Thursday, December 1, 2011

திராவிட முன்னேற்றக் கழகம் -3

திராவிட முன்னேற்றக் கழகம்


1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார்


1993 அக்.11-ல் தி.மு..வில் ஏற்பட்ட மூன்றாவது பிளவு  , கருணாநிதி தலைவர் ஆனபிறகு இரண்டவது பிளவு , திமுகவின் பாராளுமற்ற மாநிலங்கள் உறுப்பினராக இருந்த வைகோ ( அந்நாளில் வை. கோபால்சாமி ) யை எந்த புலிகளை காரணம்காட்டி மத்திய அரசு திமுக ஆட்சியை பதிவி நீக்கம் செய்த்தோ , அதே புலிகளை காரணம் கட்டி நீக்கப்பட்டார்


 1995-ல் விடுதலை புலிகள் மீது பழி சுமைத்தினாலும், தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது

1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில்  , காங்கிரஸ் யிலிருந்து ,பிரிந்து மூப்பானரின்  தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டனியுடனும் , நடிகர் ரஜினிகாந்த்யின் ஆதரயோடும் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது

இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்களின் அமோக ஆதரவை பெருக்கி கொள்ள முயன்றது திமுக


1996-ல் மத்தியில் உருவான  ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 6 இடங்களை திமுக பெற்றது

1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடனும் , இவர்களால் வெளியற்ற பட்ட வைகோவின் தலைமையிலான மதிமுகயுடனும் கூட்டணி அமைத்து  18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது , பாஜக தலைமையில் மத்திய அரசில் அமைச்சர்களையும் பெற்றது

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்,திமுக, மதிமுகவை வெளியேற்றி விட்டு  , பாரதீய ஜனதா, பல சாதிகட்சிகளை கூட்டணி சேர்த்து கொண்டு  தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது ,

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பொடா சட்டத்தில் கைதி ஆகி சிறையிலிருந்த வைகோவை மீண்டும் தன்னுடன் கூட்டணியில் இணைத்து கொண்டு, மேலும் பாமக , இடதுசாரிகளையும் சேர்த்து  , பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் யுடன் கூட்டணி அமைத்த்து
இந்த முறை போட்டியிட்ட அனைத்து இடங்களையும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது , மத்திய அரசில் கருணாநிதி முக்கிய பங்கு பெற்றார்,

2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, இந்தமுறையும் மதிமுக வெளியேறியது , மற்ற கட்சிகளான காங்கிரஸ் , பாமக , இடதுசாரிகளையும் , பல இலவச திட்ட அறிக்கையோடு   போட்டியிட்ட திமுக , பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கூட்டணி , சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெருமான்மை பெற முடியாமல் , கூட்டணி அமைச்சரவை அமைக்க முடியாமல் ஒரு திரதன்மை அற்ற அரசாக ஐந்து ஆண்டுகாலம் காலத்தை ஒட்டியது திமுக , இந்த ஆட்சி காலத்தில் நடந்த இடைதேர்தலில் ஓட்டுக்கு பணம் என்ற புதிய கலாசாரத்தை புகுத்தியது


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்த முறை பாமக யும் , இடது சாரிகளும் வெளியேறி விட்டனர் , வெறும் காங்கிரஸ் துனையோடு களம்கண்ட திமுக , இந்த கட்டத்தில் ஈழ பிரச்சனை உச்சத்தில் இருந்தால் , மிக பெரிய வெற்றி பெற முடியாது என இருந்த நேரத்தில் ஓட்டுக்கு பணம் என்ற மாயையால் மீண்டும் இந்த கூட்டணி வென்றது

இதற்கு பிறகு மிக பெரிய குற்ற சாட்டுகளுக்கு ஆளானது திமுக காங்கிரஸ் கூட்டணி , குறிப்பாக அலைக்கற்றை ஊழலும் , ஈழ பிரச்சனையில் மெத்தனபோக்கும் ,குடும்ப அரசியலும்

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் யுடனும் , பாராளுமன்ற தேர்தலில் வெளியில் போன பாமக மீண்டும் கூட்டணியில் வந்த ,திமுக போட்டி போட்டது இந்தமுறை படுதோல்வியை தழுவியது கூட்டணியும் , திமுகவும் எதிர்கட்சி வாய்ப்பையும் இழந்த்து ,

மூன்றாவது அத்தியாயத்தில் திமுக பலத்த தோல்விகளையும் , வெற்றிகளையும் பெற்றாலும் நடப்பு அரசியலில் சரியான இடமில்லை , இனி வரும் காலங்களில் மீண்டு எழுமா , நடப்பு அரசியல் நிகழ்வுகளை பற்றி எழுதும் பொது பார்ப்போம் ,

நான்காம் அத்தியாயத்தை தொடங்குமா  திமுக ????????



No comments:

Post a Comment