Saturday, December 10, 2011

முல்லை பெரியாறு- பாகம் 4

முல்லை பெரியாறு-தமிழகம் பக்கம் 
===============================
பாகம் மூன்று  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும்  ,இதுவரை கேரளாவின் பக்கம் பார்த்தோம் , இனி  தமிழகம் பக்கம் பார்ப்போம் 




மேலே உள்ள படத்தில் உள்ளது போல ,தேக்கடி நீர்த்தேக்கத்தில் முல்லை பெரியாறு அணையின் மூலம் தேக்கப்படும் நீர் கால்வாய் வழியாக கிழக்கு நோக்கி மலைகளின் நடுவே எடுத்து செல்லப்பட்டு ,  தேக்கடி ஷட்டருக்கு வருகிறது 


இந்த தேக்கடி ஷட்டார் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2905  அடி உயரத்தில் உள்ளது 


அணைக்கட்டில் இருந்து கால்வாய் வழியாக வரும் நீரின் தூரம் சுமார் 2325  மீட்டர் 



தேக்கடி ஷட்டார் பிறகு மலை குகை வழியாக தமிழக எல்லையிலுள்ள போர்பே (Forbay ) அணைக்கு நீர் வந்து சேர்க்கிறது 


போர்பே அணை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2886 அடி உயரத்தில் உள்ளது 


தேக்கடி ஷட்டார் இருந்து போர்பே அணை வரையுள்ள  மலைகுகையின் நீளம்  சுமார் 1980 மீட்டர்  





மேலேலுள்ள படம் , போர்பே அணையிலிருந்து ஒரு பகுதி தண்ணீர் பிரிந்து , சுருளி நீர்விழ்ச்சியில் சேரும் இடம் இது தமிழக எல்லையில் முல்லையாறு பள்ளத்தாக்கை அடையும் இடம் , மேலும் மற்றொரு பிரிவாக நீர் குழாய் மூலம்  மின் உற்பத்திற்க்காக எடுத்து செல்லபடிகிறது


சுருளி நீர் விழ்ச்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2610அடி உயரத்தில் உள்ளது 


போர்பே அணை இருந்து சுருளி நீர் விழ்ச்சி வரையுள்ள தூரம் சுமார் 735  மீட்டர் 



மேலே உள்ள படம் பெரியாறு  மின் உற்பத்தி நிலையம் ,குழாய் மூலம் நீர் எடுத்து வரப்படுகிறது 


நீர் வரும் குழாய்களின் மொத்த நீளம் சுமார் -855 மீட்டர் 


நீர் வரும் குழாய்களின் உயர வித்தியாசம் சுமார் -300 மீட்டர் 


மின் நிலையம்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1650  அடி உயரத்தில் உள்ளது 


இந்த மின் நிலையத்தின் உற்பத்தி திறன் 140  மெகா வாட் 


மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீரும் சுருளி அணையில் , மின் நிலையத்தை தாண்டி இணைந்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்கிறது 


இதுவரை மலை உச்சியிலும் , மலை நடுவேயும் பயணித்த முல்லையாறு லோவேர் கேம்ப் யின் வடக்கு பக்கம்  யில் சமவெளி பகுதியை அடைகிறது 


                                                                                                      தொடரும்.....................................

No comments:

Post a Comment