Monday, March 19, 2012

நாம் யார் -31


பாகம்-30 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

ஊராளி

தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில்.

பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண   உட்பிரிவுகள் உண்டு.

பட்டம் - கவுண்டன்.

ஓதுவார்

தொழில் - சிவன் கோவிலில் பூசைசெய்தல்.

இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர்.

பட்டம் - ஓதுவார்.

கடசன்

தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல்.

பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள்.

பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன்.

கணக்கன்

தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல்.

பிரிவு - சீர், சரடு, கைகாட்டி,சோழியன் என்னும் நான்கு.

பட்டம் - பிள்ளை.

கணிகை (பெண்)

தொழில் - நாடக வரங்கிலும் கோவிலிலும் நடஞ்செய்தல்.

பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை.

கள்ளன்

பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் (பசுக்கூட்டங்களைக்களவில் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.

தொழில்-பண்டைநாளில் போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும் கல்வித் தொழிலும்.

பண்டை இடம் - சோழநாடு.

பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள்.

தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி

குலப் பட்டம்- நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன.

காராளன்

காராளர் உழுதுண்ணும் வேளாளர்.

சேலம் சேர்வராயன் (சேரவரையன்) மலையாளிகளுள் ஒரு சாரர் தம்மைக் காராளர் என்கிறார்கள்.

குசவன்

தொழில் - மட்கலம் வனைதல்.

பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை.

குடிமகன்

தொழில்- பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery).

பிரிவு - தீண்டுவான், தீண்டான்.

பட்டம் - பண்டிதன்.

குலப்பிள்ளை(சாதிப்பிள்ளை)

தொழில் - இரப்பு.

குலம்-  இரப்போன் , நோக்கன் ,கொங்கு வெள்ளாளன் ,முடவாண்டி, கைக்கோளன் ,பொன்னம்பலத்தான், பேரிச்செட்டி ,வீரமுட்டி

குறவன்

தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல்.

பெண்களின் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.

பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.

ஊர்க்குறவன் பிரிவு - தப்பை(மூங்கில்வேலை), கொங்கன், உப்பு.

பல அகமணப் பிரிவுகள்.

மலங்குறவன் பிரிவு - குன்றக் குறவன், பூங்குறவன் (வேலன்), காக்கைக் குறவன் (கக்கலன்), பாண்டிக் குறவன் (நாஞ்சில் குறவன்).

நாடோடிகள்-காளிக்கோட்டம் வரை பல்வேறு நாடு சென்று,அந்த அந்த  நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர்.

குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.

தலைவன் பட்டம்-பெரிய மனிதன்(மனுசன்), ஊராளி, பணிக்கன்.

குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.

குறும்பன்

தொழில் - குறும்பாடு மேய்ப்பு, முரட்டுக் கம்பளி நெசவு, தேனெடுப்பு முதலியன.

பிரிவு - காட்டுக் குறும்பு ,நாட்டுக்குறும்பு.

தேன்(ஜேன்) குறும்பு , பன்றிக் குறும்பு முதலியன உட்பிரிவுகள்.

பட்டம் - மூப்பன்.

கைக்கோளன்

பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுபகுதி தென் பகுதியும்).

செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).

கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.

கோலன் - கோளன். குழல்-கோல். கையில் செங்குந்தம் பிடித்திருந்த போர்ப்படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.

தொழில் - நெசவு.

பிரிவு (சில இடங்களில்) - சோழியன், இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவகவிருத்தி.

நாட்டுப்பிரிவு-72 நாடு.

வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிக்கையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் இப்போது நின்றுவிட்டது.

தலைவன் பட்டம் - பெரியதனக்காரன்,பட்டக்காரன், புள்ளிக்காரன்,

குலப்பட்டம் - அடவியார் , நயினார் , முதலியார் , மூப்பர்.

கொல்லன்

வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).

மரக்கொல்லன் - தச்சன்.

கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன்.

பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.

செப்புக் கொல்லன் - கன்னான்.

இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.

முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. முதல் காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலும் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்கலக்கன்னாரும் செப்புக் கன்னாருள் அடங்குவர்.

நாட்டுப்பிரிவு - பாண்டியம், சோழியம், கொங்கம் என்னும் மூன்று அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).

குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.

கோலியன்

தொழில் - நெசவு

பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும்.

பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல் அடைமொழி.

சவளக்காரன்

தொழில் - ஓடம் விடுதல், பயிர் விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல்.

பட்டம் - படையாட்சி (பயிர்த்தொழிலாளர்) , அண்ணாவி (இசைத்தொழிலாளர்).

சாயக்காரன்

தொழில் - சாயங் காய்ச்சுதல்.

சாலியன்

தொழில் - நெசவு.

பிரிவு - 24 புறமணவீடுகள்.

பட்டம் - அடவியார்.

சான்றான் (சாணான்)

பெயர்: சான்றோர் = போர்மறவர்.

சான்றோர்-சான்றார்

தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகம் செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல்.

பிரிவு - கருக்குமட்டையன், மேனாட்டான்,  கொடிக்கால், நட்டாத்தி, பிழுக்கை.

ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.

குலப்பட்டம்-நாடார்,  சேர்வைகாரன். முக்குந்தன்.

சிங்கன்

தொழில் - வேட்டையாடல்.

                                                                                           தொடரும் .................................

No comments:

Post a Comment