Sunday, February 5, 2012

தலைக்கனம் பிடித்தவர்கள்

பிரபலமான எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் , இவரை ஒருவர் மட்டம் தட்டவேண்டும் என நினைத்து உள்ளார் , அதிகம்  தலைக்கனம் பிடித்தவன் அவன்.

ஒருநாள் அலெக்ஸாண்டர் டூமாஸ் இடமே சென்று வாதிடுகிறான் 

தலைக்கனம் கொண்டவன் :- டூமாஸ் , உங்களின் மூதாதையரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ? அவர்கள் கீழ்த்தர வகுப்பை சேர்ந்தவர் தானே ?

டூமாஸ் :- ஆமாம் 

தலைக்கனம் கொண்டவன் :- உங்களின் தந்தை என்ன சாதி ?

டூமாஸ் :- மலை சாதியினர் 

தலைக்கனம் கொண்டவன் :- உங்களின் தாத்தா ?

டூமாஸ் :- நீக்ரோ 

தலைக்கனம் கொண்டவன் :- தாத்தாவுக்கு தாத்தா ?

இதுவரை பொறுமையாக இருந்த டூமாஸ் ,கொஞ்சம் கோபமாக " தாத்தாவுக்கு தாத்தா ஒரு வால் இல்லாத குரங்கு " ,ஆனால் ஓன்று என் வம்சம் தொடங்கிய இடத்தில் உங்களின் வம்சம் முடிந்துவிட்டது , அது தெரியுமா உங்களுக்கு என்றார் அலெக்ஸாண்டர் டூமாஸ் , 

தலைக்கனம் கொண்ட அந்த மனிதன் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து போனான் .


இந்த மாதிரி தலைகனம் பிடித்தவர்கள் புதிதாக தமிழகத்தில் இப்பொது கிளம்பி உள்ளனர் , அவர் தமிழர் இல்லை, இவர் தமிழர் இல்லை என்ற புதிய கோட்பாடுயுடன் , அனைவரின் ஆதி வரலாறு ஆராய கிளம்பி உள்ளனர் , இதனால் என்ன நன்மை ,தீமைகள் என்ன ? ,என்பதை யோசிப்பதில்லை , தாங்கள் சொல்லுவது தான் சரி என வாதியிடுகிறார்கள்.

No comments:

Post a Comment