Saturday, December 31, 2011

முல்லை பெரியாறு- பாகம் 18

பாகம்-17  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


தண்ணீருக்காக தருமயுத்தம் 
==================================
2009 ஆம் ஆண்டு

நவம்பர் 29 & 30 ,இரு தினங்கள் முல்லை பெரியாறு அணை குறித்து மதுரை மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

நவம்பர் 1&2 , இரு தினங்கள் முல்லை பெரியாறு அணை குறித்து சிவகங்கை மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

நவம்பர் 3, அன்று முல்லை பெரியாறு அணை குறித்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

நவம்பர் 4,5 &6 , மூன்று தினங்கள் முல்லை பெரியாறு அணை குறித்து தேனி மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

என தொடர் பிரச்சாரம் செய்கிறார் மதிமுக - வைகோ.

2009 ஆம் ஆண்டு

டிசம்பர் 18 முதல் 21 வரை  ,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை மாவட்டத்தில் இருந்து  நடை பயணத்தைத் தொடங்கு, 600 மேற்பட்ட கிராமங்களில் கடந்து விழிப்புணர்வு பிரச்சாரம் ,கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும்.

2009 ஆம் ஆண்டு

டிசம்பர் 22 , அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கம்பத்தில் விளக்க கூட்டம்.

இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 29 கூடலூரில் கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கம்பத்தில் விளக்க கூட்டம். என பயணிக்கிறது மதிமுக -வைகோவின் பயணம்.

2010 ஆம் ஆண்டு

சனவரி 28, அன்று தேனியில் மக்களை எழுச்சி பெற செய்வோம் , கேரளா அரசி கண்டித்தும் ,ஒரு கண்டன ஆர்பாட்டத்தை நடத்து கிறார் மதிமுக -வைகோ

2010 ஆம் ஆண்டு

பிப்ரவரி 2,கேரள அரசு முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த அணையின் பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் முன்பு வாதிகிறார்.

என்ன ஒரு வாதம் என பாருங்கள் ,சிறு ஓட்டை கிடைத்தாலே போதும் வழக்கை திசை திருப்பி விடுவார்கள் எவ்வளவு பெரிய வாய்ப்பை தந்து விட்டது தமிழகம், எவனாவது அவன் பணத்தை நமக்கு செலவு செய்வன.

2010 ஆம் ஆண்டு

பிப்ரவரி 9,வழக்கில் தமிழக அரசின் போக்கை கண்டித்தும், மக்களை எழுச்சி பெற செய்வோம்,மதுரையில் ஒரு கண்டன ஆர்பாட்டத்தை நடத்து கிறார் மதிமுக -வைகோ.

2010 ஆம் ஆண்டு

பிப்ரவரி 18,முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி .எஸ்.ஆனந்த் தலைமையில் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதில் மத்திய அரசை சேர்ந்த 2 நிபுணர்களும், தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு நிபுணர்களும் இந்த குழுவில் இடம் பெறுவர்.

எந்தனை ஏற்கனவே இரு முறை ஆய்வு செய்தும் ,மறுபடியும் ஓரு ஆய்வு குழு ,

2010 ஆம் ஆண்டு

மார்ச் 22,ஊட்டியில் , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கம்பத்தில் விளக்க கூட்டம். போடுகிறார் வைகோ.

2010 ஆம் ஆண்டு

ஏப்ரல் 20,முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக வாழ் வாதாரங்களை காக்கவே, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும், ஓரவஞ்சகமாக செயல்படும் மத்திய அரசாங்கத்தை கண்டிக்கவும், மே 28ம் தேதி நடத்த இருக்கும் கேரளம் செல்லும் அனைத்து சாலைகள் முற்றுகைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள் வைக்கிறார்  வைகோ.

நாம் அப்போது இதெல்லாம் அரசியல் என ஏளனம் பேசினோம் , இப்போது தெரிகிறதா அதன் அவசியம் என்ன என்று. உண்மையில் பிரச்சனையின் ஆழத்தை மக்களுக்கு செல்வதே அரசியல் தான்.

2010 ஆம் ஆண்டு

ஏப்ரல் 24,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கரூரில் விளக்க கூட்டம்.
  
மே 3,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து மதுரையில் விளக்க கூட்டம்.
  
மே 4,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து பரமகுடி  விளக்க கூட்டம்.

மே 5,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து திண்டுக்கல் விளக்க கூட்டம்.

என பல இடங்களில் மக்களை தயார் செய்கிறார் வைகோ

2010 ஆம் ஆண்டு

மே 28, தண்ணீருக்காக தருமயுத்தம் நடத்தியே தீருவேன் என முடிவு செய்து ,பல இயக்கங்களை சேர்த்து கொண்டு மதிமுக ,கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் செய்தார் வைகோ ,

இந்த போராட்டத்தில் ஒரு சிறிய பிரச்சனையும் நடக்காமல் நடத்தி காட்டினார், இதை திமுக கட்சி பத்திரிக்கை யான முரசொலி யில் பாராட்டி செய்தி வெளி இட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



                                                தொடரும்.............................

No comments:

Post a Comment