Tuesday, December 13, 2011

முல்லை பெரியாறு- பாகம் 6

முல்லை பெரியாறு-உருவாக்கம் 
==============================


பாகம் ஐந்து  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,


இதுவரை முல்லை பெரியாறு இரு மாநிலங்கள் பயணிக்கும் விவரங்களை பார்த்தோம் , இப்போது நதியின் விவரங்களை பார்ப்போம் ,


முல்லை பெரியாறு , முல்லை என்றால் ஐந்து வகை நிலங்களில் ஒரு வகையான , காடும் காடுசார்ந்த பகுதி ஆகும் , எனவே காட்டு பகுதிகளில்  உருவாகும் ஆற்றை  முல்லை ஆறு  என பெயர் பெற்று இருக்கலாம் , சரி பெரியாறு என என் வந்தது , முல்லை ஆற்றோடு , இன்னும் சில ஆறுகளை சேர்த்து கொண்டும் மேற்கு நோக்கி பெரிய ஆறு வாக   பயணிக்கிறது , எனவே இது முல்லை பெரியாறு 


மேலே உள்ள படம் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான , தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி மலை தொடர் இந்த மலை தொடரில் தான் முல்லை யாரு உற்பத்தி ஆகிறது 





ஒவ்வொரு மலை உச்சியில்  உருவாகும் நீர் ஓடை பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து முல்லை ஆறாக பாய்கிறது , மேல் உள்ள படம் ஒரு மலை உச்சியிலிருந்து வரும் நீர் முல்லை ஆருடன் இணையும் இடம் 


மேலே உள்ள படம் மற்றொரு மலை உச்சியில் உருவாகும் நீரோடை முல்லை ஆற்றில் இணையும் இடம் , இது போல பல இடங்களின் பல மலை உச்சியில் உருவாகும் நீரோடை மேற்கு பக்கமாக சரிந்து முல்லை ஆறாக இணைந்து வடக்கு நோக்கி பயணிக்கிறது 


ஏன் மேற்கு பக்கம் மட்டும் மலை உச்சியில் நீர் உற்பத்தி ஆகிறது ,
இயற்கை தந்த கொடை என சொல்லலாம் , இந்த மலை தொடர் அரபிக்கடலில் அருகே உள்ளதால் , கடலில் இருந்து வெளி படும் நீராவியை தடுத்து மழை பொழிவை ஏற்படுத்த எதுவாக உள்ளது , இந்த மலை தொடருக்கு கிழக்கே உள்ள பகுதிகளில் மழை பொழிவு குறைவு 


இவ்வாறு சிவகிரி மலை தொடரில் உருவாகும் முல்லை நதி , பெரியாறு நீர் தேக்கத்தை வந்து சேர்க்கிறது , சிவகிரி மலை தொடர் மேலும் சில மலை தொடர்களில் நதி உருவாகும் தூரம் சுமார் 47 ,030  மீட்டர் , இந்த நீர் தேக்கத்தில் இருந்துதான் தமிழகத்திற்கு ஒரு பகுதி நீரும் , கேரளாவிற்கு பெரும் பகுதி நீரும் பயணிக்கிறது 


                                                                                                           தொடரும் -------------------------

No comments:

Post a Comment