Wednesday, March 28, 2012

தமிழக அரசு நிதி நிலை அறிக்கை - 2012-13

தமிழக அரசின் நிதி நிலை பல்வேறு திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது , மேலும் முன்னவர்கள் என்ன செய்தார்களோ அதை அதான் இவர்களும் செய்து உள்ளார் கள் , இரு வேறு கட்சிகளாக ஆட்சி அதிகாரம் செய்தாலும் இலவச திட்டங்கள் என்பதை பொதுக் கொள்கையாக வைத்து செயல்படுவது நல்லவையாக இல்லை. முழுமையான நிதி நிலை அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்றால் குறைந்தது இருபது பதிவுகளாக எழுத வேண்டும் , அதற்கு பதிலாக சுருக்கமாக நிதி நிலை அறிக்கையின் நிதி நிலவர திட்ட அட்டவணை யை மட்டும் எடுத்து ,பழையவைகளை ஒப்பிட்டு எழுதுவோம் மக்களாக தெளிவு பெறாதவரை ஏமாற்ற பட்டு கொண்டேதான் இருப்பார்கள் .வரவு -செலவு என்பதை மட்டும் பார்க்க போகிறோம்

மாநிலத்தின் மொத்த வருவாய் 


மாநிலத்தின் மொத்த வருவாய் இரு பிரிவுகளின் கீழ் நிதி சேர்க்கிறது .

1 ) மாநிலத்தின் சொந்த வருவாய்
 
       a ) . மாநில வரிகள் மூலம் வரும் வருவாய்
       b ) . வரிகள் தவிர்த்த மற்ற வருவாய்

2 ) மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை
     
      a ) . மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் வரிகளில் இருந்து பங்கு .
      b ) . மத்திய அரசு தரும் மானியங்கள்

மேலும் ஒரு பிரிவு திட்டங்களுக்க கடன்கள் மூலம் பெறப்படும் நிதி .

மொத்த வருவாய் 

2012-13 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 1,00,589. 92 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 17.58 % அதிகம்

2011-12 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 82,552.85  கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 21.89 % அதிகம்

2010-11 ஆம் நிதி யாண்டு வருவாய் -70,187.62  கோடி
இது 2009-10 ஆம் நிதி யாண்டு விட 26.7 % அதிகம்

2009-10ஆம் நிதி யாண்டு வருவாய் -55,397.75  கோடி 

ஆண்டுக்கு ஆண்டு வருவாய் பெருக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு. 26.7%  யிலிருந்து 21.89 %  ஆக குறைவதற்கு திமுக அரசு போகும் ஆரமித்து விட்டு போக , சிறந்த நிர்வாகம் தருவோம் என சொல்லி வந்த அதிமுக அரசு முடிவில் வருவாயை இழந்து விட்டது , அதை விட அடுத்த ஆண்டுக்கு 21.89 %  யில் 17.58 % ஆக மதிப்பிடே செய்துள்ளார்கள் என்றால் வருவாய் இழப்பு சரி செய்ய வரிகள் ,விலை உயர்வை செய்தார்கள் , இது தான் சிறந்த நிர்வாகம் போல ...

மொத்த வருவாய் வளர்ச்சி குறைய காரணங்கள் என்ன , மாநிலத்தின் சொந்த வருவாய் பெரும் பகுதி வரிகளை நம்பியுள்ளது , இது முறையாக குறைந்து கொண்டே வந்துள்ளது

மாநிலத்தின் சொந்த வருவாய் பெருக்க என்ன செய்யா வேண்டும் வெறுமன வரிகளை உயர்த்தினால் போதுமா , வரிகள் உயர்வு மக்களை தான் பாதிக்கும் மாறாக உற்பத்தி திறனை அதிக படுத்த வேண்டும் , அதான் மூலம் வருவாய் உயரும் , நமது உற்பத்தியே விவசாயம் சார்ந்த உற்பத்தி அதை அதிகரிக்க வேண்டும் .

மேலும் மத்திய அரசியில் இருந்து கிடைக்கும் வருவாய் , வரி பங்கீடு , மானியம் என்பதே , மத்திய வரி அதிகமானால் நமது பங்கும் அதிகமும் இதற்கும் தீர்வு ஏனைய உற்பத்தியை பெருக்குவது தான் .

