Friday, March 23, 2012

நாம் யார் -35

பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

வேடன்

தொழில் - வேட்டையாடல்

பட்டம் - நாய்க்கன்.

வேட்டுவன்

வகை - (1) மலை வேட்டுவன்.

தொழில் - வேட்டையாடல், பயிரிடல்.

பட்டம் - நாய்க்கன், கவுண்டன்.

(2) பாலை வேட்டுவன் (பண்டைக்காலத்தான்).

மறைந்த குலங்கள்

இறங்கு சாத்து (செட்டிகளுள் ஒரு சாரார்), எயினர் (பாலை வாணர்), கணவாளன்,  நாட்டார் (தென்னார்க்காடு உழவர் வகுப்பார்), மழவர் (மழநாட்டுப் போர்மறவர்), மறமாணிக்கர் (மறக்குடியினர்) முதலியன. இறவுளன், கடம்பன், களப்பாளன்,  காடவன், காடுவெட்டி முதலியனவும் மறைந்த மறந்து போன குலங்கள்.

மலைவாழ் குலங்கள்

காடர் (ஆனைமலை), குன்றுவர் (பழனிமலை),பழியர் (குட மலை), மலையாளி (சேரவரையன் மலை, பச்சைமலை, கொல்லி மலை), மலசர் (ஆனைமலை), மன்னான் (குடமலை), முதுவர் (நீல மலை, ஏலமலை) முதலியன.

புதுக் குலங்கள்

புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்), வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டைவட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)

மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

சமணர், பவுத்தர், கிறித்தவர்,முகமதியர்.

மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள்

ஆங்கிலம்-சட்டைக்காரர்.


திரவிடம்- (1) சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.
                   
                     (2) கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள்.

                     (3) வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள்.

                   (4) நீலமலைத் தமிழக் குலங்கள்.

அந்த நாடுகளின் இருந்த தமிழ் குலங்கள் தான் திராவிடர்கள் மாறாக மலையாளிகளோ , ஆந்திரா மக்களோ , கர்நாடக மக்களோ திராவிடர்கள் இல்லை , இங்கு இருந்து போன தமிழ் குலங்கள் தான் அவர்கள் .

மூவகைத் திரவிடக் குலங்கள்

(1) பெயர் மாறாதவை :  கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்),   வெளுத்தேடன் (வண்ணான்).

(2) பெயர் திரிந்தவை: ஈடிக, கொறச்ச, சோடர்.

(3) பெயர் மாறியவை: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு).

குலமுயர்த்தும் வழிகள்

ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச்சோறுண்ணல்.

உடை- பிராமணர்போல் கச்சங்கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல்.

அணி - ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர் நூற்கயிற்றில் தாலி கோத்தல்.

குலப்பெயர் - குலப்பெயரை மாற்றுதல் அல்லது பட்டப்பெயரைக் குலப்பெயராக ஆளுதல்.

ஆட்பெயர் - வர்மன் குப்தன் என்னும் கடைசி வார்த்தைகளை கொண்ட வடசொற் பெயர் பூணல்.

பட்டம் - பிள்ளை, முதலியார், செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல்.

மணவுறவு - மேற்குலத்தில் பெண்கொள்ளல்.

மொழி- இயன்ற வரை வடசொல் கலந்து பேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருத நூலெழுதுதல், அல்லது செய்யுளியற்றல்.

பழக்கவழக்கம் - ஆடவர் காலையில் சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை.

பூசாரி - இருவகைச் சடங்கிற்கும் பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல்.

ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன் வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப் பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல்.

ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லது தொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப் பின்பற்றல்.

சவ முடிவு - எரிப்பு.

இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச்சார்பான வெல்லாம் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகைமிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பே பொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும்.

குலப்பட்டம் தோன்றிய வகைகள்

(1) முன்னோர் பதவி - (படை) முதலியார், படையாட்சி.

(2) முன்னோர் வேந்தனால் பெற்ற சிறப்பு - ஏனாதி, காவிதி, வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை.

(3) முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான்.

(4) முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலைமான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு).

(5) ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான்.

(6) தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள்.

(7) தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை).

(8) அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம்.

(9) சிற்றரசன் தொடர்பு - வளுவாதி, தொண்டைமான்.

(10) பத்திநெறியாட்சி - ஆண்டி.

(11) வேந்தன் தொடர்பு - தேவன்.

(12) குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி.

                                                                                                      தொடரும்......................

No comments:

Post a Comment