Wednesday, March 14, 2012

நாம் யார் -29

பாகம்-28 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

குலங்கள் தோன்றிய வகைகள்

ஆரியர் (பிராமணர்) வருமுன் தோன்றிய குலங்களெல்லாம் தொழில் பற்றியனவே யாம்.

நானிலத் தொழில்

மருதம் - உழவர், முல்லை - ஆயர், குறிஞ்சி - வேட்டுவர்,  நெய்தல் - மீன் பிடியர் (நுளையர்).

முதன் முதல் தோன்றிய குலங்கள் இந்நால்வகைத் தொழில் வகுப்புகளே. இந் நான்கும் உணவு பற்றியனவே.

ஐந்தாம் (நிலையில்லா)நிலத்தொழில்-கவர்வு

முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் வற்றி வறண்ட தனால், அங்குள்ள வேட்டுவர் ஆறலைப்போரும் சூறை கொள்வோருமாக மாறி அம்பெய்வதால் எய்நர்(எயினர்) என்றும், மறமிகையால் மறவர் என்றும்பெயர் பெற்றனர்.

மருதநிலத் தொழில் நான்கு

மருதநில மக்கள்தொகை பெருகிய பின், பண்டமாற்றிற்கு வணிகரும், வழக்குத் தீர்ப்பிற்கும் காவற்கும் ஊர்க்கிழவரும் (தலைவரும்), நோய் நீக்கவும் மழை பெய்விக்கவும் தெய்வத்தை வேண்ட உவச்சனும் (பூசாரியும்), உழவரினின்று பிரிந்தனர்.

ஊர்க் கிழவரே அரசர் குலத்தொடக்கம். ஆட்சிப் பரப்பு விரிய விரிய,வேளிரும் மன்னரும் கோக்களும் வேந்தரும் முறையே தோன்றினர்.

முதற்காலத்தில், நானிலத்திற்கும் பொதுவான பண்டமாற்று மருத நிலத்திலேயே நிகழ்ந்தது. பின்னர் நீர்வாணிகம் தோன்றியபின் நெய்தல் நிலத்திலும் நிகழ்ந்தது.

மருதநிலத்திற் போன்றே ஏனை நிலங்களிலும் குடியிருப்புத் தலைவரும் தேவராளரும் (பூசாரிகளும்) தோன்றினர்.

உவச்சர் வகுப்பினின்றே, நாளடைவில் புலவரும் ஆசிரியரும் துறவியரும் முனிவரும் முதன்முதலாகத் தோன்றினர். கல்வி, உலகியலும்மதவியலும் என இரண்டாகப் பிரிந்தது.

மருதநிலப் பேரூர்ப் பதினெண்கைத்தொழில்கள்

மருதநிலப் பேரூர்களில், உழவிற்குப் பக்கத் துணையாகப் பதினெண் கைத்தொழில்கள் படிப்படியாகத் தோன்றின. பிற நிலக்குடியிருப்புகளிலும், அவ்வந் நிலத்திற் கேற்றவாறு சில கைத் தொழில்கள் தோன்றின.

பற்பல கைத்தொழில்கள்

திணைமயக்கம் ஏற்பட்டபின், நானிலமக்களும் மருதநில நகரங்களிலும் நெய்தல் நிலப்பட்டினங்களிலும் அமர்ந்து, பல்வேறு கருவிப் பொருள்களைக் கொண்டு நாகரிக வாழ்க்கைக் கேற்ற பற்பல தொழில்களைச் செய்து வந்தனர்.

தொழிற் பிரிவுகள்
நாகரிகமும் மக்கள் தொகையும் மிகுந்த பின், எல்லாத் தொழில்களும் அல்லது வகுப்புகளும் இரண்டும் பலவுமாகப் பிரிந்தன.

பெயர் மாற்றங்கள்

மக்கள் பெருநிலப் பரப்பில் படர்ந்து பரவினபின், ஒரே வகுப்பார்க்கே இட வேறு பாட்டால் பெயர் வேறுபாடு ஏற்பட்டது.

தொழில்கள் நிகழும் வகைகள்

விளைப்பு, வளர்ப்பு, பிடிப்பு, தொகுப்பு, புணர்ப்பு, செய்வு, பிரித்தெடுப்பு, பண்டமாற்று, நிலைமாற்று, காப்பு (மாந்தன் காப்பு, தெய்வக்காப்பு) , ஆள்வு, செப்பனீடு, விலக்கு, வாழ்விப்பு, இன் புறுத்தம், ஆய்வு, அறிவிப்பு, உய்ப்பு, உடலுழைப்பு, அழிப்பு முதலியன.

குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள்

(1) நிறம் - வெள்ளாளன் (வெண்களமன்), காராளன் (கருங்களமன்), இருளன்.

(2) இடம் - சோழிய வேளாளன், ஆர்க்காட்டு முதலி, மலையாளி.
திசை - தென்றிசை வெள்ளாளர், மேல்நாட்டான்.