வருடத்திற்கு வருடம் அதிகமாக இருக்கு வேண்டிய மத்திய அரசின் மானிய தொகையின் அதிகபடுத்தால் 2010-11 யில் 24.04 % இருந்து 2011-12 யில் 7.65 % ஆக குறைந்து , இப்போது 2012-13 யில் 9.52 % ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

செலவுகள் 

செலவுகளை வட்டியில்ல செலவுகள் , கடன் திருப்பி தருதால் , கடன் களுக்கான வட்டி செலுத்து தால் என சொல்லபடுகிறது .

வட்டியில்ல செலவுகள் 

1. சம்பளங்கள் (கல்விக்கான மானியங்கள் உட்பட )

2.ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பலன்களும்

3.ஊதியம் அல்லாத செயல்பாடுகளும் பராமரிப்புகளும்

4.உதவித் தொகைகளும் நிதி மாற்றங்களும்

5.ஏனைய வருவாய்ச் செலவினங்கள்

6.மூலதன ஒதுக்கீடு

7.நிகரக் கடன் வழங்கல்

2012-13 ஆம் நிதியாண்டு திட்ட மதிப்பீடு - 1,09,476. 73 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 0.65 % குறைந்துள்ளது


2011-12 ஆம் நிதியாண்டு திட்ட மதிப்பீடு - 92,916.11  கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 11.03 % குறைந்துள்ளது


2010-11 ஆம் நிதி யாண்டு வருவாய் -78,425.80  கோடி

ஆண்டுக்கு ஆண்டு செலவுகளை சதவீத அடிப்படையில் தமிழக அரசு. குறைத்து கொண்டு வரவேண்டிய நிலை 11.03 %  குறைந்து இருந்தது அடுத்த ஆண்டும் இன்னும் குறைய வேண்டும் ஆனால் 0.65 %  குறைக்க  திட்டம் மதிப்பீடு செய்தது தான் சிறந்த நிர்வாகம் தருவோம் என சொல்லி வந்த அதிமுக அரசு .

எப்படி செலவுகளை குறைப்பது , ஆடம்பரம் இல்லை என சொன்னலும் முதல்வரின் விமான பயணம் என்பதை தவிர்க்க வேண்டும் .

வட்டி சொலுத்துதல்

2012-13 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 10,945.31 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 18.54 % அதிகம்

2011-12 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 9,233.40 கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 9.81 % அதிகம்

2010-11 ஆம் நிதி யாண்டு வட்டி செலுத்தியது -8,408.45  கோடி
இது 2009-10 ஆம் நிதி யாண்டு விட 26.48 % அதிகம்

2009-10ஆம் நிதி யாண்டு   வட்டி செலுத்தியது -6,648.06 கோடி

வட்டியும் கடனும் வருட வருடம் அதிகமாக செலுத்த வேண்டிய நிலையில் குறைத்து கொண்டே வந்ததுள்ளது .

தொலை நோக்கு திட்டம் 2023 

இந்த திட்டத்தின் அடிப்படையில் தனி நபர் வருமானம் பத்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிக்க போவத சொல்லிருக்கிறார் , அதாவது 600 % பத்து ஆண்டுகளுக்கு என்றால் ஒரு ஆண்டுக்கு 60 % உயர்த்த படவேண்டும் , இந்த ஆண்டு முடிவில் பார்ப்போம் 60 % உயர்கிறத என . தனி நபர் வளர்ச்சி 60 % சத்தியமா என சிந்தித்து திட்டங்கள் போட்டார்களா , இல்லை வெறுமன அறிவிப்பு செய்தால் போதும் என நினைத்து விட்டார்கள் போல .

சங்கரன்கோவிலுக்கு அல்வா 


நிதி நிலை அறிக்கையில் ஆரம்பத்தில் சங்கரன்கோவில் வெற்றியே புகழ்ந்து உள்ளார்கள், அந்த மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமா , அந்த தொகுதியில் ஒரு அரசு கல்லூரி இல்லை என்பதை நிறைவேற்ற முனைய வில்லை , 68, 000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு அல்வா தான் , தொகுதி நெல்லை மாவட்டம் தானே .

கல்லூரி வந்தால் படித்து விவரம் வந்து விட்டால் மறுபடியும் ஓட்டு வித்தியாசம் அதிகமாக கிடைக்காது என்பது உணர்ந்தவர்கள் போல , மக்களுக்கு எப்போது இது புரிய போகுதோ ....

No comments:

Post a Comment