் - மட்கலம் வனைதல்.

பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை.

குடிமகன்

தொழில்- பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery).

பிரிவு - தீண்டுவான், தீண்டான்.

பட்டம் - பண்டிதன்.

குலப்பிள்ளை(சாதிப்பிள்ளை)

தொழில் - இரப்பு.

குலம்-  இரப்போன் , நோக்கன் ,கொங்கு வெள்ளாளன் ,முடவாண்டி, கைக்கோளன் ,பொன்னம்பலத்தான், பேரிச்செட்டி ,வீரமுட்டி

குறவன்

தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல்.

பெண்களின் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.

பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.

ஊர்க்குறவன் பிரிவு - தப்பை(மூங்கில்வேலை), கொங்கன், உப்பு.

பல அகமணப் பிரிவுகள்.

மலங்குறவன் பிரிவு - குன்றக் குறவன், பூங்குறவன் (வேலன்), காக்கைக் குறவன் (கக்கலன்), பாண்டிக் குறவன் (நாஞ்சில் குறவன்).

நாடோடிகள்-காளிக்கோட்டம் வரை பல்வேறு நாடு சென்று,அந்த அந்த  நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர்.

குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.

தலைவன் பட்டம்-பெரிய மனிதன்(மனுசன்), ஊராளி, பணிக்கன்.

குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.

குறும்பன்

தொழில் - குறும்பாடு மேய்ப்பு, முரட்டுக் கம்பளி நெசவு, தேனெடுப்பு முதலியன.

பிரிவு - காட்டுக் குறும்பு ,நாட்டுக்குறும்பு.

தேன்(ஜேன்) குறும்பு , பன்றிக் குறும்பு முதலியன உட்பிரிவுகள்.

பட்டம் - மூப்பன்.

கைக்கோளன்

பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுபகுதி தென் பகுதியும்).

செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).

கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.

கோலன் - கோளன். குழல்-கோல். கையில் செங்குந்தம் பிடித்திருந்த போர்ப்படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.

தொழில் - நெசவு.

பிரிவு (சில இடங்களில்) - சோழியன், இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவகவிருத்தி.

நாட்டுப்பிரிவு-72 நாடு.

வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிக்கையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் இப்போது நின்றுவிட்டது.

தலைவன் பட்டம் - பெரியதனக்காரன்,பட்டக்காரன், புள்ளிக்காரன்,

குலப்பட்டம் - அடவியார் , நயினார் , முதலியார் , மூப்பர்.

கொல்லன்

வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).

மரக்கொல்லன் - தச்சன்.

கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன்.

பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.

செப்புக் கொல்லன் - கன்னான்.

இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.

முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. முதல் காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலும் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்கலக்கன்னாரும் செப்புக் கன்னாருள் அடங்குவர்.

நாட்டுப்பிரிவு - பாண்டியம், சோழியம், கொங்கம் என்னும் மூன்று அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).

குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.

கோலியன்

தொழில் - நெசவு

பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும்.

பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல் அடைமொழி.

சவளக்காரன்

தொழில் - ஓடம் விடுதல், பயிர் விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல்.

பட்டம் - படையாட்சி (பயிர்த்தொழிலாளர்) , அண்ணாவி (இசைத்தொழிலாளர்).

சாயக்காரன்

தொழில் - சாயங் காய்ச்சுதல்.

சாலியன்

தொழில் - நெசவு.

பிரிவு - 24 புறமணவீடுகள்.

பட்டம் - அடவியார்.

சான்றான் (சாணான்)

பெயர்: சான்றோர் = போர்மறவர்.

சான்றோர்-சான்றார்

தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகம் செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல்.

பிரிவு - கருக்குமட்டையன், மேனாட்டான்,  கொடிக்கால், நட்டாத்தி, பிழுக்கை.

ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.

குலப்பட்டம்-நாடார்,  சேர்வைகாரன். முக்குந்தன்.

சிங்கன்

தொழில் - வேட்டையாடல்.

                                                                                           தொடரும் .................................