(3) குடியிருப்பு - கோட்டை வெள்ளாளன், தெருவான் (சேரநாட்டுச் சாலியன்).

(4) ஊண் - சைவ (மரக்கறி) வெள்ளாளன், புலையன், தவளை தின்னி (பறையன்).

(5) உடை - தண்டப்புலையன், குளிசீலையாண்டி (கோவணாண்டி).

(6) அணி - பவளங்கட்டி (கொங்கு வெள்ளாளர்). 

(7) தாலி - சிறுதாலி மறவர், ஐந்தாலி (அஞ்சாலி)யிடையர்.
கொண்டைமுடிப்பு-கொண்டை கட்டி வேளாளர்.

(8) கோலம் - பச்சைகுத்தி (குறவர், வேளாளர்), நீறுபூசி (வெள்ளாளன்). 

(9) முதற்கருவி - பொற்கொல்லர், வெண்கலக் கன்னார்.

(10) கருவி - வில்லி, வலையன்.

(11) கருவியளவு - சிறுபாணர், பெரும்பாணர், சின்ன மேளம், பெரியமேளம் (மேளகாரர்).

(12) பண்டமாற்றுப் பொருள் - கூல வாணிகன், இலை வாணியன், எண்ணெய்   வாணியன்.

(13) தொழிற்பிரிவு - தீக்கொல்லன், இரும்புக்கொல்லன், கடைச்சற் கொல்லன்.

தொழில்நுட்பம் - கண்ணுளர், கணிகையர்.

தொழில் வேறுபாடு - கோலியன்.

தெய்வப்பற்று - தேவகணிகையர் (கோவிற் கணிகையர்).

திருத்தொண்டுவகை - பூவாண்டிப் பண்டாரம், உப்பாண்டிப்பண்டாரம்.

பண்பு - மறவன்.

அலுவல் - கணக்கன்.

கல்வி - புலவன், பண்டாரம், ஓதுவான்.

முன்னோர் பதவி - முதலியார் (படைமுதலியார்).

முன்னோர் பட்டம் - முதலி, முதலியார், பிள்ளை.

முன்னோர் வெற்றி - களம் வென்றார்.

முன்னோர் இடம் - செம்பியன் நாட்டார்.

முன்னோர் தொழில் - செங்குந்தர்.

முன்னோர் செயல் - முதுகர் (முதுவர்).

முன்னோர் பெயர் - திருவள்ளுவன் (வள்ளுவன்), வாணர்.

ஒழுக்கம் - பரத்தையர், திருமுடிக் கவுண்டர்.

சடங்கு - பன்னிரண்டு நாள்(பள்ளி).

வழக்கம் - பந்தல்முட்டிப் பள்ளி, கைகாட்டி (கணக்கன்), துருவாளர்.

நிகழ்ச்சி - பன்னிரண்டாம் செட்டி.

கதை - கார்காத்தார்.

பட்டம் - உடையான்.

பிரிவுப்பெயர் - இல்லத்துப்பிள்ளை.

முறைப்பெயர் - அம்மாப்பள்ளர், ஆத்தாப்பள்ளர்.

இடமாற்றமும் முன்னோர் செயலும் - பழியர்.

இடமாற்றமும் பெயர் மாற்றமும் - தேன்வன்னியர் (தென்னார்க்காட்டு இருளர்).

இடவேறுபாடும் பெயர் வேறுபாடும் - பரவர், பட்டணவர்,செம்படவர்.

தொகை - ஆயிர வணிகர் (வைசியர்), ஐஞ்ஞூற்றான் (பாணன்).

சின்னம் - ஆனை, ஆந்தை, காடை (கொங்கு வெள்ளாளர்).

விலங்கு பேண்வு - பாகர், வாதுவர் (குதிரை).

விலங்கு பிடிப்பு - நரிக்குறவன்.

விலங்குத்துணை - நாயாடி (வேட்டுவன்), எருதாண்டி.

கலப்பு - மேளகாரன் (இசைவேளாளன்), இளமகன்.

கிளை - சவளக்காரன், காவற்காரன்.

தொகுதி - முக்குலத்தார், அம்பல(க்)காரன்.

மதம் - சிவனியர்(சைவர்), திருமாலியர்(வைணவர்).

மதமாற்றம் - சமணர், பவுத்தர், கிறித்தவர், முகமதியர் (துலுக்கர்).

மதப்பிரிவு - பழஞ்சவையர் (Roman Catholic), சீர்திருத்தச் சவையர் (Protestant).

தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு).

செல்வம் - ஒற்றைச்செக்கான் (வாணியன். இரட்டைச் செக்கான் (வாணியன்).

கட்சி - வலங்கை, இடங்கை (பணிசெய்வோன்).

இடமாற்றம் - குன்னுவர், முதுவர், பச்சைமலையாளியர்.

வரிசை - கடையர்.

அரசன் பெயர் - தொண்டைமான்.

இரப்பு - நோக்கன், பொன்னம்பலத்தார், முடவாண்டி.

                                                                                                               தொடரும்.....................

No comments:

Post a Comment