Saturday, December 31, 2011

முல்லை பெரியாறு- பாகம் 19

பாகம்-18 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


போராடுபவர்களை கவுரவிக்கும் ஒரு பதிவு.


போராளி வாழ்க்கை 

                
முல்லை பெரியாறு போராட்டத்தில் இன்றைய மக்களின் விழிப்புணர்வுக்கு பெரிதும் பாடுபட்டவர்கள் ,வரிசை படித்தினால் முதலில் வருபவர் கம்பம் . கே.எம்.அப்பாஸ் அவர்கள் ,அவரை பற்றிய சிறிய குறிப்புகளை தரவே இந்த பதிவு

முல்லை பெரியாறு போராட்டத்தில் வைகோ , பழ.நெடுமாறன் , இன்னும்  பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடினாலும் , கே.எம்.அப்பாஸ் அவர்கள் ஆரம்பம் முதல் போராடிவரும் ஒரு போராளி என சொல்லாம் , இன்றும் இவர் முல்லை பெரியாறு பிரச்சனைக்கு எந்த அமைப்பு கூப்பிட்டாலும் ஒருகினைத்து போராடிவருகிறார்

கே.எம்.அப்பாஸ் அவர்கள் ,மதிமுக இயக்கம் நடத்திய  பல போராட்டங்களும் பங்கெடுத்தவர் ,எந்த கட்சியை யும் சாராத பொதுநலவாதி

77  வயதாகும் அப்பாஸ் அவர்கள் , கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக முல்லை பெரியாறு அணைக்காக போராடி வருகிறார்.

இவர்தான் முல்லை பெரியாறுக்கு நீதி கேட்டு ,முதலில் நீதிமன்றத்திற்கு போனார்.

முல்லை பெரியாறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ்

பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தனிமனிதராக நின்று குரல் கொடுத்து வருபவர் இவர்.

2006 ஆண்டுக்கு பிறகு பல அமைப்புகளோடு சேர்ந்தே போரட்ட ஆரமித்தார் , குறிப்பாக மதிமுக , பழ.நெடுமாறன் அவர்களின் அமைப்பு.

அரசியல் கட்சி , ஆளும் கட்சி , எதிர்கட்சி எதுவும் செய்யாத நிலையில் , முதலில் இவர் தலைமையிலான 48 விவசாயிகள்தான் பிரதமரைச் சந்தித்து முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து பேசினார்கள்.

முல்லை பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஒரு சி.டி-யை கேரளா அரசு வெளியிட்டது, இதற்கு நீதிமன்ற மூலம் தடை வாங்கியவர் இவர்தான்

இப்போது டேம்-999  படத்திற்கும் தடை கேட்டு நீதிமன்ற சென்றவர் இவர்தான் .

 எழுதிய புத்தகங்கள்

முல்லை பெரியாறு அணை உருவான வரலாறு குறித்து இவர் பல அறிய தகவல்களோடு புத்தகம் எழுதியுள்ளார், இதில் அணைக்காக தமிழர்களும் ஆங்கிலேய பிரதிநிதிகளும் (பென்னி குக் போன்றவர்கள்) பட்ட சிரமங்கள் , உயிர் இழப்புகள் போற்றவற்றை அறிய தந்துள்ளார்
  
பெரியார் அணை - சில உண்மைகள் என்ற புத்தகத்தை 2000 ஆண்டு ஒரு புத்தகத்தையும்

முல்லைப்பெரியாறு சில உண்மைகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழாக்கம் என்ற புத்தகத்தை 2000 ஆண்டு ஒரு புத்தகத்தையும்

எழுதி வெளியிட்டுள்ளார் கே.எம்.அப்பாஸ் அவர்கள்

குடும்பத்திலும் முல்லை பெரியாறு

இவர் முல்லை பெரியாறு அணையை எவ்வளவு நேசிக்கிறார் , அதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என சுருக்கமாக சொல்லிவிடலாம் , ஆனால் தனது வருங்கால சந்ததிகளும் இதை பற்றி பேசும் வகையில் செயல்பட்டுள்ளார்.

முல்லை பெரியாறு முதல் ஆய்வில் ஈடுபட்ட பெறியாளர் பெயர் ரியாஸ்

கே.எம்.அப்பாஸ் அவர்களின் இரண்டாவது மகன் பெயர் ரியாஸ்

அணை கட்டுமான வேளைகளில் தன்னை ஈடுபடித்தி கொண்ட மற்றொரு ஆங்கிலேயர் பெயர் சுவிப்

கே.எம்.அப்பாஸ் அவர்களின் பேரன் பெயர் சுவிப்

முல்லை பெரியாறு பணியில் ஈடுபட்ட ஆங்கிலேய மாவட்ட ஆட்சி தலைவர் பெயர் பெரிஷ்

கே.எம்.அப்பாஸ் அவர்களின் தங்கை மகன் பெயர் பெரிஷ்.
  
இந்த மாதிரி தன் நலம் பார்க்க போராடியவர்களின் போராட்டம் வீண் போகலாம , போகாது , நாமும் இந்த போராட்டத்திற்கும் துணை இருப்போம் ,

கே,எம்.அப்பாஸ் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, இளையவர்களுக்கு தெரியாத பல விசயங்களை எடுத்து சொல்ல , அவருக்கும் நல்ல உடல் தந்து வாழவைக்க இறைவனை-இயற்கையை மக்களாட்சியும் அதன் வாசகர்களும் வேண்டி கொள்வோமாக 
                                                                                                             தொடரும்..........................                            

1 comment:

  1. RMY பாட்சா அவர்களுக்கு ,இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete