Saturday, March 17, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

இடைத் தேர்தல் கடைசி கட்ட பிரசாரம் முடிந்தது , இனி வாக்கு பதிவும் எண்ணிக்கை மட்டுமே பாக்கி உள்ளது.

கலக்கல் கலிங்கப்பட்டி 

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராம தான் இந்த கலிங்கப்பட்டி , கூடுதல் தகவல் , மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிறந்த ஊரும் இதுதான் ,
பல நாள்களாக ஆளும் கட்சி அதிமுக தேர்தல் பணிக்குழு இந்த கிராமத்தில் தங்கி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுவந்தார்கள்.

பல நாள்களாக இந்த கிராம மக்களிடம் என்ன என்னமோ பேசி பார்த்தார்கள் , சினிமா நடிகர்களை கொண்டுவந்து காண்பித்தார்கள் , திமுக பெரும் தலைகள் , அதிமுக பெரும் தலைகள், தேமுதிக தலைவரும் மனைவி யும் வாக்கு சேகரித்து பார்த்தார்கள், இந்த கலிங்கப்பட்டி மக்கள் தீர்க்கமாக உள்ளூர் தலைவரான வைகோவின் மதிமுகவிற்கு வாக்கு என வாக்கு சேகரிக்கும் எதிர் அணியிடம் நேரடியாகவே சொல்லி விட்டார்கள் , இதை கேட்ட அதிமுக ஆளும் தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியோடு பணம் பட்டுவாடவை துவங்கியது .

கலிங்கபட்டியில் பணம் விநியோகம் செய்த அதிமுக நிர்வாகி 
பல முறை வாக்களர்களுக்கு பணம் கொடுத்தும் யாரும் வாங்குவதாக தெரியவில்லை ,நேற்று காலையில் ஒரு குடும்பத்தில் வலுகட்டாயமாக பணத்தை திணித்த அதிமுகவினரை காவல் துறையிடம் பிடித்து கொடுத்தார்கள் கலிங்கப்பட்டி கிராம வாசிகள் .அப்படியென்றால் கலக்கல் தானே . ஒரு அரசியல் கட்சி தலைவரின் ஊரிலே இவ்வளவு துணிந்து பணம் விநியோகம் செய்கிறார்கள் என்றால் தொகுதி முழுவதும் ??? திமுக திருமங்கலம் போர்முலவை மிஞ்சி விட்டது அதிமுக

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் 

சென்னை பல்லாவரம் அதிமுக வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் இடைத்தேர்தல் பணிக்காக இன்று கலிங்கப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளார் .

பண பட்டுவாட செய்த அதிமுக கூட்டத்தோடு பிடிபட்ட பொது இவரும் உடன் இருந்து இருக்கிறார் , மக்கள் இவர் மீது பய . அந்த மக்களுக்கு இவர் யார் என்றே தெரியாது ,இவர் வைகோவின் வீட்டை நோக்கி ஓட , அங்கு இருந்த வைகோ மக்களை சமாதான படித்தி தாக்குதலில் இருந்து இந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங்  அவர்களை காப்பாற்றி உள்ளார் , பின் காவல் துறை உதவியோடு இடத்தை களை செய்து விட்டார் , சமஉ

தாம்பரம் குபேர ஜெயசங்கர் 


யார் இந்த குபேர , இவர் யாருமில்லை கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் நகராட்சி மதிமுக வேட்பாளராக களம் இறக்க பட்டவர் , கடைசி நேரத்தில் பணத்துக்கு ஏமாந்து அதிமுகவில் இணைந்து விட்டார்,முன்னாள் மதிமுக காரர் , இவர் அமைச்சர் டி.கே.எம். சின்னையா வின் கீழ் இடைதேர்தல் பணிக்காக கலிங்கப்பட்டி கிராமத்தில் பண பட்டுவாடவில் ஈடுபட்டுள்ளார் , கிராம மக்களிடம் பிடிபட்ட இவரை கூட்டத்தில் சிலர் தாக்கிவிட , இவரும் வைகோவை நோக்கி ஒடி தஞ்சம் புகுந்து உள்ளார் , முன்னாள் தலைவர் என்ற பாசத்தில் தலைவரே என்னை உங்க ஊர் பொது மக்கள அடைத்து விட்டார்கள் என வைகோவிடம் முறை இட்ட இந்த குபேர வை ,வைகோ மக்களிடம் இருந்து காத்து உள்ளார்.

