Wednesday, February 15, 2012

நாம் யார் -10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

கதவபுரம் ( கபாடபுரம் )

கடல் விழுங்கியது போக மிச்சம் இருந்த குமரி கண்டம் , இன்றையா குமரி முனையில் இருந்து 500 மைல் தூரம் நிலப்பரப்பு மிச்சம் இருந்த பகுதிகளையும் இன்றைய மதுரை வரை உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளை பாண்டிய மன்னர்களின் ஆளுமையின் கீழ் வந்தது , இவர்களின் பழைய தலைநகரம்  குமரி கண்டத்தில் பஃறுளி யாற்றங்கரைமேலிருந்த மதுரை கடலில் மூழ்க , புதிய தலைநகரமாக குமரியாற்றின் கயவாயில் அமைத்தார்கள். கயவாய் என்பது ஆறு கடலொடுகலக்குமிடம்.

பாண்டியன் தலைநகர் கடல்வழியாகவருவோர்க்கு வாயில்போல் இருந்தமையால், கதவம்அல்லது கதவபுரம் என்று பெயர் பெற்றிருக்கலாம்.கபாடபுரம் என பெயர் பெற்றது.

சோழனுக்கு உறையூரும், சேரனுக்குத்திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கருவூரும் தலைநகராயிருந்தன. பாண்டியன் தலைநகர்,ஆட்சிக்கும் நீர்வாணிகத்திற்கும் ஒருங்கேபயன்பட்டது.  நெல்லை மதுரை முகவை மாவட்டங்களின் மேல்பகுதியும் கொங்குநாடும் வேம்பாய் (Bombay)மாநிலத்தின் மேல்பாகமும் சேரநாடா யிருந்தன.

ஈழமும் தமிழகமும் இணைந்த பகுதி 

இந்த காலகட்டத்தில் இந்தியா வுடன் இலங்கையும் இனிந்தே இருந்தது , குமரி முனைக்குத் தெற்கில் பழையகுமரிமலைத் தொடரின் பகுதியாகவோ தனியாகவோ ஒருமலை யிருந்த தென்றும், அதனின்றே குமரியாறுதோன்றிக் கிழக்கு நோக்கி யோடிய தென்றும்,குமரியாறும் பொருநையாறும் (இன்றைய தாமிரபரணி ஆறு )இலங்கையூடும் ஓடியது என்று குறிப்புகள் இருக்கிறது , 

இன்றும் இலங்கையில் ஈழ பகுதிகளில் தாமிரபரணி என்ற ஒரு ஆறு இருக்கிறது , தமிழகத்திலும் இருக்கிறது ,

அதே போல இங்கே இருக்கும் திருநெல்வேலி என்ற ஊர் பெயரும் , ஈழத்தில் அதே போல ஒரு ஊருக்கு திருநெல்வேலி என பெயரும் இருக்கிறது , இந்த ஒத்த அடிபடை போதாதா அவர்களும் நம்மவர்களே என்பதற்கு.

இடைக்கழகம் (இரண்டாம் கழகம் )

கதவபுரம் கட்டியமைக்கப்பட்ட பிறகு பல ஆண்டு சென்றபின் இரண்டாம் கழகம் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர் 59 என்றும், அக் கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் மன்னர்கள் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை மொத்தம் 59 மன்னர்கள் , கழகம் இருந்த காலம் 3700 ஆண்டுகள்

தலைக்கழக வரலாற்றிற்போன்றே, இதன் வரலாற்றிலும் பல செய்திகள்தள்ளது. கழக மிருந்தது மட்டும் உண்மையான செய்தியாகும். இடைக்கழக நூல்நிலையத்தில் இருந்தநூல்கள் 8,000 க்கு மேல் எண்ணிக்கையில் இருந்துள்ளது, செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் மாபெரும் பகுதியைக்கடல் கொண்டுவிட்டதனால், தலைக்கழகத்தில் 549 ஆக இருந்த புலவர் தொகை 59ஆகக் குறைந்து போனது.

போர் ஆரம்பம் 

சண்டை கள் என்றும் மண்ணுக்கும் , பொண்ணுக்கும் தான் வருகிறது போல , பல நூற்று ஆண்டுகள் ஒருவனின் ஆட்சியின் கீழ் இருந்த மக்கள் , பின் மூவேந்தரின் ஆட்சி க்கு கீழ் பிரிவு ஏற்பட்டது .இதன் பின் 

ஒரு வேந்தன் இன்னொரு வேந்தனுக்குப்பெண் கொடுக்க மறுத்தபோதும், ஒரு வேந்தன்கொடுங்கோலாட்சி செய்தால் , மற்றொரு செங்கோல்வேந்தன் அவனைத் திருத்தும்போதும் போர் நிகழ்ந்த்து .
                                                                                            தொடரும்...................................

No comments:

Post a Comment