Monday, March 5, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மின் தட்டுபாடு

இன்றைய தமிழகத்தில் மிக பெரிய பிரச்சனை இந்த மின் தட்டுபாடுதான் , உண்மையிலே மின் தட்டுபாடு உள்ளதா , இல்லை ஒரு செயற்கை ஆன மின் தட்டுப்பாட்டை உருவாக்க பட்டுள்ளதா , அப்படயென்றால் , செயற்கை மின் தட்டுபாட்டால் கூடங்குளம் அணு உலை திறக்க மறைமுக உதவி செய்கிறதா தமிழக அரசு.

மின் தட்டுபாடு பற்றி தமிழக நிதி நிலை அறிக்கையிலே ,இன்று இடைதேர்தல் களத்தில் ஓயாமல் பணிகளை செய்து கொண்டு இருக்கும் ஒ.பன்னீர் செல்வமே சொல்லி உள்ளார் ,



நிதி நிலை அறிக்கையில் உள்ள விவரம் தான் இது

10,237 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் நம்மிடம் இருந்தாலும் நாம் 8,000 மெகாவாட் தான் உற்பத்தி செய்கிறோம் என்பதை சொல்லியுள்ளார் , அப்படியெனில் முந்தையா திமுக அரசு சரியாக செயல் படவில்லை என்பது தெரிகிறது , மேலும் இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக என்ன செய்தார்கள் என்பதையும் பார்ப்போம்

இன்றைய நமது மின் தேவை :- 10,859 மெகாவாட்/ 240 மில்லியன் யூனிட் ஒரு நாளைக்கு

அமைச்சர் சொன்ன கணக்கு படி நம்மிடம் உள்ள உற்பத்தி வசதி :- 10,237 மெகாவாட்

அடுத்தவரை நம்மி இருக்க வேண்டிய அளவு :- 622 மெகாவாட்

இது மட்டும் இல்லை சில நேரங்களில் புனல் மின் நிலைய உற்பத்தி குறையும் பொது மேலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் அளவு அதிகமாகும் என்பது உண்மைதான்.

தமிழகத்தில் உள்ள உற்பத்தி வசதிகள்

புனல் மின் நிலையம் - 2191 மெகாவாட்

அனல் மின் நிலையம் - 2970 மெகாவாட்

தனியார் மின் நிலையம் - 1180 மெகாவாட்

எரிவாயு மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி - 516 மெகாவாட்

எண்ணெய் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி - 788 மெகாவாட்

மரபு சாராத எரிசக்தி மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி - 749 மெகாவாட்

காற்றாலை மின்சார உற்பத்தி - 6008 மெகாவாட்

மத்திய அரசு மின் நிலையங்களில் நமக்கான பங்கு- 2861 மெகாவாட்

மொத்த மின் உற்பத்தி - 17,263 மெகாவாட்

இது முழுவதும் நமக்கே கிடைக்குமா என்றால் இல்லை , சில நேரங்களில் புனல் மின் நிலையம் மின்சார உற்பத்தி குறையும் , ஆனால் பெரும்பாலான அளவு உற்பத்தியை நாம் பயன் படுத்தலாம் , தேவை ஏற்படின் வெளி சந்தையில் வேறு மாநிலங்களில் இருந்து மத்திய அரசிடம் இருந்து மின் சாரம் வாங்கி தேவையை சரியாக பூரத்தி செய்யலாம் .

இன்றைய நிலையில் கிடைக்கு மின்சார அளவு

(3.3.2012 அன்று கிடைத்த தகவலின் படி )

மின்சார வாரியத்தால் உற்பத்தி செய்ய படும் அளவு
புனல் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 950 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :- 9.347 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 15.393 மில்லியன் யூனிட்

அனல் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 2350 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :-52.623 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 53 மில்லியன் யூனிட்

எரிவாயு மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 236 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :-5.555 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 5.967 மில்லியன் யூனிட்

காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக -17.555 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :-0.0326 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 0.0326 மில்லியன் யூனிட்

மொத்த உற்பத்தி செய்ய வேண்டிய அளவு :- 5694 மெகாவாட்

இன்றைய நிலையில் உற்பத்தி செய்யும் அளவு :- 3554 மெகாவாட்

மின் உற்பத்தி குறைந்த காரணம் என்ன ?

குறைவான மழை காரணமாக ,புனல் மின் நிலையத்தில் உற்பத்தி குறைய வாய்ப்புகள் ஓரளவு இருந்தாலும் இந்த அளவுக்கு 57 சதவிதம் குறைந்து இருப்பது அரசின் மெத்தன போக்குதானே ?,இதை ஈடு செய்ய தனியார் ,மத்திய தொகுப்பு ,வெளி சந்தையில் எவ்வளவு வாங்கி உள்ளார்கள் என்பதை பின்னாடி பார்ப்போம் .

புனல் மின் நிலையம் தான் மழை அளவு , நீர் வரத்தை போற்றவற்றால் பதித்தது என்றால் அனல் மின் நிலையத்தின் உற்பத்தி குறைந்த காரணம் என்ன ? ,அதுவும் 21 சதவிதம் குறைந்து இருப்பது அரசின் மெத்தன போக்குதானே ?

எரிவாயு மூலம் கிடைக்கும் உற்பத்தியும் குறைந்து உள்ளது, இது 54 சதவிதம் குறைந்துள்ளது .

நாளுக்கு நாள் உற்பத்தி அதிகபடுத்த வேண்டியா வளர்ச்சி பாதையில் இருக்கும் பொது உற்பத்தி குறைந்தால் எப்படி மின் வெட்டு இல்லாமல் இருக்கும் , முந்தைய அரசு தான் சரியாக செயல் படவில்லை என்றால் , இந்த ஒன்பது மாத கால அரசு என்ன செய்கிறது , மந்திரிகளை இடைதேர்தல் பணிக்கு அனுப்பும் இந்த அரசு , எத்தனை முறை இந்த மின் உற்பத்தி நிலையங்களை பார்க்க அனுப்பியது , இல்லை மந்திரிதான் போனார?, சங்கரன்கோவில் மக்களே இதை எல்லாம் கேளுங்கள் , அவர்களிடம் இருந்து பதில் வரவே வராது , அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும், மாற்றத்தை யோசிக்க வேண்டும் , இவர்களை திருத்த பாடம் கற்பிக்க வேண்டும் , மாற்றம் என்பது முன்பு ஆண்டவர்கள் இல்லை , அவர்களும் இந்த நிலைக்கு காரணம் தான் .


                                                                                                               தொடரும்........................

No comments:

Post a Comment