Sunday, March 18, 2012

நாம் யார் -30

பாகம்-29 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

நால்வரணத் தோற்றமும் விளக்கமும்

குலங்கள் இயற்கையாகத் தொழில் பற்றியே தோன்றின. மாந்தன் வாழ்கைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டியிருப்பதால், அவற்றை யெல்லாம் விளைவிக்கவோ தேடவோ செய்யவோ பல்வேறு குலங்கள் ஏற்பட்டன. அப் பொருள்களுள், இன்றியமை யாதவற்றிற்கு முன்னும்,தேவையான வற்றிற்குப் பின்னும், இன்புறுத்துவனவற்றிற்கு அதன் பின்னும், நாகரிகச் சிறப்புப் பற்றியவற்றிற்கு இறுதியிலும் குலங்கள்எழுந்தன.

பல்வேறு பொருள்களையும் ஒரு வழித்தொகுத்தற்குப் பண்டமாற்றுத் தொழிலும், அவற்றைக் காத்தற்குக் காவல் தொழிலும், அவைதோன்றிய அன்றே அமைந்தன. தெய்வ வழிபாடும்,நோயும் துன்பமும் இன்றிக் காக்கும் காவல்பற்றித் தோன்றியதே.

"மகனறிவு தந்தை யறிவு" என்றமுறைப்படி, தந்தையின் தொழில் திறமையும் மனப்பான்மையும் இயற்கையாகவே மகனுக்கமைவதாலும்,மக்கள்தொகை மிகாத தொடக்கக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் சொல்லளவிலுந் தோன்றாமை யாலும், எல்லாத் தொழில்களும் தொல்வரவாகவே தொடர்ந்து செய்யப் பட்டு வந்தன.தலைமுறை மிக மிகத் தொல்வரவுத் தொழில் திறமை மிகுவதனாலும், அத் தொடர்ச்சி மேன்மேலும் போற்றப்பட்டு வந்தது. ஒருவன் தன் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, எச் சமையத்திலும் தொழில் மாற முடியுமேனும், அதற்கேதுவான நிலைமை அக்காலத்தில் ஏற்படவில்லை.

உழவனை உயர்த்திய பழங்காலம் 

துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம்,அதிகாரம் முதலியன பற்றியன்றி, பிறப்பினால்ஏற்றத்தாழ்வு எவருக்கும் ஏற்றிக் கூறப்படவில்லை.

எல்லா உயிர்வாழ்க்கைக்கும்இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக்குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமை யாகவிறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும்,போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருது வெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்துதுறப் போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே  உயர்ந்த குடிவாணனாகவும்தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப்பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர்.

வெளிநாட்டு அரும்பொருள்களையெல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக் கவ்வப்போது பணமுதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன்,உழவனுக்கடுத்த படியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரராலும் பகைவராலும் அதிகாரி களாலும் கடுவிலங்குகளாலும், உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமற் காக்கும் அரசன், பணிவகையில் வணிகனுக்கு அடுத்த படியாகவும்,அதிகார வகையிற் கண்கண்ட கடவுளாகவும்கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரி பவனும், ஆக்கவழிப் பாற்றலுள்ளவனுமான அந்தணன், இறைவனுக் கடுத்தபடி தெய்வத் தன்மையுள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம் உழவு, வாணிகம், காவல், கல்விஎன்னும் நாற் றொழிலே தலைமையாகக்கொள்ளப்பட்டு, எல்லாக் கைத்தொழில் களும்உழவுள் அடக்கப்பட்டன.

வேளாளர் வணிகர் அரசர் அந்தணர் என்பதே வரலாற்று முறையாயினும், அந்தணர்க்கும் அரசர்க்கும் சிறப்புக் கொடுத்தற்பொருட்டு அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என எதிர்முறையிற் கூறினர்.

இந் நாற்பாற் பகுப்பையே, பிராமணர் ,சத்திரியர் ,வைசியர் சூத்திரர் எனத் திரித்தனர் ஆரியப் பூசாரியர்.

இற்றைப் பிறவிக் குலங்கள்

அகம்படியன்

தொழில் - பண்டைநாளில் மறவர்குலமன்னர் மாளிகைகளில் அகம்படித் தொண்டு(இல்லப்பணி) செய்தவர். இன்று தென்மாவட்டங்களிற் பயிர்த்தொழிலும்வடார்க்காட்டு மாவட்டத் திற் கொத்த (கட்டட)வேலையும் செய்பவர்.

