Tuesday, March 6, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மின் தட்டுபாடு தொடர்ச்சி 


மத்திய அரசு மின் நிலைய உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 


அனல் & அணு மின் நிலையங்கள் மூலம்

நெய்வேலி TS 1 (Relief to TNEB )- 475  மெகாவாட்

NTPC - 659  மெகாவாட் 

நெய்வேலி TS 2 - 466  மெகாவாட் 

நெய்வேலி TS 1 (Expansion )- 226  மெகாவாட் 

Talcher St 2- 498  மெகாவாட்

MAPS - 330 மெகாவாட்

KAPS- 171  மெகாவாட்

மொத்தமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு - 2861 மெகாவாட்

இன்றைய நாள் தமிழகத்திற்கு  கிடைக்கும் பங்கு -2193 மெகாவாட்

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :- 52.628 மில்லியன் யூனிட்/ நாள்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த  பங்கு - 3130 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த   மின் அளவு -58.48 மில்லியன் யூனிட்/ நாள்


தமிழகத்தில் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் தமிழக அரசு வாங்கும் அளவு 


தனியார் மின் உற்பத்தி நிலையம் உற்பத்தி மின்சாரம் அதிக பட்சமாக - 1180 மெகாவாட் ,

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -1000 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-21.8 மில்லியன் யூனிட்/ நாள்

மரபு சாரா எரிசக்தி மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 749 மெகாவாட் ,

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -358 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-8.59 மில்லியன் யூனிட்/ நாள்

எண்ணெய் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 788 மெகாவாட் ,

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -502 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-12.069 மில்லியன் யூனிட்/ நாள்


காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக -5990.445மெகாவாட்

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -680 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-16.7 மில்லியன் யூனிட்/ நாள்

இன்றைய நாள் மொத்தமாக தனியார் இடம் தமிழகம் வாங்கும் மின்சாரம் :- 59.159 மில்லியன் யூனிட்/ நாள்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த   மின் அளவு -44 மில்லியன் யூனிட்/ நாள்

வெளி சந்தையில் இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-19.8 மில்லியன் யூனிட்/ நாள்


2009-2010 ஆம் ஆண்டு வெளி சந்தையில்   தமிழகம் வாங்கிய   மின் அளவு -19.04 மில்லியன் யூனிட்/ நாள்

மின் பற்றாகுறை காரணம் என்ன ?


மத்திய அரசு மின் நிலையங்களில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச அளவில் இருந்து 24 % சதவிதம் குறைந்து உள்ளது , இதை ஏன் தட்டி கேட்கவில்லை மாநில அரசு , அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் , ஒரு வேளை இடை தேர்தலில் இதை மறந்து விட்டார்களோ ?

மேலும் நாளுக்கு நாள் அதிகமாகும் மின் தேவைக்கு தகுந்தவாரு மத்திய அரசு தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் பெற வேண்டாமா மாநில அரசு ?

2009-2010 ஆம் ஆண்டு மத்திய அரசு தந்த மின்சார அளவு ,நமது பங்கைவிட 9 % அதிகம் தந்து உள்ளது .அப்படியெனில் மத்திய தொகுப்பு அதிகமாக தரக்கூடிய சாந்தியங்கள் இருந்து உள்ளது தானே ? ஆனால் இங்கே பாருங்கள் கிடைக்க வேண்டிய அளவு குறைந்து உள்ளது ,


தமிழகத்தில் தனியார் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி பல ஆயிரம் மெகாவாட் இருந்தாலும் தமிழகம் வாங்கவில்லை என்பது தெரிகிறது , இந்த அரசு மட்டும்தான் வாங்கவில்லை என்பது இல்லை 2009-10 ஆம் ஆண்டு புள்ளிவிவர படி முந்தைய அரசும் வாங்க வில்லை என்பது தெரிகிறது , இப்படி நமது மாநிலத்தை நம்பி தொழில் ஆரம்த்தவர்களிடம் நாம் வாங்குவதே இல்லை என்பது வேதனை தான் , நமது மின் தேவை இருந்தும் வாங்காமல் இருப்பது என்பது அரசுகளின் கவன குறைவு தானே ?

ஆனால் ஒன்றும் மட்டும் பாருங்கள் இடைத்தரகர் மூலம் வெளி சந்தையில் கிடைக்கும் மின்சார அளவை மட்டும் இரு அரசுகளும் சரியாக வாங்கி வந்து உள்ளது. உள் ஊர் உற்பத்தியாளர்களை கண்டு கொள்ளவில்லை என்பது தெரிகிறது .

நான்கு நாளுக்கு முன் முன்னாள் முதல்வர் ஒரு பழமொழியை எடுத்து காட்டி உள்ளார் , அதாவது வெண்ணையை வைத்து கொண்டு நெய் க்கு அழைகிறோம் என்று , இது அவர் சொல்ல காரணம் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க ,ஆனால் இவர்கள் இருவரும் உள்ளூர் உற்பத்தியை கண்டு கொள்ளவில்லை என்பது உண்மை.

இப்போது நாம் சொல்லுவோம் , கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய் க்கு அழையும் இந்த திமுக , அதிமுக அரசுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் , சங்கரன்கோவில் மக்களே உங்களின் கையில் இருக்கிறது , மாற்றம் என்பதை ஏற்படுத்துங்கள் , மாற்று அரசியலை சிந்தியுங்கள் ,இதை எல்லாம் எடுத்து சொல்ல வேண்டியா எதிர்கட்சி சட்டசபையில் சண்டை போட்டு கொண்டு இருக்கு என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

செயற்கை ஆக ஒரு மின்வெட்டை ஏற்படுத்து கிறத மாநில அரசு ? அல்லது அரசுக்கு நிர்வாக திறன் இல்லையா ?
   
                                                                                                    தொடரும்..........................


                                                                   

No comments:

Post a Comment