Thursday, March 15, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கு , அரசியல் கட்சிகளும் ஓடி, ஓடி ஓட்டுகள் கேட்கிறது , தேர்தல் ஏற்பாடுகளும் ஜோராக நடக்கிறது , மக்களும் வாக்கு செலுத்தும் மன நிலைக்கு தயார் ஆகிவிட்டனர். நாமும் தொகுதி பக்கம் பார்ப்போமே.

அதிமுக 

அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்கனவே இறக்கி விட்டு இருந்தது , இப்போது பத்து மாநகராட்சி தலைவர்களையும் இறக்கிவிட்டி ,கட்சியின் தலைவியும் முதல்வரும் களத்தில் இருக்கிறார்கள் , மேலும் 100 க்கு மேலான சட்டமன்ற உறுப்பினர்களும் களத்தில் உள்ளார்கள்.பணமும் தாரளமாக அள்ளி விசுகிறது, அதிகார தோரணையும் அசத்தலாக இருக்கு.சின்ன சின்ன இயக்கங்களை கெஞ்சி ,கூட்டு சேர்த்து உள்ளார்கள் .வழக்கபோல சினிமா நடிகர்களும் உண்டு.

எப்படி உள்ளது இவர்களுக்கான செல்வாக்கு , கிராமங்கள் கடுமையாக எதிர்ப்புகளை கட்டுகிறது , மேலும் நகர்புறம் அமைதியாக இருந்தாலும் வலுவாக வாக்குகள் கிடைக்குமா என்ற பயம் வந்து விட்டது அதிமுகவிற்கு .

சில இடங்களை அமைச்சர்கள் மக்களால் அசிங்க படுத்த யுள்ளார்கள் , பல இடங்களின் வம்பு சண்டை இழுக்க தொண்டர்களை ஏவியும் விடபட்டுள்ளது ,

வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு கேட்டும் ,ஓட்டு போடுவார்கள என தெரியவில்லை. பணமும் அதிகாரமும் மிஞ்சி இருக்கே தவிர அனுசரணை இல்லை .

மதிமுக 

ஏற்கனவே சொல்லிவிட்டோம் போட்டி அதிமுக - மதிமுக தான் என , இவர்களின் பக்கம் நெடுமாறனின் இயக்கமும் , தமிழருவி மணியன் இயக்கமும் , பெரியார் திராவிட கழகமும் , சில இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து பரப்புரை செய்கிறார்கள் ,

இவர்களின் பலமே பேச்சு தான் பல பேச்சாளர்களை களம் இறக்க பட்டுள்ளார்கள் , பல பேச்சுலர்களும் களம் இறங்கி உள்ளார்கள் , அது என்ன பேச்சுலர்கள் , அதான் இணைய தள நண்பர்கள் , தொகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள் மறுமலர்ச்சி கழகம் .

ஒரு பக்கம் வைகோ , ஒரு பக்கம் அவர்களின் கொள்கை பரப்பு சம்பத் , மறுபக்கம் இன்னும் சில பேச்சாளர்கள் , என நல்ல முறையில் விளக்கமாக விவரங்களை எடுத்து வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள் .

வைகோ இந்த தொகுதி காரர் என்பதால் அனைத்து மக்களும் எளிதாக அருகில் வந்து பேசுகிறார்கள் என்பது உண்மை .மக்கள் மாற்றம் கொண்டு வரவேண்டும் என இவர்கள் வைக்கும் துணுக்கு நல்லவே எடுபடுகிறது .

மற்றபடி தொண்டர்களுக்கு சரக்கு பிரியாணி சம்பளம் இது எதுவும் இல்லாமல் ஒரு பண்புள்ள பிரசார உத்திகளை கடைபிடிக்கிறார் . வெற்றி பெறுவார்களா என்றால் இன்னும் இவர்களின் உழைப்பை பொருத்து அமையும் . இறுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .

ஒரே ஒரு சிக்கல் இவர்களின் பிரச்சாரம் திமுக விற்கு சாதகமாக வாக்குகளை பெற்று தந்து விட கூடாது.

திமுக 

எதோ குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி , முன்னாள் அமைச்சர்கள் இன்னாள் ச.ம.உ கள் , வழக்கபோல சினிமா கவர்ச்சி , பண பலம்,மிரட்டல் போற்றவை துணை கொண்டு களத்தில் இருக்கு ,நோண்டி மாடு காங்கிரஸ் யும் , சமந்தமே இல்லாமல் வி சி க வும் கூட இருந்து தொல்லைகள் தான் அதிகம்.வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கிறார்.

இவர்களின் குறி அதிமுக அல்ல , மாறாக மதிமுக தான் என்பது நல்லாவே மக்களுக்கு தெரிந்து உள்ளது , இவர்களின் முன்னாள்கள் மக்களிடம் வாங்கி கட்டியது தான் மிச்சம் வேறு எந்த பலனும் இல்லை . கடைசி நேரத்தில் பணத்தை வீச்சி மனம் காக்க பாடு படுவார்கள் போல.

தேமுதிக 

விசயகாந்த் குடும்பத்தோட பிரசாரத்திற்கு கிளம்பி விட்டார்கள் , வழக்கம் போல காமெடி காட்சிகள் தான் நிறைந்து இருக்கும் , இவர்களும் திராணிய நிறுவிக்க அனைத்து ச ம உ களையும் இறக்கி விட்டார்கள் , என்ன பயன் யாருக்கும் தேக்க வடக்க தெரியவில்லை , இவர் அதிமுகவிற்கு தான் சாவல் விடுவார்கள் என பார்த்தால் பொது மக்களுக்கு கூட சவால் விடுகிறார் விசயகாந்த்.வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கிறார்.

     
மொத்தத்தில் ஆளும் கட்சி வெற்றியின் ஒரு பக்க கயிறை இழுத்து கொண்டும் , சொந்த தொகுதி கட்சி மறுபக்க கயிறை இழுத்து கொண்டும் இருந்தாலும் இன்றைய நிலையில் ஆளும் கட்சி பக்கம் வலுவாக இழுக்க படுகிறது ,
மக்கள் மாற்றம் விரும்பினால் கயிறு பம்பரத்தை சுற்றி விட்டு விடும் என தெரிகிறது , எல்லாம் வாக்களர்களின் கையில் இருக்கு ...

                                                                                                               தொடரும்.......................

No comments:

Post a Comment