பிரிவு - ஐவழி நாட்டான்,கோட்டைப்பட்டு முதலிய பன்னீரக மணப் பிரிவுகள் (Endogamoussteps).

பட்டம் - அதிகாரி, சேர்வைகாரன்,பிள்ளை, முதலியார்.

"கள்ளன் மறவன் கனத்தோர்அகம்படியன்" என்னும் பழமொழி, குலந்தோன்றியவழியைக் காட்டும்.

அம்பல(க்)காரன்

தொழில் - பயிர்த்தொழிலும்ஊர்காவலும்.

பிரிவு - முத்திரியன் (முத்தரையன்),காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலகமணப்பிரிவுகள்.

பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன்(முத்தரசன்), அம்பல காரன், மழவராயன் (மழவரையன்),வன்னியன், மூப்பன்.

அளவன்

தொழில் - உப்பளத்தில் உப்புவிளைத்தல்.

பட்டம் - பண்ணையன், மூப்பன்.

இடையன்

பெயர் - அண்டன், ஆயன்(ஆன்வல்லவன்),இடையன், குடவன், கோவன் (கோன், கோனான்), கோவலன், தொறுவன், பொதுவன்.

தொழில்-ஆடுமேய்ப்பு, மாடுமேய்ப்பு,ஆனைந்து (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்)விற்பு.

பிரிவு - தொழிற் பிரிவு: ஆட்டிடையன்,மாட்டிடையன் (ஆனாயன்).

குலப் பிரிவு : கல்கட்டி, பாசி முதலியஇருபது பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலக்காரன்,மந்திரி (மந்தையாரி), கீடாரி (கிடையாரி).

குலப்பட்டம் - கோன் (கோனான்),பிள்ளை, கரையாளன், சேர்வை, மணியக்காரன்,முக்கந்தன், மந்திரி.

"இடையனில் ஆண்டியு மில்லை,குயவனில் தாதனுமில்லை."

இருளன்

பெயர் - இருளர் (நீலமலை), வில்லியர்(செங்கழுநீர்ப்பட்டு தென்னார்க்காடுமாவட்டங்கள்), தேன் வன்னியர் (தேன்படையாட்சி), வனப் பள்ளியர்(வ.ஆ.மா.).

பிரிவு - புறமணப் (Exogamous)பிரிவுகள்.

பட்டம் - நாய்க்கன், பூசாலி (பூசாரி).

தொழில் - தோட்டவேலை, தேனெடுத்தல்,மீன் பிடித்தல்.

உடையான்

தொழில் - பயிர்த்தொழில்

பிரிவு - நத்தமான், மலைமான்,சுதர்மான், உடையான். ஒவ்வொன்றிற்கும் காணிஎன்னும் அகமணப் பிரிவுகளுண்டு.

பட்டம் - உடையார், நயினார், மூப்பன்,பண்டாரியார், பண்டாரத்தார், பாளையத்தார்,காவற்காரர்.

உப்பரவன் (உப்பளவன்)

பெயர் - உப்பிலியன்(தமிழ்நாடு),உப்பரன் (தெலுங்கு நாடு), உப்பாரன் (கன்னடநாடு).

தொழில் - உப்பு விளைத்தல்.

தலைவன் பட்டம் - பட்டக்காரன்.

குலப்பட்டம் - செட்டி.

உவச்சன் (பூசாரி)

தொழில் - காளிகோவிற் பூசை.

பிரிவு - மாராயன், பாண்டி முதலியஐம்பிரிவுகள்.

பட்டம் - புலவன்.

                                                                                                            தொடரும்..........................

Saturday, March 17, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

இடைத் தேர்தல் கடைசி கட்ட பிரசாரம் முடிந்தது , இனி வாக்கு பதிவும் எண்ணிக்கை மட்டுமே பாக்கி உள்ளது.

கலக்கல் கலிங்கப்பட்டி 

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராம தான் இந்த கலிங்கப்பட்டி , கூடுதல் தகவல் , மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிறந்த ஊரும் இதுதான் ,
பல நாள்களாக ஆளும் கட்சி அதிமுக தேர்தல் பணிக்குழு இந்த கிராமத்தில் தங்கி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுவந்தார்கள்.

