Wednesday, March 21, 2012

நாம் யார் -33

பாகம்-32 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பள்ளன்

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின்தென்பாகம்.

தொழில் - பயிர்த்தொழிலும் பண்ணை வேலையும்.

பிரிவு - அம்மாப் பள்ளன், அஞ்ஞாப்பள்ளன், ஆத்தாப்பள்ளன், பணிக்கன், கடையன் முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - குடும்பன்,நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், நாட்டுமூப்பன்.

குலப்பட்டம் - குடும்பன், பண்ணாடி(பண்ணையாடி), மன்றாடி, மூப்பன்.

பள்ளி (வன்னியன்)

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின் வடபாகம்.

பெயர் - பள்ளி, வன்னியன், செம்பியன்.

தொழில் - பயிர்த்தொழில்,வாணிகம், கொல்லற்று (கொத்த) வேலை, பண்டைநாளில் சிலர் படை மறவர்.

பிரிவு - அரசு, பந்தல்முட்டி, அஞ்சுநாள்,கோவிலர், ஓலை முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - கவுண்டன், பட்டக்காரன், கண்டர், சம்புவராயன், நாயகர், நயினார் முதலியன.

குலப் பட்டம் - கவுண்டன், படையாட்சி, நாய்க்கன், பிள்ளை, இராயன் முதலியன.

வன்னி என்பது ஒரு மரவகையைக்குறிப்பின் தென்சொல்; நெருப்பைக் குறிப்பின்வஃனி (vahni) என்னும் வடசொல்.

கதிரவன் திங்கள் நெருப்பு என்னும் முச்சுடரும், முறையே, சோழன் பாண்டியன் சேரன் ஆகிய மூவேந்தர் குலத்திற்கும் முதலாகக் கொள்ளப்பட்டன. பண்டைத் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தது. அவருக்கடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்தாண்டனர். வன்னியைக் காவல் மரமாகக்கொண்ட குறுநில மன்னர், உடையார்பாளையம் வேளைப்போற் சோழநாட்டுப் பகுதிகளைஆண்டிருக்கலாம். வன்னியர் என்பது குறுநில மன்னரையே குறிக்கின்றது. கடம்பர் என்னும் சொல்லைப்போல் வன்னியர் என்பதையுங்கொண்டால். அது தென் சொல்லேயாகும்.கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்திலேயே,வடசொல் தமிழரசர் பெயர் வழக்கில் புகுந்தது;குலப் பிரிவும் தலையெடுத்தது.

இனி, வன்னியன் என்னும் சொல்,கள்ளர் வலையர் முதலிய சில குலத்தாரின் பட்டப்பெயராக வழங்குவதையும் அறிதல் வேண்டும்.சத்திரியன் (க்ஷத்ரிய) என்னும் வடசொல், வல்லபம் என்னும் பொருளதே. ஆதலால், வன்னியர்குல வல்லபர் என்று வழங்குவதே. இக்காலத்திற் கேற்றதும் மோனையழகு அமைந்ததுமாகும்.

பறம்பன்

இடம் - திருநெல்வேலி, மதுரை,புதுக்கோட்டை.

தொழில் - தோல் வேலையும் சுண்ணாம்புக்கல் சுடுதலும், செருப்புத் தைக்கும் தமிழக் குலத்தான் இவனே. செம்மான் (சருமன்) என்பது வடசொல்.

பறையன்

பெயர் - பறையன், புலையன்.

தொழில் - பறையடித்தல், பறையறைந்து விளம்பரஞ் செய்தல், முரட்டுத்துணி நெய்தல், கூலிவேலை செய்தல், பிணஞ்சுடுதல்.

பிரிவு - பல புறமணப் பிரிவுகள்.

பட்டம் - சாம்பான், மூப்பன், பிள்ளை.

பாணன்

பெயர் விளக்கம் - பண் = பாட்டு, இசை. பண் - பாண் - பாணன் = பாடகன், இசைத் தொழிலாளன்.

தொழில் - பண்டு : வாய்ப்பாட்டு, குழலிசை, யாழிசை.

இன்று : தையலும் கூத்தும் (தமிழ்நாடு).

கூடை கட்டல், மீன் பிடித்தல்,பேயோட்டல் (மலையாள நாடு).

பட்டம் - பணிக்கன்.

மறவன்

இடம் - பாண்டிநாடு.

தொழில் - பண்டு : போர்த் தொழில்.

இன்று : காவல், பயிர்த்தொழில்,கல்வித்தொழில்.

பிரிவுகள் - 38

நாட்டார்,மணியக்காரர், காரணர், கொத்தளர், சீத்தல்,சேர்வைகாரர், தோலர், பண்டாரம்,வேடங்கொண்டார், செட்டி, குறிச்சி, வேம்பன்கோட்டை, செம்பிநாடு, குன்றமான் நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஒரியூர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, தும்பை, உப்புக்காடு, அஞ்சுகொத்து, கொண்டையன் கோட்டை, தொண்டைநாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசிகட்டி,கன்னிகட்டி, கயிறு கட்டி, அணிநிலக் கோட்டை.

5 நாடுகள்

செம்பிநாடு, அம்பநாடு, கிழவைநாடு, அகப்பாநாடு, ஆமைநாடு.

5 கோட்டைகள்

செம்பிநாட்டுக் கோட்டை, கொண்டையன்கோட்டை, கருத்தக்கோட்டை, செகக்கோட்டை, அணிநிலக்கோட்டை.

50 கிளைகள்

செம்பியன், வெட்டுவன், வீரமன், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு, அறியாதான், கோபாலன், மங்கலம், சுந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கினியான், வீணியன், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மருவீடு, வாப்பா, நாச்சாண்டி, அமர், கருப்புத்திரன், வெட்டியான், மாப்பான சம்பந்தன், சேதுரு, அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப் பிரை, நங்கண்டா, பாச் சாலன், சாலா, இராக்கி, வன்னி, பண்டாரம், விடிந்தான், கருங்குளத்தான், பறையன்குளத் தான், மகுடி, அம்மியடுக்கி, அடு கலை, எருமைக்குளத் தான், கீரைக்குடியான், இத்தி, விளிந் திட்டான், வயநாடு, வெம்பக்குடி.

கொண்டையன் கோட்டையார் கொத்தும் கிளையும்-ஒன்பது கொத்தும் பதினெண் கிளையும்.

கற்பகக் கொத்து - மருதீசர் கிளை, அகத்தீசர் கிளை.

கமுகங் கொத்து - வீணியன் கிளை,பேர் பெற்றான் கிளை.

மல்லிகைக் கொத்து - சேதா கிளை,வாள்வீமன் கிளை.

முந்திரிக் கொத்து - வெட்டுவன் கிளை,அழகுள்ள பாண்டியன் கிளை

ஏலக்கொத்து - குடையன் கிளை, அரசுமான் கிளை.

மிளகுகொத்து - செகமண்டலாதிபன் கிளை, வீர முடிதாங்கினான் கிளை.

நற்சீரகக்கொத்து - நாட்டை வென்றான் கிளை,தருமர்கிளை.

தக்காளிக்கொத்து - சங்கரன் கிளை, சாத்தான் கிளை.

தென்னங்கொத்து - ஒளவை கிளை, சாம்புவன் கிளை.

பட்டம்-தேவன், தலைவன், கரையாளன்,சேர்வைகாரன்.

                                                                                                       தொடரும்....................

No comments:

Post a Comment