அதிமுக தேர்தல் பணியாளர்கள் 

கலிங்கப்பட்டி வாக்காளர் களிடம் பணம் விநியோகம் செய்த அதிமுக தேர்தல் பணியாளர்கள் நிர்வாகிகளை கண்டித்தும் ,காவல் துறையிடம் பிடித்து கொடுத்தும் பொது மக்கள் செய்வதை பார்த்த ஒருவர் பொது மக்கள் மீது ஒரு அதிமுக நிர்வாகி தனது வாகனம் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட மக்களின் கோபம் அதிகமாக .அத்திரம் அடைந்த பொது மக்கள் அதிமுக வினர் மீது தாக்குதலை ஆரமிக்க சிதறி ஓடிய அதிமுக நிர்வாகிகள் .

அதிமுக நிர்வாகி ஒருவர் பெரிய சாக்கடையில் மீது இருந்த சிறிய பாலத்திற்கு கீழ் ஒழிய முற்பட்டு சாக்காட்டில் புரண்டு எழுந்து ஓடி விட்டார் .

மற்றொருவர் தங்கி இருந்த இடத்தில் கழிவறையில் ஒழிய முற்பட பொது மக்களிடம் பிடி பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்க பட்டார்

இன்னும் ஒருவர் ஊர் பொது மக்களுக்கு பயந்து கிணற்றில் குதித்து விட்டார் , அவரையும் கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள்.

இன்னும் இரு அதிமுக நிர்வாகிகள் பணத்தோடு காட்டு வழியே ஓடு போனார்கள் , போனார்கள் வெறுமன போக வேண்டியது தானே ,காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம் பொய் , தங்கள் கையில் வைத்து இருந்த பணத்தை மறுபடியும் அவர்களிடம் கொடுத்து, இந்தாங்க அம்மா இதை வச்சிகொங்க ரெட்ட இலைக்கு ஓட்டு போடுங்க என கேட்க , அங்கு இருந்த பெண்கள் ஓன்று திரட்டு கையில் வைத்து இருந்த களைவெட்டிகளை காட்டி விரட்ட மீண்டும் ஓட்டம் பிடித்த அதிமுகவினர்.
மொத்தத்தில் கலிங்கப்பட்டி கலவர பூமியாக மாறிவிட்டது .

கோபால் சாமி 

இந்த கோபால்சாமி ,அதிமுகவை சார்ந்த ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,இவர்தான் இந்த கலிங்கப்பட்டி வட்டார இடைதேர்தல் பணி குழு விற்கு தலைமை இவர்தான் பொது மக்கள் மீது வாகனம் ஏற்ற முயற்சி செய்தவர் , ஆனால் இவர் தப்பித்து ஓடி விட இவரின் வாகன ஒட்டினர் மட்டும் மக்களிடம் மாட்டி கொண்டார் , தனது கட்சி தொண்டர்கள் , தன்னை நம்பி வந்த வெளியூர் கட்சி நிர்வாகிகளை நடு தெருவில் விட்டு விட்டு இவர் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார் ,வார பத்திரிக்கையில் இவரை பற்றி பெரிய நம்பிக்கையில் செய்தியெல்லாம் போட்டார்கள் வாக்கு சேகரித்து தருவார் என , பொது மக்களுக்கு பயந்து ஒட்டி விட்டார் இன்று .

தனது கட்சி தொண்டனுக்கே துணை போகத சட்டமன்ற உறுப்பினர் , தனது தொகுதியில் மக்களுக்கு எப்படி துணையாக இருப்பார் ???????

மக்களின் எழுச்சியில் மதிமுக வெல்லுமா ?

சங்கரன்கோவில் தொகுதி முழுவது மக்கள் பணத்திற்கும் , இலவசத்திற்கு மயங்க வில்லை , மக்களிடம் நல்ல ஒரு எழுச்சி தெரிகிறது , இந்த எழுச்சியில் மதிமுக வெல்லுமா வாக்குகளை அள்ளுமா என தெரியவில்லை ,

வாக்கு பதிவை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறலாம் , யார் வென்றாலும் பெரிய வாக்கு வித்தியாசம் ஓன்று இருக்காது போல தொகுதி நிலவரம் இருக்கிறது , ஆளும் கட்சி மீது பெரிய அதிருப்தி நிலவுகிறது , எந்த அளவிற்கு எதிர் அணிக்கு வாக்காக மாறும் என பொறுத்து இருந்து பார்ப்போம் , மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்கு அளித்தால் நிச்சியம் பம்பரம் கோட்டையில் சுற்றுவது உறுதி ...

                                                                                                         தொடரும்............................

4 comments:

  1. அட்சயா அவர்கள் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். தங்களது பதிவுகளை பெருமைப்படுத்தும் சிறு வாய்ப்பாக இதை கருதுகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொள்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி!http://vstamilan.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்ரமணியன் , வருக

      Delete
  2. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  3. நன்றி யாழ் மஞ்சு வருக

    ReplyDelete