பல நாள்களாக இந்த கிராம மக்களிடம் என்ன என்னமோ பேசி பார்த்தார்கள் , சினிமா நடிகர்களை கொண்டுவந்து காண்பித்தார்கள் , திமுக பெரும் தலைகள் , அதிமுக பெரும் தலைகள், தேமுதிக தலைவரும் மனைவி யும் வாக்கு சேகரித்து பார்த்தார்கள், இந்த கலிங்கப்பட்டி மக்கள் தீர்க்கமாக உள்ளூர் தலைவரான வைகோவின் மதிமுகவிற்கு வாக்கு என வாக்கு சேகரிக்கும் எதிர் அணியிடம் நேரடியாகவே சொல்லி விட்டார்கள் , இதை கேட்ட அதிமுக ஆளும் தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியோடு பணம் பட்டுவாடவை துவங்கியது .

கலிங்கபட்டியில் பணம் விநியோகம் செய்த அதிமுக நிர்வாகி 
பல முறை வாக்களர்களுக்கு பணம் கொடுத்தும் யாரும் வாங்குவதாக தெரியவில்லை ,நேற்று காலையில் ஒரு குடும்பத்தில் வலுகட்டாயமாக பணத்தை திணித்த அதிமுகவினரை காவல் துறையிடம் பிடித்து கொடுத்தார்கள் கலிங்கப்பட்டி கிராம வாசிகள் .அப்படியென்றால் கலக்கல் தானே . ஒரு அரசியல் கட்சி தலைவரின் ஊரிலே இவ்வளவு துணிந்து பணம் விநியோகம் செய்கிறார்கள் என்றால் தொகுதி முழுவதும் ??? திமுக திருமங்கலம் போர்முலவை மிஞ்சி விட்டது அதிமுக

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் 

சென்னை பல்லாவரம் அதிமுக வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் இடைத்தேர்தல் பணிக்காக இன்று கலிங்கப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளார் .

பண பட்டுவாட செய்த அதிமுக கூட்டத்தோடு பிடிபட்ட பொது இவரும் உடன் இருந்து இருக்கிறார் , மக்கள் இவர் மீது பய . அந்த மக்களுக்கு இவர் யார் என்றே தெரியாது ,இவர் வைகோவின் வீட்டை நோக்கி ஓட , அங்கு இருந்த வைகோ மக்களை சமாதான படித்தி தாக்குதலில் இருந்து இந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங்  அவர்களை காப்பாற்றி உள்ளார் , பின் காவல் துறை உதவியோடு இடத்தை களை செய்து விட்டார் , சமஉ

தாம்பரம் குபேர ஜெயசங்கர் 


யார் இந்த குபேர , இவர் யாருமில்லை கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் நகராட்சி மதிமுக வேட்பாளராக களம் இறக்க பட்டவர் , கடைசி நேரத்தில் பணத்துக்கு ஏமாந்து அதிமுகவில் இணைந்து விட்டார்,முன்னாள் மதிமுக காரர் , இவர் அமைச்சர் டி.கே.எம். சின்னையா வின் கீழ் இடைதேர்தல் பணிக்காக கலிங்கப்பட்டி கிராமத்தில் பண பட்டுவாடவில் ஈடுபட்டுள்ளார் , கிராம மக்களிடம் பிடிபட்ட இவரை கூட்டத்தில் சிலர் தாக்கிவிட , இவரும் வைகோவை நோக்கி ஒடி தஞ்சம் புகுந்து உள்ளார் , முன்னாள் தலைவர் என்ற பாசத்தில் தலைவரே என்னை உங்க ஊர் பொது மக்கள அடைத்து விட்டார்கள் என வைகோவிடம் முறை இட்ட இந்த குபேர வை ,வைகோ மக்களிடம் இருந்து காத்து உள்ளார்.

