Thursday, February 23, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது , களத்தில் பணிகளை ஆரமித்து விட , ஆனால் பறக்கும் வேலைகள் நடக்கிறது தலைவர்கள் மத்தில் திட்டம் போடுவது , அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுவது என ஒருபக்கம் மொத்த தமிழக அரசியலும் சங்கரன்கோவில் நோக்கி போகிறது.

அதிமுக   

வேட்பாளர் பெயர் :- எஸ்.முத்துசெல்வி

படிப்பு :- பொறியியல் பட்டதாரி

தொழில் :- இல்லத்தரசி

அரசியல் பின்னணி :- சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகள்

மதிமுக 

வேட்பாளர் பெயர் :- டாக்டர் .சதன் திருமலை குமார்

படிப்பு :- மருத்துவம்

தொழில் :-மருத்துவர்

அரசியல் பின்னணி :- மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர். இவர் முன்னாள் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ

திமுக

வேட்பாளர் பெயர் :- ஜவஹர் சூரியகுமார்,

படிப்பு :- எம்.ஏ.பி.எல். பட்டம்

தொழில் :- வழக்கறிஞர்

அரசியல் பின்னணி :- முன்னாள் காங்கிரஸ் மத்திய மந்திரி அருணாசலத்தின் உறவினர் , சங்கரன்கோவில் நகர தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.

தேமுதிக

வேட்பாளர் பெயர் :- முத்துக்குமார்

படிப்பு :- பி.இ., எம்பிஏ பட்டப் படிப்பு

தொழில் :- சொந்த தொழில்

அரசியல் பின்னணி :- கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர்தேமுதிக மாவட்ட நிர்வாகி .


அதிமுக போடும் முத்தரப்பு கணக்கு 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் வேகத்தோடு அரசியல் முத்தரப்பு கணக்கு போட்டுள்ளது .

1.எதிர்கட்சிகளை ஓன்று சேர விடாமல் ஓட்டுக்களை பிரித்து சுலபமாக வெல்வது.இதனாலே சவால்கள் விட்டு வலுகட்டாயமாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது தேமுதிக , இவர் விட்ட சவால் விஜயகாந்துக்கு மட்டுமில்லை , மறைமுகமாக கருணாநிதிக்கும் தான்.

2.தேர்தல் முடிவை பொறுத்து புதிய கூட்டணி முயற்சி , இருந்த தேமுதிக கழட்டி விட பட்டது அவரின் அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதால்.தமிழக அளவில் மூன்றாவது அணி அமைத்து போட்டி போட்டு வென்று விட்டு , மத்தியில் யார் அதிக இடங்களை வெல்கிரார்களோ அவர்கள் உடன் பின் ஒப்பந்த அடிப்படையில் கூட்டு , பாஜக ,காங்கிரஸ் யாராக இருந்தாலும் சரி 

3. தேமுதிகவை களத்தில் இறக்கி விட்டுள்ளத்தால் , ஏற்கனவே மதிமுக களத்தில் ஆளும் கட்சிக்கு இணையாக பணியில் இருப்பதாலும் , திமுக நான்காம் இடத்துக்கு தள்ளவேண்டும் என்ற நோக்கமும்.

திமுக போடும் முத்தரப்பு கணக்கு 

1.தேமுதிக தன் பக்கம் கூட்டணிக்கு இழுத்து ,2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புது கூட்டணி என்ற நிலை உருவாக்குவது.

2.ஒருவேளை இந்த இடைதேர்தலில் தனது வேட்பாளரை திரும்ப பெற்று கொண்டு , தேமுதிகவை ஆதரித்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை .

3. இந்த இடைதேர்தலில் தோற்று போவோம் என தெரிந்தே திமுக களம் காணுகிறது , எதனால் தன்னிடம் இருந்து போன மதிமுக செல்வாக்கு பெற்றுற கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது , இதனாலும் தேமுதிகவை ஆதரிக்கும் நோக்கம் வலுபெற்று உள்ளது

மற்ற கட்சிகள் , இந்த இரண்டு பெரும் கட்சிகளை மீறி எப்படி இந்த தேர்தல் களத்தை பயன் படுத்த போகிறார்கள் , இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்து பெரிய அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் காத்து இருக்கிறது , அது சங்கரன்கோவில் தொகுதி மக்களின் கையில் இருக்கிறது. இலவசம் , பணம் இரண்டையும் மக்கள் வெறுத்து வாக்கு செலுத்தினால் , நிச்சயம் சங்கரன்கோவில் ஒரு மாற்றத்தில் ஆரம்பமாக கூட அமைய வாய்ப்புகள் அதிகமே ...

கூர் மழுங்கி போன அரிவாள்கள் , சத்தமில்லாத முரசு ,ஆனால் பம்பரத்தின் வேகம் அதிகமாகவே இருக்கிறது.

                                                                                                 தொடரும்................................

No comments:

Post a Comment