Saturday, March 3, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-8


பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

விலை வாசி உயர்வு 

இந்த இடைதேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்து இருக்கிறது , அதே வேளையில் மக்களின் மனங்கள் புண்பட்டு இருக்கிறது என்பது உண்மை.

விலைவாசி உயர்வில் பால் விலை உயர்வு அதிக படி பாதிப்பை ஏற்படித்தி உள்ளது .அரசு காலத்தின் கட்டியம் விலை உயர்வு என சொல்லலாம் அதற்காக இந்த அளவ விலைகள் உயரும் , தனி மனித வருமானம் உயரவில்லை , ஆனால் விலை வாசி மட்டும் உயர்ந்து விடுகிறது.

பால் உற்பத்தி 

தமிழக மாநிலத்தில் மொத்த பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு - 158 லட்சம் லிட்டர் 

அரசு பொது துறை நிறுவனம் ஒரு நாள் பயன் படுத்தும் பால் - 20 லட்சம் லிட்டர் 

மீதம் எங்கே போகிறது தனியார் மூலம் தான் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கு வருகிறது , இந்த வகையில் ஒரு நாள் பயன் படுத்தும் பால் - 138 லட்சம் லிட்டர் 

இந்த விலை ஏற்றம் நேரடியாக அரசுக்கு எந்த அளவு பயன் பட போகிறது என்பதை விட தனியார்க்கு அதிக லாபம் 

அரசுக்கு இந்த விலையேற்றம் மூலம் வரபோகும் பங்கு -12.66 சதவீதம் 

தனியார் கைக்கு போகபோவது - 87.43 சதவீதம் 

அரசு ,பொது துறை நிர்வாகம் மென்படித்தி மாநில பால் உற்பத்தில் ஒரு 50 % கையாளும் அளவிற்கு முன்னேறினால் ,குறைந்த அளவு விலை ஏற்றினாலும் மிக பெரிய லாபம் அரசுக்கு கிடைக்கும் , அதை விட்டு விட்டு அரசு நிர்வாகத்தை சுருக்கிக் கொண்டு , ஒரே அடியாக பணம் பெருக்கும் வகையில் பால் விலையை உயர்த்துவது என்பது மக்களை பாதிக்கும் செயல் , தனியார் கொள்ளை லாபம் சம்பத்திக்க அரசு துணை போகிறது , இது தான் சிறந்த நிர்வாகமோ ?

பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றும் அரசு 

ஒரு பக்கம் பால் விலையை உயர்த்தி மக்களை வதைக்கும் அரசு ,மறுபக்கம் 
ஏழை , எளிய மக்கள் எதாவது மாடுகளை வைத்தாவது காலம் தள்ளலாம் என நினைக்கும் மக்களை ஏமாற்று கிறது அரசு 

பால் உற்பத்தியளர்களுக்கு அரசு அதிக படித்திய தொகை லிட்டருக்கு 2 ரூபாய் மட்டுமே .

பசும் பாலுக்கு - ரூ 18 இருந்து ரூ 20 யாகவும் 

எருமை பாலுக்கு - ரூ 26 இருந்து ரூ 28 யாகவும் 

உயர்த்தி உள்ளது அரசு, அதாவது உற்பத்தியாளர்களுக்கு விலையில் சராசரியாக 9 % உயர்த்தி உள்ளது.ஆனால் விற்பனை பால் விலையை 35 % உயர்த்தி உள்ளது , எப்படி ஏமாற்ற பட்டுள்ளார்கள் .

பால் விலை உயர்வு 

பால் விற்பனை விலையை அரசு அதிக படித்திய தொகை லிட்டருக்கு 6.25 ரூபாய் 

அரசு பொது துறை நிர்வாகம் ஒரு நாளைக்கு விற்பனை செய்யும் பால் - சுமார் 20 லட்சம் லிட்டர் 

பொது துறை நிறுவனம் பால் வாங்கும் கூடுதல் செலவு 

ஒரு நாளைக்கு -சுமார் ரூ 40 லட்சம் 

ஒரு மாதத்திற்கு -சுமார் ரூ 12 கோடி 

ஒரு வருடத்திற்கு -சுமார் ரூ 144 கோடி 


பால் விலை உயர்வால் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கு கூடுதல் வருவாய் 

ஒரு நாளைக்கு -சுமார் ரூ 1.25 கோடி 

ஒரு மாதத்திற்கு -சுமார் ரூ 37.5 கோடி 

ஒரு வருடத்திற்கு -சுமார் ரூ 450 கோடி 


ரூ 144 கோடி என்ற சின்ன மீனை போட்டு ரூ 450 கோடி பெரிய மீனை பிடித்து அதில் ரூ 306  கோடி லாப கணக்கில் சேர்த்து விடுகிறது , இதை தட்டி கேட்கும் மக்களுக்கு மாடுகள் இலவசம் என்ற பெயரில் வருடத்திற்கு ரூபாய் ரூ 56  கோடி வீச உள்ளது அரசு , இது தான் சிறந்த நிர்வாகமோ? இதற்கு சற்றும் குறைந்தது அல்ல முந்தைய அரசு , இந்த திமுக , அதிமுக அரசுகள் இரண்டும் இலவசம் என்னும் மாய ஜால வித்தை காட்டி மக்களின் நலனை பேணுவது இல்லை என்பது உண்மை .

சங்கரன்கோவில் மக்கள் இதற்கு சவுக்கடி தருவார்ளா ? மாற்றம் கொண்டுவருவார்களா ? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

                                                                                                             தொடரும்.......................

No comments:

Post a Comment