அதிமுக தேர்தல் பணியாளர்கள் 

கலிங்கப்பட்டி வாக்காளர் களிடம் பணம் விநியோகம் செய்த அதிமுக தேர்தல் பணியாளர்கள் நிர்வாகிகளை கண்டித்தும் ,காவல் துறையிடம் பிடித்து கொடுத்தும் பொது மக்கள் செய்வதை பார்த்த ஒருவர் பொது மக்கள் மீது ஒரு அதிமுக நிர்வாகி தனது வாகனம் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட மக்களின் கோபம் அதிகமாக .அத்திரம் அடைந்த பொது மக்கள் அதிமுக வினர் மீது தாக்குதலை ஆரமிக்க சிதறி ஓடிய அதிமுக நிர்வாகிகள் .

அதிமுக நிர்வாகி ஒருவர் பெரிய சாக்கடையில் மீது இருந்த சிறிய பாலத்திற்கு கீழ் ஒழிய முற்பட்டு சாக்காட்டில் புரண்டு எழுந்து ஓடி விட்டார் .

மற்றொருவர் தங்கி இருந்த இடத்தில் கழிவறையில் ஒழிய முற்பட பொது மக்களிடம் பிடி பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்க பட்டார்

இன்னும் ஒருவர் ஊர் பொது மக்களுக்கு பயந்து கிணற்றில் குதித்து விட்டார் , அவரையும் கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள்.

இன்னும் இரு அதிமுக நிர்வாகிகள் பணத்தோடு காட்டு வழியே ஓடு போனார்கள் , போனார்கள் வெறுமன போக வேண்டியது தானே ,காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம் பொய் , தங்கள் கையில் வைத்து இருந்த பணத்தை மறுபடியும் அவர்களிடம் கொடுத்து, இந்தாங்க அம்மா இதை வச்சிகொங்க ரெட்ட இலைக்கு ஓட்டு போடுங்க என கேட்க , அங்கு இருந்த பெண்கள் ஓன்று திரட்டு கையில் வைத்து இருந்த களைவெட்டிகளை காட்டி விரட்ட மீண்டும் ஓட்டம் பிடித்த அதிமுகவினர்.
மொத்தத்தில் கலிங்கப்பட்டி கலவர பூமியாக மாறிவிட்டது .

கோபால் சாமி 

இந்த கோபால்சாமி ,அதிமுகவை சார்ந்த ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,இவர்தான் இந்த கலிங்கப்பட்டி வட்டார இடைதேர்தல் பணி குழு விற்கு தலைமை இவர்தான் பொது மக்கள் மீது வாகனம் ஏற்ற முயற்சி செய்தவர் , ஆனால் இவர் தப்பித்து ஓடி விட இவரின் வாகன ஒட்டினர் மட்டும் மக்களிடம் மாட்டி கொண்டார் , தனது கட்சி தொண்டர்கள் , தன்னை நம்பி வந்த வெளியூர் கட்சி நிர்வாகிகளை நடு தெருவில் விட்டு விட்டு இவர் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார் ,வார பத்திரிக்கையில் இவரை பற்றி பெரிய நம்பிக்கையில் செய்தியெல்லாம் போட்டார்கள் வாக்கு சேகரித்து தருவார் என , பொது மக்களுக்கு பயந்து ஒட்டி விட்டார் இன்று .

தனது கட்சி தொண்டனுக்கே துணை போகத சட்டமன்ற உறுப்பினர் , தனது தொகுதியில் மக்களுக்கு எப்படி துணையாக இருப்பார் ???????

மக்களின் எழுச்சியில் மதிமுக வெல்லுமா ?

சங்கரன்கோவில் தொகுதி முழுவது மக்கள் பணத்திற்கும் , இலவசத்திற்கு மயங்க வில்லை , மக்களிடம் நல்ல ஒரு எழுச்சி தெரிகிறது , இந்த எழுச்சியில் மதிமுக வெல்லுமா வாக்குகளை அள்ளுமா என தெரியவில்லை ,

வாக்கு பதிவை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறலாம் , யார் வென்றாலும் பெரிய வாக்கு வித்தியாசம் ஓன்று இருக்காது போல தொகுதி நிலவரம் இருக்கிறது , ஆளும் கட்சி மீது பெரிய அதிருப்தி நிலவுகிறது , எந்த அளவிற்கு எதிர் அணிக்கு வாக்காக மாறும் என பொறுத்து இருந்து பார்ப்போம் , மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்கு அளித்தால் நிச்சியம் பம்பரம் கோட்டையில் சுற்றுவது உறுதி ...

                                                                                                         தொடரும்............................